ஹோட்டலில் இருந்து சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஹோட்டலில் இருந்து சடலம் மீட்பு

ஹோட்டலில் இருந்து சடலம் மீட்பு

ஹோட்டலில் இருந்து சடலம் மீட்பு ,இங்கிரிய பகுதியில் உள்ள ஹோட்டலில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, ஜெயலத்கம மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டலில் நேற்று ஒரு விருந்தினர் இறந்து கிடந்துள்ளார்.

உயிரிழந்தவர் இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய இங்கிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மலையக யுவதி ஹோட்டலில் மர்மமாக உயிரிழப்பு

மலையக யுவதி ஹோட்டலில் மர்மமாக உயிரிழப்பு

அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

நேற்று (10) மாலை குறித்த விடுதியில் தங்கியிருந்த ஜோடியில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்த யுவதி நேற்று மாலை நபர் ஒருவருடன் ஹோட்டலுக்கு வந்து அங்குள்ள அறையில் தங்கியிருந்த நிலையில், சிறிது நேரத்தில் யுவதி மயங்கி விழுந்துள்ளதாக உடன் இருந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.