சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

ரிக்ரொக்கில் வன்முறை 8 பேர் கைது

ரிக்ரொக்கில் வன்முறை 8 பேர் கைது

கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடும் காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத்தலைவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி அதன் காணொளியை ரிக்ரொக் செயலில் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த 8 பேரே கடந்த 10 நாள்களாக தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று இரவு (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸை சார்ந்த பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

வைத்தியரை தாக்கிய சந்தேக நபர் கைது

வைத்தியரை தாக்கிய சந்தேக நபர் கைது

குருநாகல் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ளை பிரதேசத்தில் காரில் பயணித்த சந்தேக நபர் குருநாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பயணித்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி குருநாகல் வைத்தியசாலையின் வார்டு இலக்கம் 72 இல் கடமையாற்றும் பெண் வைத்தியர் மற்றும் ஆண் வைத்தியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இச்சம்பவத்தின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்யுமாறு கோரி குருநாகல் வைத்தியசாலை வைத்தியர்கள் நேற்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Error: View 9293b2au4w may not exist
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழ். தையிட்டியில் இருவர் கைது

யாழ். தையிட்டியில் இருவர் கைது

யாழ்ப்பாணம், தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று திகாலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரை பார்க்க சென்றவர்களில் இருவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இருவரும் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை பொலிஸார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் இளைஞன் கைது

6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் இளைஞன் கைது

வவுனியாவில் 6 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகின்றார். தந்தை இல்லை. வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் மாதாந்த கொடுப்பனவின் அடிப்படையில் குறித்த சிறுமி தங்கி இருந்துள்ளார்.

குறித்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இருந்து அசாதாரண இரத்தப்போக்கை அவதானித்த வைத்தியர்கள் பூவரசன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீடடில் தங்கியிருந்த இளைஞரை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

புதையல் தோண்டச் சென்ற பொலிஸ் பரிசோதகர் கைது

புதையல் தோண்டச் சென்ற பொலிஸ் பரிசோதகர் கைது

கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டச் சென்ற பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மிரிஹான பிரதான பொலிஸ் பரிசோதகர் என தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய மௌலவி கைது

வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய மௌலவி கைது

அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல கிராமங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக பொய்யான தகவலை வழங்கிய நபரை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அவசர இலக்கமான 118க்கு தொடர்பு கொண்டு, அக்குரணையில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என நபர் ஒருவர் தகவல் கொடுத்துள்ளார்.

தான் மாவனெல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதன்படி செயற்பட்ட பொலிஸார் இராணுவத்தினரின் ஆதரவுடன் அக்குரணை நகரின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய மௌலவி கைது

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 19ஆம் திகதி மற்றுமொரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தான் ஹல்துமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் என தகவல் வழங்கிய நபர் தெரிவித்துள்ளார்.

தகவல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தகவல் வழங்கியவர்களின் இலக்கங்களைச் சரிபார்த்ததில், இரண்டு இலக்கங்களும் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

மேலும், தகவல் அளித்தவர்கள் கொடுத்த முகவரிகளை சரிபார்த்தபோது, ​​அந்த வீடுகளில் அப்படி யாரும் இல்லை என்பது உறுதியானது.

அதன்படி, தகவல் அளிக்கப்பட்ட கணினி அமைப்பின் தகவல்களை ஆய்வு செய்ததில், இந்த தகவல் ஒரே நபரால் அளிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

ஹாரிஸ்பத்துவ – பட்டுகொட பிரதேசத்தில் இருந்து இந்த அழைப்பு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதன்படி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையை அடுத்து, ஹாரிஸ்பத்துவ – பட்டகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த போது, ​​கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்தத் தகவலை வழங்கிய நபர் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

21 வயதான இசதீன் மொஹமட் சஜித் என்ற சந்தேக நபர் மௌலவியாக பணிபுரிபவர் என தெரிவிக்கப்படுகிறது.

அவரது கைப்பேசியைள சரிபார்த்ததில் சம்பந்தப்பட்ட அழைப்புகள் வந்திருப்பது உறுதியானது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளின் போது, ​​வேறொருவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அழைப்புகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பிழையான தகவலை வழங்கிய நபர் கைது

பிழையான தகவலை வழங்கிய நபர் கைது

அக்குரன பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என 118 என்ற அவசர இலக்கத்திற்கு தவறான தகவலை வழங்கிய சந்தேக நபர் ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (22) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 18 ஆம் திகதி இரவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் 118 என்ற அவசர இலக்கத்திற்கு அக்குறன நகரில் ஏதாவது நாசவேலைகள் இடம்பெறும் என தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அதன்படி, பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததுடன், பல விசேட பொலிஸ் குழுக்களை அந்தப் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட தகவல் தவறானது என பின்னர் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

மூழ்கிய அகதிகள் படகு 73 பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி 12 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடி 12 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மாமுனை மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளுக்கு அப்பாலுள்ள கடற்பிராந்தியங்களில் நேற்றும் (17) நேற்று முன்தினமும் (16) முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக இரவு ​வேளையில் சுழியோடியமை மற்றும் தடை செய்யப்பட்ட முறையில் மீன்பிடித்த 12 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் 03 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Error: View 9293b2au4w may not exist
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை ஜேர்மன் நாட்டவர்கள் கைது

இலங்கை ஜேர்மன் நாட்டவர்கள் கைது

இலங்கை ஜேர்மன் நாடுகளுக்குச் செல்வதற்காக, போர்டிங் பாஸ்களை மாற்றிக் கொண்டதாகக் கூறப்படும் இரண்டு வெளிநாட்டினரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை மற்றும் ஜேர்மனியை சேர்ந்தவர்கள். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி கடவுச்சீட்டில் பயணித்த இலங்கை பிரஜை மற்றும் ஜேர்மன் நாட்டவர் ஆகியோர் லண்டன் மற்றும் காத்மாண்டு செல்வதற்காக விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் தங்களுடைய போர்டிங் பாஸ்களை மாற்றிக்கொண்டனர்.

இதையடுத்து பொலிஸார் இலங்கை ஜேர்மன் நாட்டவர்கள் மீதும் மோசடி, மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த குற்றத்தில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளனரா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

கேணல் உட்பட நான்கு பேர் அதிரடி கைது

கேணல் உட்பட நான்கு பேர் அதிரடி கைது

மட்டக்களப்பு – கரடியனாறு, மாவடியோடை பகுதியில் நவீன கருவிகளை பயன்படுத்தி புதையல் தோண்ட முயற்சித்த இராணுவ லெப்ரினன் கேணல் உட்பட நான்கு பேர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவடியோடை பகுதியில் உள்ள தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலேயே இவர்கள் புதையில் தோண்ட முயற்சித்த நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேணல் உட்பட நான்கு பேர் அதிரடி கைது

வெலிக்கந்தையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் பொறுப்பதிகாரி, அவரின் கீழ் கடமையாற்றும் இரண்டு இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் தேரர் ஒருவர் உட்பட நான்கு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த குழுவினர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய இராணுவத்திற்குரிய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் புதையல் கண்டறிவதற்காக பயன்படுத்துவதற்கு கொண்டுவந்த நவீன கருவிகளும் மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் கரடினாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

விளையாட்டுப் போட்டியில் தாக்குதல் நால்வர் கைது

விளையாட்டுப் போட்டியில் தாக்குதல் நால்வர் கைது

விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் நுழைந்து தாக்குதல் நடத்திய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று (31) பிற்பகல் திடீரென நுழைந்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 6 பேர் தொடர்புபட்டுள்ளதுடன், ஏனைய இருவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

காதலியின் தாய்க்கு வாள் காட்டிய காதலன் கைது

காதலியின் தாய்க்கு வாள் காட்டிய காதலன் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 17 சிறுமி ஒருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாயாருக்கு சிறுமியின் காதலனும் அவனின் நண்பனும் வாள் மற்றும் கூரிய ஆயதங்களுடன் தொலைபேசி டிக் டொக் மூலம் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து இருவரையும் சனிக்கிழமை (25) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் சிறுவன் ஒருவன் காதலித்து வந்துள்ளார்.

இதனையறிந்த சிறுமியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து 17 வயதுடைய காதலனும் அவனது நண்பனும் சேர்ந்து வாள் மற்றம் பஞ்ச சக்கரம் கொண்ட கூரிய ஆயுதத்துடன் படம் எடுத்து அதற்கு வீரம் கொண்ட

காதலியின் தாய்க்கு வாள் காட்டிய காதலன் கைது

பாடல்களை பதிவு செய்து கையடக்க தொலைபேசியில் டிக் டொக்கில் பதிவிட்டு சிறுமியின் தாயாரை அச்சுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து; சம்பவ தினமான சனிக்கிழமை காலையில் 17 வயதுடைய இருவரையும பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின்னர் வாக்கு மூலம் பதிவு செய்து எச்சரித்து மாலையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

3 பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் கைது

3 பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் கைது

எல்பிட்டிய, அவிட்டாவ பிரதேசத்தில் மூன்று பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்தமை மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த வழக்குகள் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யகிரல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​திருடப்பட்ட தங்க நெக்லஸ், 03 ஜோடி காதணிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபருக்கு எதிராக மத்துகம, களுத்துறை மற்றும் அல்பிட்டி நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பணத்தை மோசடி செய்த இருவர் கைது

பணத்தை மோசடி செய்த இருவர் கைது

வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குவைட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பல்லம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருதானை பகுதியில் வைத்து புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர், கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவருக்கு குவைட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 4 இலட்சத்து 50,000 ரூபா பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

No posts found.
வீடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 17 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வீடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 17 பேர் கைது

வீடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 17 பேர் கைது

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்து வந்த ஒருவர் உட்பட 17 பேரை நேற்று (15) இரவு மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ்கிராமத்திலுள்ள வீடு ஒன்றை சம்பவ தினமான நேற்று இரவு 7 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலாக பொலிஸ் குழுவினர் சுற்றிவளைத்தனர்.

இதன் போது சட்டவிரோத ஆள் கடத்தல் மாபியாவைச் சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 16 பேரிடம் பணத்தை வாங்கி கொண்டு மட்டக்களப்பு கடலில் இருந்து படகு மூலம் அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக

தெரிவித்து அவர்களை அழைத்து வந்து மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று அங்கு கடந்த ஒரு மாதகாலமாக தங்க வைத்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 17 பேர் கைது

இதில் 3 சிறுவர்கள் 3 கர்ப்பிணி பெண்கள் உட்பட 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு வீடு வாடகைக்கு பெற்றுக் கொடுத்து உதவி புரிந்து வந்த ஒருவர் உட்பட 15 பேரை கைது செய்ததுடன் படகு மூலம் செல்வதற்காக

கொள்வனவு செய்யப்பட்டு வைத்திருந்த சமபோசா, பிஸ்கற் பக்கற்கள் சீனி போன்ற பொருட்கள் மற்றும் ஆடைகளையும் மீட்டு ஒப்படைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவர்களை இன்று (16) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குறற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாணவர்கள் மீது வன்முறை; அதிபருடன் அறுவர் கைது

மாணவர்கள் மீது வன்முறை; அதிபருடன் அறுவர் கைது

கண்டி பொக்கவெல பகுதியில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் உட்பட ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனியார் பாடசாலையில் கல்வி கற்கும் 15 இலிருந்து 17 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் பாடசாலை விடுதிக்குள் வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபரால் ஒழுக்கக் கேடு காரணமாக இரக்கமின்றி தாக்கப்பட்டதையடுத்து கண்டிப் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணை ஒன்றை துவக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஐந்து மாணவர்கள் இரகசியமாக பாடசாலையின் பெண்கள் விடுதிக்குள் நுழைந்ததனால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் பட்டதாக விசாரணைகளில் தெரிய வருகிறது. ஐந்து

மாணவிகளை சந்திக்க அவர்களின் சம்மதத்துடன் குறித்த மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

மாணவர்கள் மீது வன்முறை; அதிபருடன் அறுவர் கைது

சம்பந்தப்பட்ட மாணவர்கள் கடுமையான தாக்குதலுக்கும் கொடுமைக்கும் ஆளாகியிருப்பதுடன் அவர்களின் தலைமுடியும் வெட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்டவர்களுள் விடுதி காப்பாளர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப் பட்ட பின்னர் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரையில் பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக கண்டி சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

No posts found.
ஈரானில் பாடசாலைகளுக்கு நச்சு புகை வீசிய 100 பேர் கைது
Posted in உலக செய்திகள்

ஈரானில் பாடசாலைகளுக்கு நச்சு புகை வீசிய 100 பேர் கைது

ஈரானில் பாடசாலைகளுக்கு நச்சு புகை வீசிய 100 பேர் கைது

ஈரானால் பாடசாலைகளுக்கு நச்சு புகை வீசிய
நூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இந்த நச்சு புகையினால பல நூறு மாணவர்க்ள ,
பாதிக்க பட்ட நிலையிலும் ,பாடசாலைகள் அடித்து மூட் ப்பட்ட நிலையில் ,
நடத்த பட்ட கண்காணிப்பு தேடுதல் நடவடிக்கையில் ,
இந்த குற்ற செயலை புரிந்த நூறு பேர் கைது செய்ய பட்டு,
உரிய முறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .

குற்றம் நிரூபிக்க பட்டால் இவர்களுக்கு ,
மரண தண்டனை விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

மாணவி துஷ்பிரயோகம் அதிபர் கைது | இலங்கை செய்திகள்

மாணவி துஷ்பிரயோகம் அதிபர் கைது | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய 50 வயதுடைய அதிபர் பலாங்கொட அல்லராவ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன்,
பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

சந்தேக நபர் தப்பியோட்டம் – 4 பொலிஸ் அதிகாரிகள் கைது|இலங்கை செய்திகள்

சந்தேக நபர் தப்பியோட்டம் – 4 பொலிஸ் அதிகாரிகள் கைது|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி, சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

போலியான பெயரில் டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேக நபர், பொலிஸ் அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் ​சென்றுள்ளார்.

இந்த சந்தேக நபர் கொலை உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதுடன்,
அவருக்கு எதிராக விமானப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

No posts found.
விபத்தில் கர்ப்பிணி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய்| இலங்கை செய்திகள்

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், கணேமுல்ல அமுனுகொட வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

உதைக்கு இலக்கான நான்கு மாத கர்ப்பிணிப் பெண், பொரளை டி சொய்சா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உதையால் கரு அழிந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகத்திற்குரிய கடற்படை சிப்பாயின் சகோதரி ஒருவரின் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றதுடன் அதில் இந்த கடற்படை சிப்பாயும் கலந்துகொண்டார்.

இந்த கடற்படை சிப்பாயின் சகோதரியின் கணவரின் சகோதரர் ஒருவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகமடைந்த இராணுவ வீரர், தன்னையும் தாக்கியதாகவும், கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் பலமுறை உதைத்ததாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

உதைக்கப்பட்ட கர்ப்பிணி தரையில் வீழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது.கர்ப்பிணிப் பெண்ணை உதைத்ததாகக் கூறப்படும் கடற்படைச் சிப்பாய்
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதுடன் அவர் புல்முடே பிரதேசத்தில் உள்ள முகாமில் பணிபுரிந்து வந்தார்.