Tag: போர் மகளே வாழ்க
போர் மகளே வாழ்க
Author: நிருபர் காவலன் Published Date: 24/12/2023
போர் மகளே வாழ்க
களபூமி வேங்கைக்கும்
காலனி சலங்கைக்கும்
ஓட்டம் நடக்கிறது
ஓர்மம் வெடிக்கிறது
வெற்றி பெற்றுவிட
வேகம் பிடிக்கிறது
அப்பப்பா பிள்ளையின்
அகரம் தெரிகிறது
கரை நகர் மண்ணின்
கல கலப்பு தெரிகிறது
பிடிபட்ட பந்தும்
பிடியாணை கேட்கிறது
அடித்தெறிந்த மட்டையும்
அவமான படுகிறது
கோபத்தின் உச்சத்தில்
கொள்கை வெடிக்கிறது
சிகரம் ஏறிய
சிந்தைக்கு வாழ்த்து
பெருமை தேடிய
பெரு மகளே வாழ்த்து ..!
அன்புடன் – வன்னி மைந்தன்
ஈழம் காரைநகர் களபூமியை பூர்வீகமாக கொண்ட அமுருதா சுரேன்குமார் என்ற ஈழத்தமிழச்சி இங்கிலாந்து கிர்க்கெற் அணியில் இடம் பிடித்துள்ளார்.இவர் பொன்னாவளை களபூமியைச் சேர்ந்த தாமோரி ஆறுமுகத்தின் மகன் சபாரத்தினத்தின் பூட்டப் பிள்ளை என்பதும் குறிப்பிடதக்கது.
நல் வாழ்த்துகள் அமுருதா.





















