பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்

ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்

இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு கூறியுள்ளது.

இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அலட்சியத்துடன் பழையபடி அதே பாடசாலைகளில் பணிபுரிவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்

எவ்வாறாயினும், சேவையின் நிமித்தம் காரணமாக சில ஆசிரியர்களை தற்போதுள்ள பாடசாலைகளில் தக்கவைத்துக் கொள்ளுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அத்தகைய ஆசிரியர்களுக்கு இந்தத் தீர்மானம் பொருந்தாது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு உபரி ஆசிரியர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

சமுர்த்தி பயனாளிகளுக்கு விசேட அறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள்

சமுர்த்தி பயனாளிகளுக்கு விசேட அறிவித்தல்

சமுர்த்தி பயனாளிகளுக்கு விசேட அறிவித்தல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (31) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக 393,094 சமுர்த்தி பெறுனர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது