Tag: பேர் பாதிப்பு
9 மாவட்டங்களில் 6049 பேர் பாதிப்பு
9 மாவட்டங்களில் 6049 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 1,630 குடும்பங்களைச் சேர்ந்த 6,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
கடந்த இரண்டு நாட்களில் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய நிலைமை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
9 மாவட்டங்களில் 6049 பேர் பாதிப்பு
கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 1,199 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக நாடு முழுவதும் 122 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைதுby நிருபர் காவலன்
- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கைby நிருபர் காவலன்
- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்by நிருபர் காவலன்
- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்by நிருபர் காவலன்
இலங்கை வெள்ளத்தில் சிக்கி 18,000 பேர் பாதிப்பு
இலங்கை வெள்ளத்தில் சிக்கி 18,000 பேர் பாதிப்பு
இலங்கை வெள்ளத்தில் சிக்கி 18.000 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .பாதிக்க பட்டவர்களை மீட்கும் மீட்பு பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
பருவகால மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட நீர் அதிகரிப்பால் இந்த வெள்ளப்பெருக்கு இடம்பெற்றுள்ளது .
வீடுகளுக்குள் நீர் புகுந்ததினால் வீடுகள் பலத்த சேதமடைந்து ,உடைமைகள் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .
பாதிக்க பட்ட மக்கள் பாடசாலைகளில் தங்க வைக்க பட்டுள்ளனர் .














