Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

காதலிக்க சம்மதமா ….?

காதலிக்க சம்மதமா ….?

பாவாடை தாவணியில்
பாவை நீ போகையில
உன்னை விழி தொடருதே
உடைந்து மனம் வாடுதே

தோகை மயில் கூந்தலில
தொங்கும் பூ வாசத்திலே
மனது மயங்குதே
மானே உன்னை தேடுதே

வீசும் காற்றில் கையை வீசி
விடலை நீ போகையில
உன்னை விழி தொடராதோ …?
உயிரே அணைக்க துடிக்காதோ …?

சின்ன விழி பார்வையில
சிரித்து நீ போகையில
தேவைதையை தேடேனோ
தெரு தெருவா சுற்றேனோ …?

ஒத்த நொடி உன்னை கண்டு
உலகை மறந்தேனே
இந்த உயிர் வாழ்ந்திடவே
என் உயிரே நீ வேண்டும்

வன்னி மைந்தன்
ஆக்கம் -25-07-2020