Tag: தொழிலில்
புத்தளத்தின் இறால் தொழிலில் பேரழிவு
புத்தளத்தின் இறால் தொழிலில் பேரழிவு
புத்தளத்தின் இறால் தொழிலில் பேரழிவு ,இலங்கைக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் ஒரு இலாபகரமான தொழிலாக இருந்து
இறால் ஏற்றுமதி
வரும் இறால் ஏற்றுமதி, நாட்டைத் தாக்கிய பேரிடர் சூழ்நிலை காரணமாக ஸ்தம்பித்துள்ளது என்று புத்தளம்
மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் நேற்று தெரிவித்தனர்.
புத்தளத்தில் உள்ள ஒரு இறால் பண்ணையின் உரிமையாளரான சரத் ரோட்ரிகோ, டெய்லி மிரரிடம்
கூறுகையில், கிட்டத்தட்ட 90 சதவீத பண்ணைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
“எதிர்பாராத அளவு தண்ணீர் வந்து எங்கள் பண்ணைகள் கடலுக்குச் சென்றதால், 2016 க்குப் பிறகு நாங்கள் மிக மோசமான இழப்புகளைச் சந்தித்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
இறால் பண்ணை உரிமையாளர்கள்
இறால் பண்ணை உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும், மாவட்டங்களில் இறால் வளர்ப்பாளர்களால் ஏற்பட்ட மொத்த இழப்பையும் இன்னும் கணக்கிடவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
“நாங்கள் தரவுகளைச் சேகரிக்கும் பணியில் இருக்கிறோம், மேலும் சில நாட்களில் சரியான தரவுகளைக் கொண்டு வர முடியும்.”
மற்றொரு இறால் விவசாயி சம்பத் பெர்னாண்டோ, விவசாயிகள் ஏற்றுமதியாளர்களுக்கு இருப்புக்களை வழங்க முடியாததால் இறால் ஏற்றுமதி நின்றுவிட்டது என்றார்.
நாட்டின் மொத்த இறால் ஏற்றுமதியில் 80 சதவீதம் புத்தளம் மாவட்டத்திலிருந்து வருவதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், தித்வா சூறாவளியால் புத்தளம் மாவட்டத்தில் சுமார் 600 இறால் பண்ணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக மீன்வள அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
- சீனாவின் அலுமினிய ஏற்றுமதி அதிகரிப்பு

- அமெரிக்காவின் முன்மொழிவுக்கான பதில் ‘பொருத்தமான நேரத்தில்’ வரும் என ஈரான்

- தெற்கு லெபனானில் உள்ள ஒன்பது கிராமங்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை

- கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்

- சலாவ எஸ்டேட்டில் கொள்ளை

- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்

- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது

- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- குருணேகேலா பிரதி மேயரின் கட்சி உறுப்பினர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கை

- காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு

- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன

- மே 15 அன்று இலங்கையில் பேபால் அறிமுகம்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை மிரட்டும் அமெரிக்கா டிரம்ப்

பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் சிக்கியது
பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் சிக்கியது
பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் சிக்கியது தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் தனது சகோதரியால் சிக்கினார்
தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில்
யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில் , சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.
பெண்ணின் சகோதரி உயிரிழப்பு
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.
பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும் , போதை
ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியதும் வந்துள்ளது.
ஆதரவற்றோர் இல்லத்தில்
பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் சகோதரன் தனது தங்கையை கொண்டு சென்று சேர்த்துள்ளார்.
பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன் , உடலில் காயங்கள் காணப்பட்டமையால் , இல்ல நிர்வாகத்தினரால் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார்.
பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதை
அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால் , முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது , பெண் பாலியல் வன்புணர்வுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளமையும் , பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாண பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் , பெண்ணின் சகோதரனே , பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும் , போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.
சகோதரன் கைது
அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்தியவேளை , சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் கைது
அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.















