Tag: பிரதேசசபை
லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம்
லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம்
லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.Students in London fined £57,000 for skipping school
இவ்விதம் கடந்த 2022 முதல் 2023 ஆம் ஆண்டு கால பகுதியில் 14 ,100பவுண்டுகள் தண்டமாக அற விடப்பட்டுள்ளது.
அதேபோன்று 2023 ஆம் 20 24 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 14,340 பவுண்டுகள் அளவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லண்டன் பிரேதசசபை
இவை கிழக்கு லண்டன் பிரேதசசபை -கவுன்சில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அந்த ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.
பிள்ளைகளை பாடசாலைக்கு உரிய முறையில் அனுப்பி வைக்காது அவர்கள் அடிக்கடி லீவு எடுத்துக் கொண்டதும் உரிய காரணங்கள் கண்ணபிக்க தவறிய காரணத்தினால் இந்த தண்டம் அற விடப்பட்டுள்ளதாக அந்த ஊடக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
செய்திகள் என்பது அந்தப் பகுதியில் வாழும் தமிழர் மத்தியிலும் ஒருவித அச்சத்தையும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
தமிழ் மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள்
தமிழ் மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள் .பிள்ளைகளை உரிய காரணங்கள் காட்டி பாடசாலை அனுப்பத் தவறினால்,இவ்வாறான தண்டத்தை அந்த பிரதேச சபை அறவிட்டு கொள்கிறது குறிப்பிடத்தக்கது.
- ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கவிட்டால் ஈரானை தாக்குவோம் அமெரிக்கா

- இஸ்ரேலில் குவிக்க பட்டுள்ள அமெரிக்கா 30 விமானங்கள்

- பெருவில் சுற்றுலா விமானம் விபத்து 13 பேர் பலி

- பேச வாங்க ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு

- சிக்கிய இஸ்ரேல் சிப்பாய்

- மத்திய கிழக்கில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா தலைவர் கூறுகிறார்

- ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்

- குவைத்தை தாக்கும் ஈரான் டிரோன்கள்

- லண்டன் காட்போர்ட்டில் 4 மில்லியன் பவுண்டுகள் நபர் கைது

- எகிப்து துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் கப்பல் சேதமா

- குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரகணக்கான அகதிகள் 9பேர் பலி

பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு
பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு
பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு ,வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்யும் கூட்டம், வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பாபு தேவ நந்தினி தலைமையில் இன்று (20) நடைபெற்றது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 8 பேர், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் சார்பில் 5 பேர், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் 4 பேர், தேசிய மக்கள் சக்தி சார்பில் 6
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
பேர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) சார்பில் 2 பேர், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஒருவர், மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் 2 பேர் என
மொத்தம் 28 உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி
தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் கந்தையா யசீதன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ்க்
காங்கிரஸ் சார்பில் நாகராசா பகீரதன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், தவிசாளர் தேர்வு பகிரங்க வாக்கெடுப்பு மூலமா அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலமா நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டார்.
இதன்போது, பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவாக 19 வாக்குகளும், இரகசிய வாக்கெடுப்புக்கு 9 வாக்குகளும் பதிவாகின.
பகிரங்க வாக்கெடுப்பில், கந்தையா யசீதன் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.டி.பி., மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் 13 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
நாகராசா பகீரதனுக்கு 9 வாக்குகள் கிடைத்தன. தேசிய மக்கள் சக்தி (6 வாக்குகள்) நடுநிலை வகித்தது.
இதேவேளை, உப தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் பேரின்பநாயகம் சுபாகர் மற்றும் சங்கு-சைக்கிள் கூட்டணியின்
சார்பில் தர்மகுலசிங்கம் உதயகுமார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பேரின்பநாயகம் சுபாகர் உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு












