45பேர் பலி இந்தியாவில் அகோரம்
Posted in உலக செய்திகள்

45பேர் பலி இந்தியாவில் அகோரம்

45பேர் பலி இந்தியாவில் அகோரம்

45பேர் பலி இந்தியாவில் அகோரம், இந்தியாவில் தற்பொழுது கடந்த 24 மணித்தியாலமாக இடம்பெற்று வருகின்ற ,சீரற்ற காலநிலை காரணமாக 45 பேர் உத்தரபிரதேச பகுதியில் இறந்துள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இடி மின்னல் காற்று ஆகியவற்றின் பாதிப்புகளினால் .இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் புயல் .காரணமாக டசினுக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்

கடும் புயல் .காரணமாக டசினுக்கு மேற்பட்ட வீடுகள் அங்கு சேதம் அடைந்தும், முற்றாக இடிந்தும் காணப்படுகின்றன.

அதேபோன்று வர்த்தக நிலையங்களும் சேதமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் வாகனங்களும் சேதமடைந்து காணப்படுகின்றன.

இந்தப் புயல் காற்றினால் காயமடைந்த நிலையில் ,பல டசினுக்கு மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு ,அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு படைகள் தற்பொழுது களமிறக்கப்பட்டு ,பாதிக்கப்பட்ட இடங்களில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு கடும் எச்சரிக்கை

மக்களை வீடுகளை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என்ற எச்சரிக்கையும், மரங்களுக்கு கீழ் நிற்க வேண்டாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .