மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல்
Posted in இலங்கை செய்திகள்

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்

காம்பஹா உயர் நீதிமன்றம்

காம்பஹா உயர் நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன

ரணவீர உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

போலி பத்திரங்களைப் பயன்படுத்தி அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகக்

கூறப்படும் வழக்கு தொடர்பானது என்று அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

முன்னர் உயர் நீதிமன்ற பிணை

முன்னர் உயர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

முன்னாள் அமைச்சர்களைத் தவிர, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரத் எதிரிசிங்க, அஜித் மில்ராய், ஜெயந்த கப்ரால் மற்றும் நவீன் வீரக்கோன் ஆகியோருக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கம்பஹா உயர் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரட்ன அனைத்து குற்றவாளிகளையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 27 ஆம் தேதி வரை ஒத்திவைத்தார்.

சவப்பெட்டியுடன் பொரளை மயானத்திற்கு சென்ற மேர்வின் சில்வா
Posted in இலங்கை செய்திகள்

சவப்பெட்டியுடன் பொரளை மயானத்திற்கு சென்ற மேர்வின் சில்வா

சவப்பெட்டியுடன் பொரளை மயானத்திற்கு சென்ற மேர்வின் சில்வா

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று (04) மாலை பொரளை மயானத்திற்கு சவப்பெட்டியுடன் சென்றுள்ளனர்.

நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் பொரளை மயானத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை தடுத்ததால் இரு குழுக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

எனினும் பாதுகாப்பு அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேர்வின் சில்வா
Posted in இலங்கை செய்திகள்

மேர்வின் சில்வாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது

மேர்வின் சில்வாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது

வடக்கில் விகாரைகள் மற்றும் மகாசங்கரத்தினர் மீது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் கைவைத்தால் அவர்களின் தலையை களனிக்கு கொண்டுவருவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருக்கும்

கூற்று தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடும் செயல் அதனை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் அரசாங்கம் இதற்கு எதிராக

நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வடகொழும்பு பிரதான அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சீ.வை.பி. ராம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நாட்டில் அனைத்து மக்களுக்கும் தங்களின் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள போராடும் உரிமை இருக்கிறது.

மேர்வின் சில்வாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது

அதனை யாருக்கும் தடுக்க முடியாது. என்றாலும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அண்மைக்காலமாக அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் மற்றும் கோயிகள் தொல்பொருள் ஆய்வு என்ற பேரில் அரசாங்கம் கைப்பற்றி வரும் நடவடிக்கையை நாங்கள் அதவதானித்து வருகிறோம்.

இந்த விடயங்களில் அந்த பிரதேசத்தில் இருக்கும் தேரர்களும் சம்பந்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அந்த மக்கள் தங்களின் வழிபாட்டு தலங்கள் மற்றும் காணிகளை பாதுகாத்துக்கொள்ள போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அது அந்த மக்களின் உரிமை அதனை யாராலும் தடுக்க முடியாது. அதேநேரம் வடக்கு கிழக்கில் உள்ள பெளத்த விகாரைகளுக்கோ அங்குள்ள தேரர்களுக்கோ யாரும் கை வைத்ததாக இல்லை.

ஒரு சில சந்தர்ப்பங்களில் பொலிஸாரின் பக்கச்சார்பான நடவடிக்கைகளின் காரணமாக வாக்குவாதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

குருந்தூர் மலை விவகாரம் மற்றும் அங்குள்ள இந்துக்கோயில்களில் மக்கள் வழிபாடுகளில் ஈடுபடும்போது அதற்கு தடைகளை ஏற்படுத்தியதாலே பிரச்சினைகள் தலைதூக்கி இருக்கிறன.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா களனியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது, வடக்கில் விகாரைகள் மற்றும் மகாசங்கரத்தினர் மீது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் கைவைத்தால் அவர்களின் தலையை களனிக்கு கொண்டுவருவதாக பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.

மேர்வின் சில்வாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது

அவரின் இந்த கூற்றை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடும் செயல். அதனால் மேர்வின் சில்வாவின் இந்த கூற்று தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் அரசாங்கம் மேர்வின் சில்வா போன்றவர்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்டிருக்காமல் நாட்டில் அனுமதிக்கப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதன் மூலமே தமிழ் மக்களுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை ஏற்படும். 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவருவதில் தொடர்ந்தும் இழுத்தடிக்கக்கூடாது என ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறேன்

மேர்வின் சில்வா
Posted in இலங்கை செய்திகள்

மேர்வின் சில்வா மீது முறைப்பாடு பதிவு

மேர்வின் சில்வா மீது முறைப்பாடு பதிவு

முன்னாள்மேர்வின் சில்வா மீது முறைப்பாடு பதிவு அமைச்சர் மேர்வின் சில்வா சமீபத்தில் இனவாதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

அவரது குறித்த கருத்திற்கு பலரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேர்வின் சில்வா மீது முறைப்பாடு பதிவு

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம், மேர்வின் சில்வாவின் கருத்துக்கு எதிராக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதன்போது, இனவாத கருத்துக்களை தூண்டி வன்முறையை ஏற்படுத்துவதற்கு மேர்வின் சில்வா முயல்வதாக அவர் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேர்வின் சில்வா
Posted in இலங்கை செய்திகள்

உங்கள் தலைகளுடன் தான் வருவேன்;மேர்வின் சில்வா

உங்கள் தலைகளுடன் தான் வருவேன்;மேர்வின் சில்வா

“நான் வட மாகாணத்திற்கு வருவேன். விகாரைகள் மீது கை வைத்தால் அல்லது பௌத்த மதகுருக்கள் மீது கைவைக்க முயன்றால் நான் மீண்டும் களனியவிற்கு வரும்போது வெறும் கையுடன் வர மாட்டேன்.

உங்கள் தலைகளுடன் தான் வருவேன். வேலையை செய்வதற்கு எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை” என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று களனியவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.