வீர வேங்கை இவர்கள் தான் |புரட்சி கவிதை |காசா எழுச்சி கவிதைகள்
Posted in கவிதைகள்

வீர வேங்கை இவர்கள் தான் |புரட்சி கவிதை |காசா எழுச்சி கவிதைகள்

வீர வேங்கை இவர்கள் தான் |புரட்சி கவிதை |காசா எழுச்சி கவிதைகள்

சொல்லி சொல்லி அடிக்கின்ற
சொந்தங்களை பார்க்கையில
கண் இரண்டில் நீர் வடியும்
கரை தேடி அவை ஓடும்

பன்முகத்து ஆளுமையாய்
படை நகர்த்தும் அவர் கண்டு
விண்ணுலகே வியக்கு தின்று
விடி காலை சிவக்கிதின்று

மண் பறிக்க வந்தவரை
மண்டியிடா நெஞ்செழுந்து
வீழ்த்துகின்ற இவரை தான்
வின்வெளியே அளக்குது

அடிமைகளை உடைக்கின்ற
அக்கினி குஞ்சுகளாய்
வெடிக்கின்ற இவர்களது
வேகத்தை பாடி விடு

உரக்க வெடிக்கின்ற
ஊந்துகணை அதிர்வினில
அரக்கர் படைகள் எல்லாம்
அழிகிறது அவ்விடத்தில்

இன்றைய நாள் குறிப்பில்
இரக்கம் இலார் இவரென்று
எழுதி வைத்த வரலாறு
எண் திசையும் பாடுகிறது

அச்சு பிசகாத
அழகிய சாதனையை
விதைத்த இவர்கள்
வீர வேங்கை தான் …!

கவிதை வீடியோ பார்க்க இதில் அழுத்துங்க