Tag: பெண் மரணம்
பெண் மரணம் தொடர்பில் வௌியான தகவல்கள்
பெண் மரணம் தொடர்பில் வௌியான தகவல்கள்
கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவர் நேற்று (15) இரவு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
75 வயதுடைய பெண் ஒருவரே இவ்வா்று உயிரிழந்துள்ளதுடன், பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய கருவாத்தோட்டம் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
பெண் மரணம் தொடர்பில் வௌியான தகவல்கள்
இசை ஆசிரியையான குறித்த பெண் கணவரின் மரணத்திற்குப் பின்னர் தனியாக வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் முகம் மற்றும் கைகளில் இரத்தக்கறை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெண் இறந்த இடம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் டிரிப் சுவிட்ச் அணைக்கப்பட்டு இருந்ததையும், மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததையும் பொலிசார் அவதானித்துள்ளனர்.
மின்சாரத்தில் தரையை சுத்தம் செய்யும் இயந்திரம் மூலம் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், அந்த உபகரணத்தின் வயரும் அறுந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் குறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கி சூடு பெண் மரணம்
துப்பாக்கி சூடு பெண் மரணம்
இலங்கை மெதிரிகிரிய பகுதியில் நடத்த பாட்ட துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் மரணித்துள்ளார் .
வீதியால் பயணித்து கொண்டிருந்த பெண் மீது மறைந்திருந்த நபர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ,அவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .
கொலையாளியை கைது செய்திடும் நடவடிக்கையில் போலீசார் ஈடு பட்டுள்ளனர் .
மருத்துவமனை அலட்சியம் குழந்தை பெற்ற பெண் மரணம்
மருத்துவமனை அலட்சியம் குழந்தை பெற்ற பெண் மரணம்
திருகோணமலை – பாட்டாளிபுரக் கிராமத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பிணித் தாயொருவர் வைத்திய சாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் (13) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
24 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மூதூர் தள வைத்தியசாலையில் விசேட பெண் வைத்திய நிபுணர் குறித்த நாளில் வருகை தராமையால் மிகவும் ஆபத்தான முறையில் குழந்தையினை பிரசவித்ததன் பின்னர் அதீத குருதிப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குழந்தையும், தாயும் திருகோணமலை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முரசுமோட்டையில் சாமி கும்பிட்ட பெண் மரணம்
முரசுமோட்டையில் சாமி கும்பிட்ட பெண் மரணம்
முரசுமோட்டையில் சாமி கும்பிட்ட பெண் ஒருவர் மரணமான துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
முரசுமோட்டை மூன்றாம் யூனிட் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு பலியாகியுள்ளார் .
மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் பொழுது அங்கு பலியாகியுள்ளார் .
வாழ் நாளில் பிற் பகுதிகளில் தன்னை முழுமையாக சிவ தொண்டு பணிகளில் ஈடுபடுத்தி வந்த ,இவரே இவ்வாறு மரணித்துள்ள சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
கடவுள் பணி செய்து வந்த சிவ தொண்டர் அவர் பாதத்தில் வீழ்ந்து மரணித்துள்ள சம்பவம் ,மக்களை துயரில் ஆழ்த்தியுள்ளது .
கவிழ்ந்த வான் பெண் மரணம் 11 பேர் காயம்
கவிழ்ந்த வான் பெண் மரணம் 11 பேர் காயம்
கல்முல்ல பகுதியில் வான் ஒன்று விபத்தில் சிக்கி கவிழ்ந்ததில் ,அதில் பயணித்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
மகனை வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு கட்டுநாயக்காவில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த பொழுதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
சாரதி நித்திரை துக்கத்தினால் ,அவரது கட்டு பாட்டை இழந்த வான் விபத்தில் சிக்கியது .இதன் பொழுதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .
பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்
பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்
பிரிட்டன் லீவர்பூல் பகுதியில் நாய் கடித்து, அறுபது வயது பெண் பலியாகியுள்ளார் .
நாயின் பலத்த கடி காயங்களுக்கு உள்ளான , பெண்மணி ,சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் .
இந்த பெண் மரணம் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்
மேற்படி பெண்ணின் மரண செய்தி, அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் சமீப காலங்களாக, நாய் கடிக்கு உள்ளாகி ,பலர் இறந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு

- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்

- சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு

- சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல்

- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை



























