Tag: விடுவிப்பு
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 குழந்தைகள் விடுவிப்பு
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 குழந்தைகள் விடுவிப்பு
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 குழந்தைகள் விடுவிப்பு ,நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 குழந்தைகள் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் ஒரு கத்தோலிக்கப் பள்ளியிலிருந்து
கடந்த மாதம் ஒரு கத்தோலிக்கப் பள்ளியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட குறைந்தது 153 மாணவர்களும் 12 ஆசிரியர்களும் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
.கடந்த மாதம் வடக்கு நைஜீரியாவில் உள்ள ஒரு கத்தோலிக்கப் பள்ளியிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளில் 100
குழந்தைகளின் விடுதலையை நைஜீரிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அதிகாரிகளும் உள்ளூர் ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
100 குழந்தைகளும் நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவை அடைந்து, திங்கட்கிழமை நைஜர் மாநிலத்தில் உள்ள உள்ளூர் அரசாங்க அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட உள்ளனர் என்று பெயர் குறிப்பிடப்படாத ஐக்கிய நாடுகள் சபையின் வட்டாரம் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
அவர்கள் நாளை நைஜர் மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்
அவர்கள் நாளை நைஜர் மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர், ”என்று அந்த வட்டாரம் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட குழந்தைகள் மருத்துவ மதிப்பீடுகளைப் பெற்று வருவதாகவும், விசாரணைக்குப் பிறகு அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும்
இணைக்கப்படுவார்கள் என்றும் நைஜீரியாவின் தி கார்டியன் செய்தித்தாள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது.
100 குழந்தைகள் விடுவிக்கப்படுவதாக AFP க்கு வந்த செய்திகளை ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் சண்டே டேர் உறுதிப்படுத்தினார்.
நவம்பர் 21 அன்று நைஜர் மாநிலத்தின் அக்வாரா மாவட்டத்தின் பாபிரி சமூகத்தில் உள்ள செயிண்ட் மேரி பள்ளியில் இருந்து ஆயுதமேந்திய துப்பாக்கிதாரிகள் 303 மாணவர்களையும் 12 ஆசிரியர்களையும் கடத்தினர்.
அவர்களில் 10 முதல் 18 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண் மாணவர்கள் இருவருமே அடங்குவர் என்று நைஜீரியாவின் கிறிஸ்தவ சங்கம் (CAN) தெரிவித்துள்ளது.
மாணவர்களில் ஐம்பது பேர் கடத்தப்பட்ட சில நாட்களில் சிறையிலிருந்து தப்பித்து, தங்கள் குடும்பங்களுக்குத் திரும்பினர். ஞாயிற்றுக்கிழமை 100
மாணவர்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 153 மாணவர்களும் 12 ஆசிரியர்களும் சிறைபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, அண்டை நாடான கெப்பியில் உள்ள அரசு பெண்கள் விரிவான மேல்நிலைப் பள்ளியிலிருந்து 25 பள்ளி மாணவிகளை துப்பாக்கிதாரிகள் கடத்திச் சென்றனர். மாநிலத்தின் மாகா நகரம், 170 கிமீ (106 மைல்) தொலைவில்.
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரானிய விமான நிறுவனங்களுக்குச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

வெசாக் தினத்தைமுன்னிட்டு கைதிகள் விடுவிப்பு
வெசாக் தினத்தைமுன்னிட்டு கைதிகள் விடுவிப்பு
வெசாக் தினத்தைமுன்னிட்டு கைதிகள் விடுவிப்பு ,வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சிறைச்சாலை அதிகார மையங்கள் தெரிவித்திருக்கின்றன.
சிறைச்சாலை குற்றச்சாட்டு
ஆண்டுதோறும் சிறைச்சாலைகளில் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் .நன்னடத்தை காரணமாக ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
அவ்விதம் வெசாக் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் விடுதலை செய்யக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது.
சிறைச்சாலை அதிகாரிகள் தற்போது மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.
விடுதலை செய்ய நடவடிக்கை
நற்சான்றிதழ் அடிப்படையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் நல்லொழுக்கத்தின் அடிப்படையில் .விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
விடுதலை செய்யப்பட்டு அவரது குடும்பங்கள் இளைய வாய்ப்புகள் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மக்களுக்கு மிக பெரும் நெருக்கடியை விடுவித்து பிரிந்த உறவுகளுடன் சேரும் நிலைக்கு தள்ளி மகிழ்வை வழங்கி வருகிறது .
இதுவே இன்றைய காலத்தின் முன்னோடி தேவையாக உள்ளதாக பார்க்க முடிகிறது .
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

மூன்று எம்பிக்கள் உட்பட ஏழுபேர் விடுவிப்பு
மூன்று எம்பிக்கள் உட்பட ஏழுபேர் விடுவிப்பு
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்து கொண்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உட்பட எழு பேரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் விடுவித்தது.
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி இடம்பெற்ற பேரணியில் பங்கேற்றவர்களில் எழுவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான , சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ். மாநகர
முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட எழு பேரே வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
மூன்று எம்பிக்கள் உட்பட ஏழுபேர் விடுவிப்பு
தேர்தல் காலத்தில் போராட்டம் நடத்தியமை, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அத்துடன், கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலருக்கு எதிரான வழக்கு விசாரணையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.
குறித்த இரண்டு வழக்குகளும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (08) எடுத்துகொள்ளப்பட்டது.
வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டுமென பொலிஸார் தெரிவித்த போது பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி இரண்டு வழக்குகளையும் கிடப்பில் போட்டு அனைவரையும் விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து இரண்டு வழக்கையும் கிடப்பில் போட்ட நீதிமன்றம், பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்குகளில் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஷ் ஆஜராகியிருந்தார்.
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
ரவிகரன் மயூரன் ஆட்பிணையில் விடுவிப்பு
ரவிகரன் மயூரன் ஆட்பிணையில் விடுவிப்பு
வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுழமுனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் காணி
அபகரிப்புக்கு எதிரான போராட்ட குழுவின் தலைவருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் இன்று (22) பிணையில் செல்ல அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
குருந்தூர் மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்கத்தால் அபகரிப்புக்குள்ளாக்கப்பட்டமையை கண்டித்தும், நீதிமன்ற உத்தரவை மீறி
தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிராகவும் நேற்று (21) முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டம்
ரவிகரன் மயூரன் ஆட்பிணையில் விடுவிப்பு
மேற்கொண்டமைக்காக தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
கைது செய்யப்பட் இரண்டு பேரும் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில்
முல்லைத்தீவு பொலிஸார் இவர்கள் இருவருக்கு எதிராகவும் தண்டனை சட்டக்கோவையின் பிரிவு 140, பிரிவு 146 பிரிவு 147 மற்றும் பிரிவு 344 கீழ் பி (B)அறிக்கை ஒன்றினை மன்றில் தாக்கல் செய்த நிலையில் வழக்கு
விசாரணைக்கு வந்த நிலையில் சிரேஸ்ட சட்டதரணிகளான அன்ரன் புனிதநாயகம் , கெங்காதரன் , பரஞ்சோதி உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட
சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த அனைத்து சட்டதரணிகளும் மன்றில் ரவிகரன் ,மயூரன் சார்ப்பில் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்தனர்.
அதாவது ஏற்கனவே நீதிமன்றம் ஆக்கிய கட்டளையை மீறி குறித்த பகுதியில் தொடர்ந்தும் கட்டுமானம் நடைபெற்று வந்ததன் காரணத்தாலேயே இவர்கள்
அங்கு சென்று ஜனநாயக ரீதியில் அமைதியாக போராட்டம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
ரவிகரன் மயூரன் ஆட்பிணையில் விடுவிப்பு
பொலிஸார் இந்த வழக்கில் இன்னும் பலரை கைது செய்யவேண்டி உள்ளதாகவும், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு
இடையூறு ஏற்படுத்தியதன் காரணத்தினாலேயே இவர்களை கைது செய்ததாக மன்றில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சட்டதரணிகளின் வாதங்களை அடுத்து இரண்டுபேரையும் தலா இரண்டு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் செல்ல அனுமதித்ததோடு
அடுத்த வழக்கானது 2023 பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதிக்கு தவணையிடப்படுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணை தொடர்பில் மூத்த சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 12.06.2022 அன்று இருந்த நிலமையினை பேணுமாறு வழங்கிய நீதிமன்ற கட்டளையினை தொல்லியல் திணைக்கள
அதிகாரிகளும் குருந்தூர் மலையில் இருக்கின்றவர்களும் மீறியதனால் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் இடம்பெற வேண்டிய தேவை உள்ளது என மன்றுக்கு சான்றுகள் ஊடக சட்டத்தரணிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மன்று
வினவியதன் பின்னர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பதிலினை பெறுவதற்காக தொல்லியல் திணைக்கள
பணிப்பாளர் நாயகத்தினை அடுத்த தவணைக்கு மன்றில் பதிலளிக்குமாறு வழங்கினை எதிர்வரும் 13ஆம் திகதியிடப்பட்டுள்ளதுடன்
பொலிஸார் அன்றையதினம் வரைக்கும் ஏற்கனவே மன்றில் இருந்த கட்டளையினை பேணுவதற்கு தாங்கள் உத்தரவாதம் தருவதாக தெரிவித்துள்ளார்கள்.











