புத்தாண்டில் இருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

புத்தாண்டில் இருவர் படுகொலை

புத்தாண்டில் இருவர் படுகொலை

புத்தாண்டில் இருவர் படுகொலை ,நாட்டில் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

மாலை வெல்லவாய பொலிஸ்

நேற்று (14) மாலை வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெட்டொலகம பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 32 வயதுடைய வெல்லவாய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவராவார்.

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் இடையில்

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை பயாகல பகுதியில் நபர் ஒருவர் தலையில் தடி ஒன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

பயாகல, விகாரகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று சித்திரை புத்தாண்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதுபான விருந்தின் போது, ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இக்கொலை நடந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம் அநுராதபுரம், நுவரவெவ குளத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புத்தாண்டில் அனைவரும் ஒற்றுமையாக அனுரா அழைப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்தப் புத்தாண்டில் அனைவரும் ஒற்றுமையாக அனுரா அழைப்பு

இந்தப் புத்தாண்டில் அனைவரும் ஒற்றுமையாக அனுரா அழைப்பு

இந்தப் புத்தாண்டில் அனைவரும் ஒற்றுமையாக அனுரா அழைப்பு ,நாட்டையும் மக்களையும் வெற்றி பெறச்செய்வதற்காக இந்தப் புத்தாண்டில் அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்துக்காக

ஒன்றுபடுவோம் என அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற

வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவுக்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் கொண்டாடுகின்றோம்.

வீழ்ச்சியடைந்திருந்த நமது நாட்டை கடந்த சில மாதங்களாக மீண்டும் கட்டியெழுப்பி, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக புதிய நிலைக்கு உயர்த்தி வைத்துள்ளோம். அந்த வெற்றிகள் அனைத்தும் இந்நாட்டு மக்களுக்கே உரித்தாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையே நாட்டில் மாற்றம் ஏற்படுவதற்கு வழிவகுத்தது என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

சவால்களுக்கு மத்தியில் சரிந்துவிடாமல் நாட்டுக்காக நமது பொறுப்பை மேலும் வலுவாக நிறைவேற்றும் துணிச்சல் எமக்கு உள்ளது.

மேலும் பூகோள அரசியலைப் போன்றே தேசிய ரீதியாக நாட்டின் முன்பிருக்கும் அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ளத் தேவையான திட்டங்களை அரசு தற்போது செயற்படுத்தி வருகின்றது.

மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பௌதீக மற்றும் ஆன்மீகத் தொடர்புகளின் தனித்துவம் புத்தாண்டு மரபுகளினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அவை சிங்கள மற்றும் தமிழ் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட வரலாற்று பிணைப்பு மற்றும் சகவாழ்வின் உயிர்ப்புள்ள சான்றாக விளங்குகின்றன.

இன்றைய சமூகம் பல்வேறு பிரிவுகளால் வேறுபட்டிருந்தாலும், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்கள் அத்தகைய பிரிவுகளைக் கலைந்து சமூகத்துக்குள் மீண்டும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.

சகவாழ்வை ஊக்குவித்து மற்றவர்கள் மீது கருணை காட்டும் ஒழுக்கத்தின் இருப்பை எமக்குள் எற்படுத்திக்கொள்வதே இந்தப் புத்தாண்டில் நமது பொறுப்பாகும்.

மேலும், மக்கள் வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ளவும் பிற்போக்கான மனப்பாங்கு மற்றும் சிந்தனை அற்ற புதிய மனிதனை உருவாக்குவதுமே சூரிய பெயர்ச்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் அனைத்து சம்பிரதாயங்களினதும் பொதுவான எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறு நாம் புதிதாவதால் மாத்திரமே புத்தாண்டு நமது வாழ்விற்கு புதிய ஆரம்பத்தை தரும்.

நாட்டுக்குத் தேவையான புதிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேசிய திட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்காகவும், நாட்டையும் மக்களையும் வெற்றி பெறச்

செய்வதற்காகவும் இந்தப் புத்தாண்டில் அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்துக்காக ஒன்றுபடுவோம் என அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஒளிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தெஹிவளை மிருகக்காட்சி சாலை புத்தாண்டில் அள்ளிய பெரும் பணம்
Posted in இலங்கை செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சி சாலை புத்தாண்டில் அள்ளிய பெரும் பணம்

தெஹிவளை மிருகக்காட்சி சாலை புத்தாண்டில் அள்ளிய பெரும் பணம்

தெஹிவளை மிருகக்காட்சி சாலை தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டில் 4.8 மில்லியன் ரூபா பணத்தை அள்ளியுள்ளதாக தெஹிவளை மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது .

இலங்கை வரும் வெளிநாட்டு உல்லாச பயணிகளை தெஹிவளை மிருகக்காட்சி சாலை கவர்ந்து இழுக்கும் ஒன்றாக காண படுகிறது .

இந்த தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் யானைகள் ,புலிகள் ,கரடி ,சிங்கம் ,புலி ,ஒட்டகம் என்பன பிரதான விலங்குகளாக இங்கே காண படுகின்றன .

இந்த காட்டு விலங்குகளை கண்டு இரசிக்க வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிகம் இங்கே தேடி வருகின்றனர் .

அவர்கள் ஊடாகவே தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தில் அதிக வருமானத்தை தெஹிவளை மிருகக்காட்சி சாலை பெற்று ,இந்த ஆண்டின் முதல் பகுதியில் சாதனை படைத்துள்ளது .

புத்தாண்டில் இஸ்ரேல் தளபதியை போட்ட ஹமாஸ் |ஒரே தடவையில் கொத்தாக பலர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

புத்தாண்டில் இஸ்ரேல் தளபதியை போட்ட ஹமாஸ் |ஒரே தடவையில் கொத்தாக பலர் காயம்

புத்தாண்டில் இஸ்ரேல் தளபதியை போட்ட ஹமாஸ் |ஒரே தடவையில் கொத்தாக பலர் காயம்

புத்தாண்டில் இஸ்ரேல் தளபதியை போட்ட ஹமாஸ் , ஒரே தாவையில் கொத்தாக பலர் காயம் , புது வருடத்தில் இஸ்ரேல் காசா போர் அரங்கில் நடத்த நேருக்கு நேர் மோதல் ,

வீடியோ