Tag: தேர்தலை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு,கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டால், பரீட்சையின் போது வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளை தொடங்குவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது பரீட்சைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் பரீட்சை முடியும் வரை தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக, பரீட்சை சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நடவடிக்கை இந்த வாரம் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கட்சித் தலைவர் கூட்டம் நாளை (03) நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனுக்களை மீள அழைப்பது தொடர்பிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் கட்சி மாறியதாலும், சிலர் வெளிநாடு சென்றுள்ளதாலும், மேலும் சிலர் அரசியலில் இருந்து விலகியதாலும் உள்ளூராட்சி
மன்றத் தேர்தலுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்ய அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தேர்தலை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்
தேர்தலை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்
தேர்தலை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் ,ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (21) விசேட பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில், பயணிகள் அதிகாலையில் வந்து தங்களுடைய இடங்களுக்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 3300 பஸ்களும் இன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்
தேர்தலை நடத்தியிருந்தால் நாடு வங்கிரோத்தில் சென்றிருக்கும் ரணில்
தேர்தலை நடத்தியிருந்தால் நாடு வங்கிரோத்தில் சென்றிருக்கும் ரணில்
தேர்தலை நடத்தியிருந்தால் நாடு வங்கிரோத்தில் சென்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது இவ்வாறு தெரிவித்து இருக்கின்றார்.
இலங்கையுடைய பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்த நிலையில், தேர்தலை நடத்தியிருந்தால் ,அதுவே மிக பெரும் பின்னடைவு இலங்கைக்கு
ஏற்படுத்தி இருக்கும் எனவும் ,நாடு மிக மோசமான விளைவுகளை சந்தித்து இருக்கும் என ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமிசிங்கா கூட்டம் நடைபெற்ற போது இப்படி தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தலில் நடத்துமாறு மக்கள் வேண்டுதல் பிடித்திருந்தனர் அவ்வாறு நடத்தியிருந்தால் அதுவே எமக்கு பெறும் பின்னடைவையும் நாளை நாட்டினை மிகப்பெரும் பொருளாதார மோசடிக்கில் இழுத்துச் சென்றிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
தேர்தலை நடத்துவதற்கு பல மில்லியன்
தேர்தலை நடத்துவதற்கு பல மில்லியன் ரூபாய்கள் செயல்பட வேண்டியிருக்கும் அந்த ரூபாய்களை செலவு செய்து இருந்தால், நமது நாடு திவாலாகி சென்று இருக்கும் என்பதாக அவர் கருத்து காணப்படுகின்றது.
மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யும் முகமாக தேர்தலை நடத்தும் படி பல கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
ஆனால் அதனை நாம் மேற்கொள்ளவில்லை , அவ்வாறு மேற்கொண்டு இருந்தால் நாடு காணாமல் போயிருக்கும் என்று கருத்து வைத்துள்ளார்.
ராஜபக்ச குடும்பம் அடித்த கொள்ளையில்தான் நாடு வீழ்ச்சி கொண்டது என்பதை மறுக்கும் ரணில் விக்கிரமசிங்கா ,
கொரோனாவுக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளதான புதிய தடவயில் கருத்தை அவர் வைக்கின்றார்.
அபிவிருத்தி என்கின்ற பெயரில் நிதிகளை ஒதுக்கி ஒதுக்கி அதனை ஒதுக்கி வந்து அரசியல் கட்சிகள் இப்போது தேர்தல் வருகின்ற பொழுது மக்கள் மத்தியில் நல்ல நாடக கம்பெனிகளாக நடித்து வருகின்றனர் என்பதே உண்மை.
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா

- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

தேர்தலை பின்போடுங்க விக்னேஸ்வரன் அறிவிப்பு
தேர்தலை பின்போடுங்க விக்னேஸ்வரன் அறிவிப்பு
தேர்தலை பின்போடுங்க விக்னேஸ்வரன் அறிவிப்பு ,தேர்தலை பின் போடுமாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் அவர்கள் யாழில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை பின் போடுமாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் ஆன விக்னேஸ்வரன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் தமது பதவிகளை பறி கொடுத்து விடுவோம் அஞ்சும் இது போன்ற காட்சிகள், தற்போது ஜனாதிபதி தேர்தலை பின் போடுமாறு அறிவித்துள்ளது வேடிக்கையான சர்ச்சையை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது.
மருத்துவமனையில் வீதி இறங்கி மக்கள் போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில் ,
மக்களை மறந்த விக்கினேஸ்வரன் போன்றவர்கள்
அந்த மக்களைச் சென்று பார்வ பார்வைவிட நேரமற்று கிடக்கின்ற விக்கினேஸ்வரன் போன்றவர்கள், ஜனாதிபதி தேர்தலை பின் போடுமாறு கூறி வருவது தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களை போராடுவதாக காண்பித்திருக்கக்கூடிய இவர்கள் ,
தற்போது இவ்விதம் தெரிவித்து வருவது மக்கள் மத்தியில் சிரிப்பலைகளை நகைச்சுவையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
யாழ்ப்பாண மருத்துவமனைகளில் மருத்துவ மாபியாக்கள் அடாவடி அதிகரித்து காணப்படுகின்ற வேளையில் ,
பல்வேறுபட்ட ஊழல்கள் லஞ்சங்கள் சீர்குலைந்த நிர்வாக நடவடிக்கை காணப்படுவதாக மக்கள் கூட்டம் தெரிவித்து வருகின்ற இந்த வேளையில் ,
அந்த மருத்துவமனைக்கும் சுகாதார அமைச்சுக்கும் எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர் .
அவ்வாறு ஒரு காலப்பகுதியில் தற்பொழுது இவ்வாறான கருத்தை வெளியிட்டு இருக்கின்றார் ஐயா விக்னேஸ்வரன்.
தான் ஒரு நீதிமன்ற நீதிபதியாக தன்னை அடையாளப்படுத்தி நிற்கும் விக்னேஷ்வரன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஏதும் செய்யவில்லை ,
வழக்கையும் பதிவு செய்யவில்லை ,ஆனால் இப்பொழுது தேர்தலை பின் போடுமாறு தெரிவித்து வருவது அரசியல் வியாபாரிகள் இவர் என மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா

- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

தேர்தலை ஒத்திவைத்து வர்த்தமானி வெளியானது
தேர்தலை ஒத்திவைத்து வர்த்தமானி வெளியானது
2023 ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், தேர்தலுக்குத் தேவையான நிதியை திறைச்சேரி இன்னும் விடுவிக்காததால் ஏப்ரல் 25 ஆம் தேதி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Featured
தேர்தலை நடத்த அவசர படும் – கோத்தபாய
தேர்தலை நடத்த அவசர படும் – கோத்தபாய
சுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்தத் தேர்தல்கள்
ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தலை தொடர்ந்து பின்போடும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடையாது. எனினும், சுகாதார நிலைமைகள்
சீரடைந்து, சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் இல்லாதிருப்பின் தேர்தலை கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திரு தேஷப்பிரிய தெரிவித்தார்.
ஜுன் மாதம் 1ஆம் திகதியான இன்றைய வாக்காளர் தினம் தொடர்பாகவும் பாராளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவது
தொடர்பாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பின்வருமாறு:
1980 அம் ஆண்டு இலக்க 44 வாக்காளர்களை பதிவு செய்தல் சட்டத்தின் கீழ் இலங்கையில் வாக்குரிமையாளர் ஆவதற்கு
தகுதிகளைக் கொண்டவர்கள் பதிவு செய்யப்படுவார்கள். இந்த சட்டத்திற்கு அமைவாக குறிப்பிட்ட தினத்தில் 18 வயதை பூர்த்தி
செய்தல், ஏதாவது ஒருமுகவரியில் பதிவை கொண்டிருத்தல், இலங்கை பிரஜைக்கான ஏனைய தகுதி நீக்கங்களுக்கு
உட்படாதவராக இருந்தால் வாக்காளராக பதிவு செய்வதற்கு தகுதியுண்டு என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிட்ட திகதி; ஜுன் மாதம் 1ஆம் திகதி என்பதினால் ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் முதலாம் திகதி வாக்காளர்களின் தினமாக பெயரிடப்பட்டு தொடர்ச்சியாக வைபவ ரீதியாக
கொண்டாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வாக்காளராவதன் முக்கியத்துவம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக பல்வெறு
வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இருப்பினும் துரதிஷ்டவசமாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலினால் அந்த வருடத்தில் ஜுன் மாதம்
1ஆம் திகதியன்று இதனை சிறப்பாக கொண்டாடுவதற்கு முடியாமல் போனது. இதே போன்று இந்த வருடத்தில் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட ஊழுஏஐனு 19 தொற்று பரவவதை
கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக இம்முறையும் இந்த வைபவத்தை
கொண்டாடுவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முடியாமற்போனது. இருப்பினும் இந்த சந்தர்ப்பத்தி;ல் வாக்காளர்
பட்டியலில் பெயர் உள்வாங்கப்பட்டால் மாத்திரமே உங்களுக்கு வாக்களிப்பதற்கு உரிமை கிட்டும் என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
பாராளுமன்றம் பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்து
பாராளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் பெரும்பாலானோர் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்கின்றனர். நாம் தற்பொழுது அதாவது தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி
சட்டத்தரணியூடாக கௌரவ உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளோம். ஜுன் மாதம் 20ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்ற விடயத்தை. தேர்தலை நடத்தவதற்கு பொருத்தமான
தினத்தை குறிப்பிடுவதில் சட்ட ரீதியிலான தடை ஏற்படாவிட்டால் தேர்தல் ஆணைக்குழு இதற்காக வேறொரு தினத்தை குறிப்பிடும்.
சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு அமைவாக முடிந்தவரையில் தேர்தலை நடத்துவதே ஆணைக்குழுவின் விருப்பமாகும். இந்த தேர்தலை தொடர்ச்சியாக ஒத்திவைக்கும்
தேவை. தேர்தல் ஆணைக்குழுவிற்கு இல்லை. ஜனநாயக நாட்டில் பொதுமக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றமொன்று இடம்பெற வேண்டும் என்பது
அத்தியாவசியமாகும் என்பதை ஆணைக்குழு மிகவும் ஆணித்தரமாக நம்புகின்றது. இதன் மூலம் நாம் இப்பொழுது
மேற்கொண்டு வரும் அரசியல் யாப்பு பணிகளை அவ்வாறே மேற்கொள்ளுவோம்.
தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்ப செயற்பாடுகள் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்முறை நாம் சுகாதார பணியாளர் சபை உறுப்பினர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த
எதிர்பார்த்துள்ளோம். என்பதினால் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு கூடுதலான காலம் தேவையாகவுள்ளது. ஜுன் மாதம் 2ஆம்
வாரத்தில் இறுதியளவில் 3ஆம் வாரம் மத்திய பகுதியில் இவற்றை பூர்த்தி செய் முடியும் என்று எதிர்பார்க்கின்றோம். சட்ட ரீதியிலான தடை ஏற்படாமல் இருந்தால் தேர்தலை நடத்தவதற்கு எம்மால்
முடியும் சுகாதார வைத்திய ஆலோசனை தொடர்பில் எமக்கு கிடைத்த வழிகாட்டிகளுக்கு அமைவாக தேர்தலை எவ்வாறு
நடத்துவது என்பது தொடர்பில் . நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.. 60 தொடக்கம் 70 நாட்கள் காலப்பகுதி தேவைப்படும். எனெனில் முன்னரிலும் பார்க்க கூடுதலான
பணியாளர்களை பயன்படுத்த வேண்டும் என்பதினாலாகும். இருப்பினும் பணியாளர் சபையினர் தங்கியிருந்து கடமைகளை மேற்கொள்ளக்கூடிய மணித்தியாலங்கள்
வரையறுக்கப்பட்டிருப்பதனால் முகக்கவசத்தை அணிதல் போன்றவற்றினால் கூடுதலான காலம் தேவைப்படுகிறது. தேர்தலை நடத்துவதை தாமதப்படுத்தும் தேவை
ஆணைக்குழவிற்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். நாம் எதிர்பார்த்தோம் 650 தொடக்கம் 700 கோடி ரூபா செலவில் பாராளுமன்ற தேர்தலை நடத்த முடியுமென்று
சுகாதார பணியாளர்களை சேவையில் ஈடுபடுத்தல் ஏனைய சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு அமைவாக உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டால் செலவு ஓரளவு
அதிகரிக்கக்கூடும். இருப்பினும் இந்த அதிகரிக்கும் தொகையை திறைசேறி மூலம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த சுகாதார நிலைமை சிறப்பாக அமைந்தால் சட்ட தடைகள் இல்லையாயின் மிக விரைவில் கூடிய விரைவாகவும் இந்த தேர்தலை நடத்துதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதன் முழுமையான காணொளி , குரல் பதிவு கீழ்கண்ட லிங்கின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.



















