என்னை திருமணம் செய்
சன்னி வண்டியில
சாலை போகையில
முன்னே வந்தவளே
முன் விழி பறித்தவளே
நெஞ்சை பறி கொடுத்து
நெடு நாளா நான் தவிக்க
கஞ்ச தனம் படைத்து
காண போறவளே
கூந்தல் நிலம் கூட்ட
குயில் குரல் பாட்டிசைக்க
சலங்கை மணி ஒலிக்க
சாலை எழுந்து வர
வீதி போறவளே
விளையாடல் செய்பவளே
என்னை பறி கொடுத்தேன்
ஏன் என்று கேட்காயோ ..?
உன்னை தேடுதடி
உயிர் ஒன்று வாடுதடி
காதல் செய்து விட்டேன்
கல்யாணம் பண்ணிக்கடி ….!
வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 06-06-2020