சீரற்ற வானிலையால் ஆறாயிரத்து 723 பேர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீரற்ற வானிலையால் ஆறாயிரத்து 723 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலையால் ஆறாயிரத்து 723 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஆயிரத்து 752 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தென்மாகாணத்தில் ஆயிரத்து 161 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது

வீடியோ

தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ரயில் போக்குவரத்து பாதிப்பு

ரயில் போக்குவரத்து பாதிப்பு

ரயில் தடம் புரண்டதன் காரணமாக களனிவெளி பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்த தெரிவித்துள்ளார்.

இன்று காலை அவிசாவளை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி நாரஹேன்பிட்டி வரை ஒரேயொரு ரயில் மாத்திரமே பயணிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு ரயில் கொட்டாவ அல்லது ஹோமாகம நிலையங்களில் இருந்து அவிசாவளை வரை இயக்கப்படும் என பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்

No posts found.
மாத்தளையில் மண்சரிவு 163 பேர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மாத்தளையில் மண்சரிவு 163 பேர் பாதிப்பு

மாத்தளையில் மண்சரிவு 163 பேர் பாதிப்பு

இலங்கை மாத்தளை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ,53 குடும்பங்களை சேர்ந்த 263 மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

இந்த கால நிலை சீர்கேட்டால், பாதிக்க பட்ட மக்கள் ,தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

பாதிக்க பட்ட மக்களுக்கு ,அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளது .

மேலும் அந்த பகுதியில் ,மண்சரிவு எச்சரிக்கை அபாயம் விடுக்க பட்ட வண்ணம் உள்ளது .

அதிக மழை வீழ்ச்சியே ,இந்த மண்சரிவுக்கு காரணமாக மாற்றம் பெற்றுள்ளது .

No posts found.
இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு

இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 3 பேர் பலியாகியும் 13,902 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர் .

தொடர்ந்து பொழிந்து வரும் மழையால் 11 மாவட்டங்கள் பாதிக்க பட்டுள்ளன .

இந்த வெள்ள பெருக்கு மற்றும் காற்று பலமாக தொடர்வதால் உயிரிழப்புக்கள் மற்றும் சொத்தழிவுகள் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு
இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு

Posted in மருத்துவம்

பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவை சாப்பிடலாமா?

பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவை சாப்பிடலாமா?
பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனப் பொருட்கள் உணவுப் பொருட்களில் கலந்து உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதை பலரும் கவனத்தில் கொள்வதில்லை.

பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடியவை என்றாலும் அவை பல்வேறு நோக்கங்களுக்காக பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றன.

நிறைய பேர் உணவு பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துத்தான் உபயோகப்படுத்துகிறார்கள்.

சூடான உணவு பொருட்களையும் பிளாஸ்டிக் கொள்கலன்களில் அடைத்து வைத்து சாப்பிடவும் செய்கிறார்கள். பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனப் பொருட்கள் உணவுப்

பொருட்களில் கலந்து உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதை பலரும் கவனத்தில் கொள்வதில்லை.

  1. ஹார்மோன் வளர்ச்சியை சீர்குலைக்கும்:

ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, பிளாஸ்டிக் பொருட்களில் டைதைல் ஹெக்ஸைல் பித்தலேட் எனப்படும் சேர்மங்கள் உள்ளன.

இவை புற்றுநோய்க்கு வழிவகுக்கக்கூடியவை. மேலும் ஹார்மோன் செயல்பாடுகளை

சீர்குலைக்கக்கூடியவை. பிளாஸ்டிக் பாத்திரங்களில் சாப்பிடுவதால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் மற்றொரு ஹார்மோன், தைராய்டு ஹார்மோனாகும். இது

படிப்படியாக தைராய்டு பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். பாலியல் ஹார்மோன் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக விந்தணு உற்பத்தியை சீர்குலைத்துவிடும்.

  1. சிறுநீரக கற்கள்:

பிளாஸ்டிக் கொள்கலனில் சூடான உணவை சேமித்துவைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதனை சூழ்ந்திருக்கும் வெப்பநிலை

உணவில் உள்ள மெலமைனின் அளவை அதிகரிக்க செய்துவிடும். இது சிறுநீர் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகப்படுத்திவிடும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். எனவே சூடான உணவு

வகைகளை பிளாஸ்டிக் பொருட்களில் அடைப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக பீங்கான், எக்கு அல்லது கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  1. மார்பக புற்றுநோய்:

பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவை சாப்பிடலாமா?

மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பதற்கு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் முக்கிய காரணமாகும். ஹார்வர்ட் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின்படி,

கடந்த 10 ஆண்டுகளில் மார்பகப் புற்றுநோய் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு தினசரி

புழக்கத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துக்கொண்டிருப்பதே காரணமாகும். பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவு அல்லது தண்ணீரை சேமித்து வைக்கும்போது

அதிலிருக்கும் நச்சுக்கள் வெளியேறும். அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதித்துவிடும். குறிப்பாக அதிலிருக்கும் டையாக்சின் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடியது.

  1. கல்லீரல் புற்றுநோய்:

நோய் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றொரு ரசாயன பொருள், பித்தலேட்ஸ். இது சாக்லெட்டுகள், இனிப்புகள் மற்றும் பிற உணவுப் பொருட்களின் வெளிப்புற கவர்கள் (ரேப்பர்கள்) தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இது உணவு பொருளுடன் வினை

புரிந்து கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கல்லீரல் புற்றுநோய்க்கும் வழிவகுத்துவிடும். விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைத்துவிடும். ஆண்களின்

ஹார்மோன் அளவும் பாதிப்படையக்கூடும். பெரும்பாலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களில் உள்ள தண்ணீரை குடிப்பதால் கல்லீரல் புற்றுநோய் உண்டாகக்கூடும்.

  1. நோய் அபாயத்தை அதிகரிக்கும்:

ஊட்டச்சத்து நிபுணரின் கருத்து படி, பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான உணவை

உட்கொள்வது அல்லது உணவை சூடாக்க பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் பிளாஸ்டிக்கில்

பைபினைல் ஏ உள்ளது. இது உடல் பருமன், நீரிழிவு, புற்றுநோய், ஆஸ்துமா, கருத்தரிப்பில் சிக்கல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். மேலும் பெண்களுக்கு

பருவமடைதல் தொடர்பான சில உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளையும் உண்டாக்கும்.

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்

    பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்

    பிரிட்டனில் கடந்த தினம் 148 ஆயிரம் பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டும் ,சுமார் 143 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 842 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்

    அமெரிக்கா

    இதே போன்று அமெரிக்காவில் 233,485 பேர் பாதிக்க பட்டும் 869 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 16 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

    இந்தியா

    இதே போன்று இந்தியாவில் ,6,358 பேர் பாதிக்க பட்டும் 293 பேர் பலியாகியுள்ளனர்

    ரஷியா

    ரஷியாவில் 305,155 பேர் பாதிக்க பட்டும் 937பேர் பலியாகியுள்ளனர்

    தொடர்ந்து நோயின் தாக்குதல் தீவிரமாகி வருவதால் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடு முழு அடைப்புக்கு வரும் சில தினங்களில் இடம்பெற கூடும் என முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் கொரோனா நோயாளர் 241 ஆக அதிகரிப்பு

      இலங்கையில் கொரோனா நோயாளர் 241 ஆக அதிகரிப்பு

      இன்றைய தினம் (2020.04.17) இது வரையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரசு தொற்று நோயாளர்கள் மூவர் (3)

      பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட

      வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் கொவிட் 19 தொற்று பரவுவதைதடுக்கும் மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.

      இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 241 ஆகும்

      இன்றைய தினத்தில் புதிவான மூன்று நோயாளர்கள்; புனானை தனிமைப்படுத்துல்

      மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த பெண்களாவார்கள்.

      இதே போன்று இன்றைய தினம் சுமார் 530 பேருக்கு கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் கொரனோவால் 190 பாதிப்பு – 7 பேர் பலி

      இலங்கையில் கொரனோவால் 190 பாதிப்பு – 7 பேர் பலி

      நேற்றைய தினம் (2020.04.09) இலங்கையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரசு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 190

      ஆகுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் கொவிட் 19 தொற்று

      பரவுவதை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.

      நேற்றைய தினம் ஒரு நோயாளர் மாத்திரம் அடையாளங்காணப்பட்டார் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.


      134 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை, வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

      கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 32 வைத்தியசாலைகளில் 242 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


      கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் இதுவரை இலங்கையின் 14 மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


      இதேவேளை நோயாள்களுள் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரையில் பூரண குணமடைந்த நிலையில் 49 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

      இலங்கையில் கொரனோவால்
      இலங்கையில் கொரனோவால்