Tag: பாவனை
சிகரெட் பாவனையால் 50பேர் உயிரிழப்பு
சிகரெட் பாவனையால் 50பேர் உயிரிழப்பு
சிகரெட் பாவனையால் 50பேர் உயிரிழப்பு ,சிகரெட் பாவனையால் இந்நாட்டில் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர் புகைப்பிடிப்பதால் உயிரிழப்பதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது.
நாளை (31) அனுசரிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் தொடர்பாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உலக புகையிலை எதிர்ப்பு
புகையிலைத் தொழிலின் குறுக்கீட்டிலிருந்து நமது குழந்தைகளைப் பாதுகாப்பதே இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாகும்.
தற்போது இலங்கையில் சிகரெட் பாவனை 9.1 வீதத்தால் குறைந்துள்ளதுடன் இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பாவனை வேகமாக குறைந்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புகையிலை நிறுவன அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டில் சிகரெட் உற்பத்தி 19 சதவீதம் குறைந்துள்ளது.
உலகில் சிகரெட் பாவனை குறைவடைந்து வரும் நாடுகளில் இலங்கையில் நல்ல போக்கு காணப்பட்டாலும் இன்னும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் சிகரெட் பாவனையில் ஈடுபடுவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
பன்னாட்டு புகையிலை நிறுவனங்கள்
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சிகரெட் பயன்படுத்துவதற்கு பன்னாட்டு புகையிலை நிறுவனங்கள் பல தந்திரங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் வைத்திய நிபுணர் சந்தன டி சில்வா தெரிவித்துள்ளார்.
Featured
இலங்கையில் மின்சார கார் பாவனைக்கு வருகிறது
இலங்கையில் மின்சார கார் பாவனைக்கு வருகிறது
இலங்கையில் சுற்று சூழல் பாதுகாப்பை அடுத்து புகையை தடுத்து வளி மண்டலத்தை காக்கும்
முகமாக மின்சார காரினை இறக்குமதி செய்திடும் நிலைக்கு இலங்கை தயராகி வருகிறது
இதற்கான அனுமதி தற்போது வழங்க படவுள்ளது
பிரிட்டன் உள்ளிட்ட ஐரோபிய நாடுகளில் 2040 ஆண்டிற்கு பின்னர் முற்று முழுதாக எரிபொருள் கார்கள்
தடை செய்ய படுகின்றன.
அதன் முன்னோடி நடவடிக்கையாக இந்த கார் இறக்குமதிக்கு இலங்கையும் தயராகி வருகிறது
யாழில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு- நிரம்பி வழியும் மருத்துவமனை – மருத்துவர் சிவயோகன் கவலை
யாழில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு- நிரம்பி வழியும் மருத்துவமனை – மருத்துவர் சிவயோகன் கவலை
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோய் தொடர்பாக ,
யாழ்ப்பாணம் பண்ணையில் உள்ள மாகாண சுகாதார
பணிப்பாளரினால் ஒழுங்கு செய்ய பட்ட கருத்தரங்கில் ,இடம்பெற்ற சம்பாசனையில் மன நல மருத்துவர் சிவமோகன் கவலை அடைந்துள்ளார்
போதைவஸ்து பாவனைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ,நோயாளர்கள் உடல் நலன் கருத்தில் அக்கறை செலுத்தி வரும் மன
நல மருத்துவர் சிவயோகன் ,குறித்த நோயாளிகள் பாவனைக்கு உட்படுத்த படும் போதைவஸ்து வழங்க முடியாத நிலையில் அவர் சோர்வுற்று காணப்படுகின்றார் ( withdrawal)
இந்த போதைவஸ்துக்கு அடிமையானவரகள் அதில் இருந்து விடுபட்டு முற்றாக ,இயல்பான மனிதர்கள் போல வழி நடத்தி
செல்வதற்கு ,அவர்கள் பாவனைக்கு உள்ளாக்கிய அந்த பொருள் வழங்க பட்டு படிப்படியாக அதில் இருந்து விடுதலை செய்திடும் ஒரு மருத்துவ முறைமை உள்ளது
அதனை இந்த மருத்துவர் கையாண்டு வருகிறார் , அதனால் இவர் இவ்விதம் ஆழ்ந்த கவலை உற்றுள்ளார் ,
இவர்கள் இந்த போதையை பாவிக்க முடியாத நிலையில் மூர்க்கத் தனத்தில் ஈடுபடுகின்றனர் ,மேலும் மந்திகை ,மருத்துவமனை விடுதிகள் நிரம்பி வழிகின்றன
வட மாகாணத்தில் நிலவும் பல சைக்கோ கொலையாளிகளினால் கொலை செய்ய பட்டவர்களை இயற்கையை மரணம் என
கூறப்பட்டு அந்த கொலைகள் மறைக்க பட்டு விடுகின்றன ,அவர்களை
வழிநடத்துபவர்கள் இந்த வடமாகாண சபையின் சில மருத்துவர்கள் மறைந்திருப்பதாக தகவல்கள் கசிகிறது
இவ்வாறான சம்பவங்களுக்கு ,இந்த வடக்கு சுகாதார பணிப்பாளர் நாயகம் என்ன பதிலை உரைக்க போகின்றார் ..?
பெரும் பொறிக்குள் இவர்கள் சிக்கியுள்ளதை வரும் காலங்களில் வெளியாக
போகும்,இவர்கள் உள்ளக செயல்பாடுகளின் வேலைத் திட்டம் அம்பல படுத்தும் என்பதை அடித்து கூறலாம் .
கொரனோ முடிவில் ,இவர்கள் உலக ஊடகங்களில் கொரனோ போல பேச படுவார்கள் என்பதே அந்த கசிவுகள் கூறும் விடயமாக உள்ளது
பல சைக்கோ கொலைகளின் மூல உறைவிடமாக இவர்கள் உள்ளதே அந்த அதிர்ச்சிகர விடயமாகும் .

- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த முன்மொழிவு

- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது

- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்

- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது














