Tag: ஆபத்தான பொருட்கள்
Posted in இலங்கை செய்திகள்
மன்னாரில் ஆபத்தான பொருட்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 14/06/2025
மன்னாரில் ஆபத்தான பொருட்கள்
மன்னாரில் ஆபத்தான பொருட்கள் ,மன்னார் மாவட்டத்தில் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளன.
முன்னதாக இலங்கை கடற்பரப்பில் பற்றியெறிந்த எவர் கிறீன் கப்பலில் இருந்து வெளியேறிய அதே போன்ற வடிவமுடைய பொருளே மேற்படி தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகிறது.
இவ்வாறான பின்னனியின் இன்றைய தினம் (3) கரையோர காவல் திணைக்களம், கடற்படை, இராணுவம் இணைந்து முதற்கட்டமாக கடற்கரை
ஓரங்களில் ஒதுங்கியுள்ள குறித்த பிளாஸ்டிக் மாதிரி பொருட்களை அகற்றியுள்ளனர்.
குறிப்பாக கடற்கரையோரங்களில் இலட்சக்கணக்கில் இவ்வாறான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நுண்ணிய பொருட்கள் காணப்படுகின்றமையினால்
முழுமையாக குறித்த பொருட்களை அகற்ற முடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது

- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்

- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன









