Tag: மலை
ஹந்தானை மலையில் மாயமாகியிருந்த குழுவினர்மீட்பு
ஹந்தானை மலையில் மாயமாகியிருந்த குழுவினர்மீட்பு
ஹந்தானை மலையில் மாயமாகியிருந்த குழுவினர்மீட்பு ,கண்டி, ரட்டேமுல்ல பகுதியில் 12 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு, நேற்று மாலை ஹந்தானை மலை உச்சியைப் பார்வையிடுவதற்காக ஒன்று கூடியிருந்தது.
பின்னர் மூடுபனி மற்றும் மழை காரணமாக, அவர்களால் திரும்பி வருவதற்கு பாதையைக் கண்டறிய முடியாமல் வழி தவறியிருந்தனர்.
இதைப் பற்றி பெற்றோருக்கு அறிவித்த பின்னர், இராணுவமும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாணவர்கள் உட்பட குழுவினரைக் கண்டறிந்தனர்.
மீட்கப்பட்ட குழுவினர் பேராதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி சொல்வேன்
எப்படி சொல்வேன்
எழுதாத தாள் மேலே – உனை
எழுத வைத்த பேரழகே
தொலையாமல் இருக்குமா – மனம்
தொலைத்து விட்டேன் உன் மேலே
உடையாத பாறையாய்
உச்சி மலை இருந்தென்னை
கன்ன குழி சிரிப்பழகில்
கடைந்து விட்டாய் நீ என்னை
இடை பிடிக்கும் உன் விரலின்
இடையிலே என் விழிகள்
ஊடுருவி பார்க்குதடி
உடல் பரவசம் ஆகுதடி
வேர்க்காத உன் உதட்டில்
வேலை ஒன்று செய்திடவா ..?
சந்தனத்து உடல் அழகை
சாயும் காலம் மென்றிடவா ..?
இல்லாத மார்புக்கு
இடையில் என்ன சாளரமோ ..?
உடையாத பூவுக்குள்
உள்ளே என்ன எந்திரமோ ..?
எப்படி சொல்வேன்
மார்பு தடவும் கூந்தலின்
மல்லிகை வாசத்தை
முகர்ந்து பார்க்க துடிக்கிறதோ
முன்னுள்ள நுரையீரல் …?
வாலிபத்தை நோகடித்து
வாசல் வந்து நின்னவளே
நாள் ஒன்று வீனாகி
நலிந்து போனேன் என்னவளே
இச்சைக்கு வரி வைத்து
இயங்கும் உலகிலே
நீதி கேட்பீரா
நின்று பதில் சொல்வீரா …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 22-08-2021
http://ethirinews.com/
வன்னி மைந்தன் கவிதைகள்













