Tag: யாரிடமும் சொல்லிடாதே
யாரிடமும் சொல்லிடாதே
Author: நிருபர் காவலன் Published Date: 05/05/2023
யாரிடமும் சொல்லிடாதே
உழுது புரட்டி வயலில
உழவடிக்க வர வா
உரமிட்டு பயிர் எழவே
உயிர் கொடுத்து விட வா
கால நேரம் நீரிறைத்து
கவனித்து விட வா
களை பிடுங்கி கதிர் எழவே
கனியாக்கி தர வா
மண்டையில மிதி மிதித்து
மணி பிடுங்கி தர வா
மாளிகையில் வாய் சுவைக்க
மணி அரசி தர வா
உயிர் பிடிக்க நான் உழுது
உரம் இட்டேன் பாராய்
உயிர் உள்ளவரை நீயிந்த
உண்மை என்றும் மறவாய் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-05-2023

























