Tag: நிர்வாணமாக
நிர்வாணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடத்தும் சிறையில் சித்திரவதை
நிர்வாணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடத்தும் சிறையில் சித்திரவதை
நிர்வாணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடத்தும் சிறையில் சித்திரவதை ,நிர்வாணமாக நிர்வாணமாக்கப்பட்டது: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடத்தும் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக ஏமன் கைதி விவரிக்கிறார்.
ரகசிய சிறைகளில் இரண்டு
ரகசிய சிறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காவலில் இருந்த ஏமன் நாட்டைச் சேர்ந்த அலி ஹசன் அலி நீதி கோருகிறார்.
கிழக்கு ஏமனின் ஹத்ரமவுட் கவர்னரேட்டில் உள்ள ஒரு ரகசிய சிறையில் இருந்து அலி ஹசன் அலி பக்தியான் விடுவிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கும்
மேலாகிவிட்டது, ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காவலில் இருந்தபோது அவர் அனுபவித்த கொடூரங்களை அவரால் மறக்க முடியாது.
“இது மிகவும் கசப்பான மற்றும் மிகவும் வேதனையான அனுபவம்” என்று 39 வயதான அந்த நபர் கூறினார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மற்றும்
ஹத்ரமவுட்டின் ஜனாதிபதி மாளிகையில் உள்ள ஹத்ரமு எலைட் ஃபோர்சஸ் (HEF) என்று அழைக்கப்படும் உள்ளூர் யேமன் துருப்புக்களால் நடத்தப்படும் ரகசிய சிறையில் தான் அடைக்கப்பட்டதாக கூறினார்.
அவர்கள் என்னை நிர்வாணமாக்கி குளிர்ந்த நீரைப் பயன்படுத்தினர். “முதலில் ஹத்ராமி எலைட் படைகளின் உறுப்பினர்கள் என்னை விசாரித்தனர்,
அவர்கள் என்னை எமிரேடிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்
பின்னர் அவர்கள் என்னை எமிரேடிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்,” என்று அலி அல் ஜசீராவிடம் தொலைபேசியில் கூறினார்,
அவர் இரண்டு முறை தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறினார் – முதலில் 2016 இல் மற்றும் பின்னர் 2017 இல்.
சிறைச்சாலை, விலங்குகளுக்கு கூட ஏற்றதாக இல்லை என்று அலி கூறுகிறார். “மூடப்பட்ட, இருண்ட அறைகள், கைகள் கட்டப்பட்டு கண்கள் கட்டப்பட்டன.
இருபது நாட்கள் உங்கள் உடலை சுத்தம் செய்ய வாய்ப்பில்லாமல் சென்றன. அவர்கள் உடல் மற்றும் உடல் ரீதியான சித்திரவதை, பல முறை தனிமைச்
சிறை, பல முறை அடித்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தினர்,” என்று அலி நினைவு கூர்ந்தார்.
39 வயதான அவர் ஹத்ராமவுட்டில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து முதலில் கைது செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.
நான் இஸ்லாக் கட்சியின் உறுப்பினர் என்று பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டேன்,” என்று அவர் கூறினார், ஏமனில் உள்ள முக்கிய
எதிர்க்கட்சியான கட்சியின் உறுப்பினர் அல்ல என்பதை மறுத்தார். நாட்டின் முஸ்லிம் சகோதரத்துவமும் அதன் குடையின் கீழ் வருகிறது.
“எனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் எந்த தொடர்பும் இல்லை. பின்னர் விசாரணையாளர் கூட என்னிடம் கூறினார், ‘எனக்கு உங்களுக்கு எதிராக
எதுவும் இல்லை, ஆனால் எமிரேடிஸ் உங்களை விரும்பினார்,'” என்று அலி கூறினார்.
பெண்ணை நிர்வாணமாக கட்டி வைத்த முதலாளி கைது
பெண்ணை நிர்வாணமாக கட்டி வைத்த முதலாளி கைது
பெண்ணை நிர்வாணமாக கட்டி வைத்த முதலாளி கைது பொரள்ளையில் பெண் ஒருவர் நிர்வாணமாக காட்டப்படும் காணொளி தொடர்பாக தொழிலதிபர் கைது.
பொரள்ளையில் ஒரு பெண் நிர்வாணமாக காட்டப்படும் காணொளி
பொரள்ளையில் ஒரு பெண் நிர்வாணமாக காட்டப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து,
பிரபல தொழிலதிபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்திய நாட்களில் இந்த காணொளி பரவியதைத் தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பெண்கள்
துஷ்பிரயோகம் தடுப்பு பணியகம் விசாரணையைத் தொடங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான டிஐஜியின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.
பிரபல ஹோட்டலில் மறைந்திருந்தபோது கைது
முக்கிய சந்தேக நபரான பொரள்ளை, ஃபேர்ஃபீல்ட் கார்டன்ஸைச் சேர்ந்த 43 வயது தொழிலதிபர், ஞாயிற்றுக்கிழமை ஹிக்கடுவையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.
எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த 44 மற்றும் 55 வயதுடைய மேலும் இரண்டு நபர்கள் சந்தேக நபருக்கு உதவியதற்காகவும், காவல்துறையினரிடமிருந்து ஆதாரங்களை மறைத்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர் தனது வீட்டில் ஒரு குழுவினர் முன்னிலையில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பெண்ணின் நிர்வாணத்தை பதிவு செய்து,
வாட்ஸ்அப் குழு மூலம் வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அளுத்கம மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, மேலும் முக்கிய சந்தேக நபருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கைது செய்வதைத் தவிர்க்கும் முயற்சியில் சந்தேக நபர் சம்பவத்திற்குப் பிறகு பல பிரபலமான ஹோட்டல்களில் தங்கியிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
நிர்வாணமாக வீடியோகால் செய்த பெண்
நிர்வாணமாக வீடியோகால் செய்த பெண்
நிர்வாணமாக வீடியோகால் செய்த பெண் ,பெங்களூரை சேர்ந்த இளைஞர் டேட்டிங் செயலியில் பழக்கமான பெண்ணிடம் செல்போன் எண்ணை பகிர்ந்தார்.
இருவரும் வாட்ஸ்அப்பில் பேசி நெருக்கமாகினர். உடலுறவு பற்றி இருவரும் மெசேஜில் பேசி கொண்டனர். அதன்பிறகு அந்த பெண் வீடியோ காலில் நிர்வாணமாக போஸ் கொடுத்தார்.
மேலும் இளைஞரையும் ஆடைகளை அவிழ்க்க கட்டளையிட்டார்.
ஆசையை அடக்க முடியாமல் இளைஞரும் வீடியோ காலில் நிர்வாணமான நிலையில் இப்போது அவர் சிக்கலில் சிக்கி உள்ளார்.
பெங்களூர் ஆடுகோடி அருகே வசித்து வருபவர் 25 வயது இளைஞர். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு அவர் டேட்டிங் செயலியை தனது செல்போனில் டவுன்லோட் செய்தார்.
அந்த டேட்டிங் செயலியின் பெயர் Happn. இந்த செயலியின் வழியாக அவருக்கும் அனன்யா என்ற பெயர் கொண்ட பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் டேட்டிங் செயலி வழியாக தினமும் உரையாடி வந்தனர்.
செல்போன் எண்கள் மாற்றம்
இருவருக்கும் இடையே நட்பு உருவானது. அதன்பிறகு அவர்கள் தங்களின் செல்போன் எண்களை பரிமாறி கொண்டனர்.
இதனால் நினைத்த நேரத்தில் அவர்கள் 2 பேரும் மெசேஜை பரிமாறி வந்தனர். இருவருக்கும் நெருக்கம் அதிகரித்தது. நட்பு, நலம் விசாரிப்பு என்று உரையாடி இருவரும் அடுத்தக்கட்டத்துக்கு சென்றனர்.
நிர்வாண வீடியோ கால்
இருவரும் தங்களின் காதல் மற்றும் உடலுறவு குறித்த விஷயங்களை மெசேஜில் பகிர்ந்து கொண்டனர். இருவருக்கும் இடையேயான உரையாடல் ஆபாசமாக நடந்து வந்தது.
கடந்த 4ம் தேதி அந்த பெண் வாட்ஸ்அப்பில் இளைஞருக்கு வீடியோ கால் செய்தார். அப்போது அந்த பெண் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றினார்.
ஆடைகளை அவிழ்த்த இளைஞர்
மேலும் இளைஞரின் ஆடைகளையும் கழற்றும்படி அந்த பெண் பணித்தார்.இதனால் இளைஞரும் ஆசையில் தனது உடைகளை களைந்து நிர்வாணமாக வீடியோ கால்
பேசினார். சிறிது நேரத்துக்கு பிறகு உரையாடல் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு தான் அந்த இளைஞருக்கு சிக்கல் ஏற்பட்டது.
பணம் கேட்டு மிரட்டல்
அதாவது வீடியோ காலில் நிர்வாணமாக பேசிய அந்த பெண், இளைஞருக்கு போன் செய்து, ‛‛நிர்வாணமாக இருக்கும் வீடியோ உள்ளது.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைதளங்களில் வெளியிட உள்ளேன். இதை செய்யாமல் இருக்க ரூ.30 ஆயிரம் தர வேண்டும்” னெ்று கூறினார்.
அதாவது இளைஞர் ஆடைகளை களைந்து அந்த பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ காலில் பேசினார்.
அப்போது, அந்த பெண் அதனை ரெக்கார்ட் செய்து வைத்து மிரட்டியது தெரிந்தது. அப்போது தான் இளைஞர் அதிர்ந்து போனார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியே வந்தால் தன் மானம் போய்விடும் என்று இளைஞர் பயந்தார்.
பறிபோன ரூ.70,000
இதனால் ரூ.30 ஆயிரம் தருகிறேன். அந்த வீடியோவை டெலிட் செய்யும்படி பெண்ணிடம் கூறினார். அதற்கு அவரும் ‛ஓகே’ என்று கூறினார்.
இதையடுத்து இளைஞர் ரூ.30 ஆயிரத்தை அவருக்கு அனுப்பினார்.
அந்த பணத்தை பெற்று கொண்ட அந்த பெண், இதுதான் சமயம் என்று அந்த இளைஞரை மிரட்டி கூடுதல் பணம் கேட்டார். மேற்கொண்டு ரூ.40 ஆயிரம் வரை பறித்தார்.
மொத்தம் ரூ.70 ஆயிரத்தை அந்த இளைஞர் பறிகொடுத்தார். அதன்பிறகும் அந்த பெண் விடவில்லை.
தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டினார். இதனால் வேறு வழியின்றி அந்த இளைஞர் தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார்.
அவர்கள் கூறியபடி 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பெங்களூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மகளை நிர்வாணமாக படமெடுக்க முயற்சி கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
மகளை நிர்வாணமாக படமெடுக்க முயற்சி கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து பணம் தேட முயற்சித்த கணவனை மனைவி வெட்டிக் கொன்ற சம்பவம் வெல்லவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலை உதவியாளராக பணியாற்றிய 37 வயதுடைய வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டின் குளியலறையில் மறைந்திருந்த கணவன் மீது மனைவி, மிளகாய்ப் பொடியை வீசியதாகவும், மிளகாய்ப் பொடி தாக்குதலுக்கு உள்ளானவர்,
வெளியே வந்த போது, மனைவி வெட்டிக் கொன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகளை நிர்வாணமாக படமெடுக்க முயற்சி கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
தாக்குதலுக்கு இலக்காகி வீட்டின் வரவேற்பறையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் சமீபத்தில் யூடியூப் சேனலை தொடங்கி, பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அதை பிரபலப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வந்தது பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்தது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்
- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்
மலேசியாவில் நிர்வாணமாக தமிழர் சடலங்கள் கொலையாளிகள் கைது
மலேசியாவில் நிர்வாணமாக தமிழர் சடலங்கள் கொலையாளிகள் கைது
மலேசியாவில் மூன்று தமிழர்களை மிக கோரமாக கொலை செய்து நிர்வாணமாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்க பட்டிருந்தமனித சடலங்கள் மீட்பு கொலையாளிகள் கைது .
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிக கோரமாக படுகொலை செய்ய பட காரணம் என்ன என்பது தொடர்பாக போலீசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .
இதில் இலங்கை தம்பதிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர் .
வீட்டில் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து பொலிசாருக்கு தெரிவிக்க பட்டது அடுத்து , விரைந்து வந்த போலீசார் வீட்டை சோதனை செய்த பொழுது,மூன்று சடலங்கள் கண்டுபிடிக்க பட்டன .
மேலும் கொலையை புரிந்து விட்டு அருகில் உள்ள காட்டுக்குள் மறைந்திருந்த நபர்களும் கைது செய்ய பட்டனர் .
மலேசியாவில் நிர்வாணமாக தமிழர் சடலங்கள் கொலையாளிகள் கைது
குறித்த கொலை குற்ற செயல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
கொலை செய்யப்பட்ட நபர்களில் ஒருவர், அவர்களது மகன் என தெரிவிக்க படுகிறது .
நிர்வாணமாக மீட்கப் பட்ட சடலம் ஒன்று தொடர்பாக, பல சந்தேகங்கள் எழுப்ப பட்டுள்ளதால் ,விசாரணைகள் தீவிரம் பெற்றுள்ளன .
இதுவரை இந்த கொலைக்கான கரணம் என்ன என்பது தொடர்பில், குற்ற புலனாய்வு துறையினர் தெரிவிக்கவில்லை .
நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் ,பல திடுக்கிடும் விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
நிர்வாணமாக நடித்து ஆச்சர்யப்பட வைத்த ஆண்ட்ரியா
நிர்வாணமாக நடித்து ஆச்சர்யப்பட வைத்த ஆண்ட்ரியா
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார்
. மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஆண்ட்ரியா நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் பிசாசு 2. மிஷ்கின் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான பிசாசு படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியா இந்த காட்சியை சிறப்பாக நடித்து
முடித்துகொடுத்தாராம். படத்திற்காக ஆண்ட்ரியாவின் இந்த ரிஸ்க் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அந்த குறிப்பிட்ட காட்சி எடுக்கப்படும்போது படப்பிடிப்பு தளத்தில் மிக குறைவான நபர்களே இருந்துள்ளனர்.
ஆண்ட்ரியா
தமிழில் 2019 ஆம் ஆண்டு ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார்.






























