Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

எச்சரிக்கை ….!

எச்சரிக்கை ….!

சேனை படை கொண்டு
செந் தமிழ் நாட்டுக்குள்
வந்தவரை தமிழ் என்ன
வழி தொழவோ …?

முற் புதருக்குள்
முன் வர பயந்தவர்கள்
நெஞ்சிடித்து இன்றென்ன
நெருக்கும் உரசல் …?

கந்தக ஒலியில்
காட் சட்டை நனையும்
கோமாளிகள் இன்றென்ன
கோமகனோ …?

கோவண கயிற்றிலே
கொடி பிடிக்கும் தலைகளை
காப்பாற்ற முடியா
காலம் எழும்

குமுறும் ஏரி மலை
குன்று வெடிக்கும்
நஞ்சு கட்டியே
நாடு கொதிக்கும்

பஞ்சில் தீ
பற்றி பிடிக்கும்
கறுப்பு முகங்கள்
கருகி மிதக்கும்

உலக விதியில்
உழலும் பிழையில்
திருத்தி எழுத
திருப்பம் நடக்கும்

வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 11-06-2020

Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு அவசர எச்சரிக்கை

மக்களுக்கு அவசர எச்சரிக்கை

மழை நிலைமை:
கிழக்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம்விருத்தியடைந்துள்ளதுடன் அது

மேலும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.ஆழம் கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக

அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில்

நாட்டிற்கு கிழக்காக மற்றும் வடகிழக்காக உள்ள கடற்பரப்புகளில்சில இடங்களில் பலத்த மழையோ அல்லது

இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது

தென்மேற்குதிசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையானஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த

கடற்பரப்புகளிலும்காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த

கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையானஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த

கடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்)

பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

      Posted in இலங்கை செய்திகள்

      யாழில் கொரனோ அபாயம் – மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை

      யாழில் கொரனோ அபாயம் – மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை

      யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் சில நாட்களில் கொரனோ வேகாம்க பரவும்

      அபாயம் உள்ளதால் அது அபாய வலயமாக பிரகடன படுத்த பட்டுள்ளது

      அதனால் மக்களை சில வாரங்களுக்கு வீடுகளை விட்டும் வெளியில்

      செல்ல வேண்டாம் என கண்டிப்பான வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

      மீறி வெளியில் செல்வோர் கைது செய்ய படுவார்கள் என அறிவிக்க பட்டுள்ளது ,

      மக்களே இதனை அதிகம் பகிருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,

      அரசின் அவசர எச்சரிக்கை …

      யாழில் கொரனோ அபாயம்
      யாழில் கொரனோ அபாயம்