Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை திருமணம் செய்

என்னை திருமணம் செய்

சன்னி வண்டியில
சாலை போகையில
முன்னே வந்தவளே
முன் விழி பறித்தவளே

நெஞ்சை பறி கொடுத்து
நெடு நாளா நான் தவிக்க
கஞ்ச தனம் படைத்து
காண போறவளே

கூந்தல் நிலம் கூட்ட
குயில் குரல் பாட்டிசைக்க
சலங்கை மணி ஒலிக்க
சாலை எழுந்து வர

வீதி போறவளே
விளையாடல் செய்பவளே
என்னை பறி கொடுத்தேன்
ஏன் என்று கேட்காயோ ..?

உன்னை தேடுதடி
உயிர் ஒன்று வாடுதடி
காதல் செய்து விட்டேன்
கல்யாணம் பண்ணிக்கடி ….!

வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 06-06-2020

ன்னி மைந்தன் கவிதைகள்

என்னை-திருமணம்-செய்