ஈரானில் வெடிக்காத அமெரிக்கா குண்டுகள் மீட்பு
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ்

ஈரானில் வெடிக்காத அமெரிக்கா குண்டுகள் மீட்பு

ஈரானில் வெடிக்காத அமெரிக்கா குண்டுகள் மீட்பு

ஈரானில் வெடிக்காத அமெரிக்கா குண்டுகள் மீட்பு ,லோரெஸ்தான் மாகாணத்தில் வெடிக்காத மூன்று அமெரிக்கக் குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி. தகவல்

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (ஐ.ஆர்.ஜி.சி.) வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு, மேற்கு லோரெஸ்தான் மாகாணத்தில்

வெடிக்காத மூன்று எம்.கே-84 விமானக் குண்டுகளைச் செயலிழக்கச் செய்துள்ளதாக, அரசு ஒளிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி. தெரிவித்துள்ளது.

900 கிலோகிராம் எடையுள்ள இந்தக் குண்டு

900 கிலோகிராம் எடையுள்ள இந்தக் குண்டு, 11 மீட்டர் ஆழம் வரை பள்ளங்களை ஏற்படுத்தக்கூடியது.

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு

வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் நேற்று (11) மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்பரவு செய்த போது குறித்த குழிக்குள் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து பாடசாலை நிர்வாகத்தால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப் பகுதியில் இருந்து 7 மோட்டார் குண்டுகளை மீட்டனர்.

மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.