கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்
Posted in உலக செய்திகள்

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம் தொடர்பான விடயம் தற்பொழுது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கடல் வழியில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் ஹவுதிகளுக்கு எதிராக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ,அமெரிக்கா இராணுவத்தின் எப் 18 ரக விமானம் ஒன்றே கடல் விழுந்து மூழ்கியுள்ளது.

அதைச் செலுத்தி சென்ற விமான ஓட்டி உள்ளிட்டவர்களை தேடும் பணியில் தற்பொழுது அமெரிக்கா கடற்கரை ஈடுபட்டு வருகிறது.

இந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக விழுந்ததா ,அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை.

ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது விமான வீழ்த்தல் சம்பவம் இதுவாக காணப்படுகிறது.

அமெரிக்கா கடல் படையின் இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது.

இது திட்டமிடப்பட்டு இந்த விமானங்களை இயந்திரங்கள் செயலிழக்கப்பட்டு வீழ்த்தப்படுகிறதா, அல்லது இயந்திர கோளாறு காரணமாக விழுந்ததா என்பதை இப்பொழுது கேள்வியாக இருக்கிறது.

காணாமல் போன விமானியை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில், அமெரிக்கா கப்பல் படைகள் சுழியோடிகள் விமானங்கள் தீவிர தேர்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்த கப்பல் பாதுகாப்பு அரணாக இருந்த பொழுதும், அந்த கப்பலில் இருந்த இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து விழுந்து மூழ்கியது ,அமெரிக்கா இராணுவத்தை அதிர்ச்சியில் உறவை வைத்துள்ளது.