கடல் அலையில் சிக்கிய சிறுவர்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடல் அலையில் சிக்கிய சிறுவர்கள் மீட்பு

கடல் அலையில் சிக்கிய சிறுவர்கள் மீட்பு

பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற 6 பேர், அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட போது, பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரினால் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று சிறுவர்களும் மூன்று சிறுமிகளுமே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த 69951 புஸ்பகுமார மற்றும் 93731 தேஷான் ஆகிய இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களினால் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று (04) மாலை இவர்கள் அலையில் சிக்கிய போது, இந்த இரண்டு அதிகாரிகளும் பிள்ளைகளை மீட்டு கடற்கரைக்கு அழைத்து வந்து உடனடியாக முதலுதவி செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்