அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு ,2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள்

பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண்டாவது சரத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்ட

விதிமுறைகள் தன்னிச்சையானவை மற்றும் அதிகாரமற்றவை என்று மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்ப்பளித்தனர்.

தலைமை நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோத்தாகொட ஆகிய பெரும்பான்மை நீதியரசர்கள் இந்த தீர்ப்பை வழங்கினர்.

இருப்பினும், மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வின் உறுப்பினரான நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர, தனது தீர்ப்பை வழங்கும்போது, பதில் ஜனாதிபதியின்

அவசரகாலச் சட்ட பிரகடனம்

அவசரகாலச் சட்ட பிரகடனம் ஊடாக அடிப்படை மனித உரிமைகளை மீறப்படவில்லை என்று கூறினார்.

மாற்றுக் கொள்கை மையம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையளார் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளைஞர்

இயக்கம் ஆகியவை இந்த அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

மனுதாரர்களின் வழக்கு கட்டணங்களை அரசாங்கம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு ,உள்ளூராட்சி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் பிரிவு 12 (பி), அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை பாராளுமன்றத்தில் முன்வைத்த சபாநாயகர், எஞ்சிய சரத்துகள் அரசியலமைப்புக்கு அமைவாக உள்ளதாக, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சற்று நேரத்திற்கு முன்னர், பாராளுமன்றதலதில் தெரிவித்தார்

ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
Posted in உலக செய்திகள்

ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூயார்க்கில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க குற்றவியல் விசாரணையில் வணிக பதிவுகளை பொய்யாக்கிய 34 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

முன்னாள் அல்லது பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் குற்றத்திற்காக தண்டிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
அவருக்கு ஜூலை 11 அன்று தண்டனை நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சட்ட வல்லுநர்கள் அபராதம் விதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு என்று கூறுகிறார்கள்.

இந்த தீர்ப்பை “அவமானம்” என்று கூறிய டிரம்ப், வழக்கை விசாரித்த நீதிபதி மெர்சனை தாக்கியதாகத்தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்ப் எதிர்வரும் நவம்பர் தேர்தலில் ஜோ பிடனை தோற்கடித்து வெள்ளை மாளிகைக்கு திரும்ப வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்த வழக்கின் மையத்தில்; இது தொடர்பாக ட்ரம்ப்புடனான பாலியல் ரீதியான என்கவுண்டர் என்று கூறப்படும் ஸ்டோர்மி டேனியல்ஸ் உட்பட 22 சாட்சிகளிடம் ஆறு வாரங்களாக நீதிமன்றம் விசாரணை நடத்தியது. 2016 தேர்தலுக்கு சற்று முன்னர் அவருடன் சர்ச்சையில் ஈடுபட்ட முன்னாள்

திரைப்பட நட்சத்திரத்திரமான டானியலை அமைதிப்படுத்துவதற்காக தனது முன்னாள் வழக்கறிஞர் மிஷல் ஹோஹனுக்கு கொடுத்த 130000 டொலர்

அமைதிப் பணத்தை மறைத்ததாக ட்ரம்ப் குற்றம் சாட்டப்பட்டார். 12 நீதிபதிகள் இரண்டு நாட்களாக விவாதித்து ஒருமனதாக தீர்ப்பு வழங்கினர் என்று கூறப்படுகின்றது.