Tag: டிரம்ப்
டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும்
வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார்.
இந்த டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. இதனால் வன்முறையை
தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து அதிரடியாக நீக்கினர்.
மேலும் இதுபோன்றதொரு வன்முறை சம்பவம் பரவாமல் தடுக்கும் வகையில் டிரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் பேஸ்புக் கணக்கு முடக்கம் – கொதிக்கும் டிரம்ப்
டிரம்ப் பேஸ்புக் கணக்கு முடக்கம் – கொதிக்கும் டிரம்ப்
அமெரிக்காவின் ஆளும் அதிபர் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸகிராம்
கணக்குகள் பதிவுகள் பதிவு செய்ய முடியாதபடி பேஸ்புக் நிறுவனம் தடை செய்துள்ளது
இவரது தடை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இந்த தடை
நீடிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது
தானே அடுத்த ஜனாதிபதி என தெரிவித்து பதிவு பகிரப்பட்ட
நிலையில் இந்த தடை ஏற்படுத்த பட்டுள்ளது
சீனா 58 ரஷியா கம்பெனிகளுக்கு தடை போட்ட டிரம்ப் – ஏன் இந்த அவசரம் ..?
சீனா 58 ரஷியா கம்பெனிகளுக்கு தடை போட்ட டிரம்ப் – ஏன் இந்த அவசரம் ..?
அமெரிக்காவில் அளவும் அதிபரும் எதிர்வரும் இருபதாம் திகதியுடன்
வீட்டுக்கு செல்லவுள்ள டிரம்ப் சீனாவின்
58 கம்பெனிகளுக்கும் 45 ரசியா கம்பெனிகளுக்கும் செயல்பட அதிரடி தடை விதித்துள்ளது
தான் தேர்தலில் தோற்றுப்போக இந்த நிறுவநங்கள்; பின்புலத்தில் இருந்து செயல் பட்டதாக அவர் கருதுவதே இதற்கு காரணமாம்
அது மட்டுமல்ல இவை இராணுவ உபகாரணகளை ஏற்றுமதி செய்யும்
நிறுவனம் என சுட்டி காட்ட பட்டுள்ளது ,
அடுத்து ஆட்சிக்கு வரவுள்ள ஜு பைடன் இந்த நிறுவனங்கள் மீது
விதிக்க பட்ட தடையை நீக்குவாரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்
2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப்
2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப்
அமெரிக்காவில் 2024-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட போவதை டிரம்ப் சூசகமாக தெரிவித்தார்.
2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப் சூசகம்
அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது.
இதில் குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பைடன் போட்டியிட்டார்.
கொரோனா பரவல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான தபால் வாக்குகள் இந்த
தேர்தலில் பதிவானதால் வாக்கு எண்ணிக்கை 4 நாட்களாக நீடித்தது.
இதில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே இழுபறி நீடித்தது. எனினும் ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் இருந்து வந்த ஜோ
பைடன் ஆட்சி அமைப்பதற்கு தேவையான வாக்குகளை விட அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவியேற்கிறார். ஆனால் டிரம்ப் தனது
தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார்.
அது மட்டுமின்றி தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டும் அவர் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். ஆனாலும் இந்த சட்ட போராட்டத்தில்
அவர் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறார். எனவே டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார். டிரம்ப்
மற்றும் அவரது குடும்பத்தினர் வெள்ளை மாளிகையில் கொண்டாடும் கடைசி கிறிஸ்துமஸ் இதுவாகும்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட தொடக்க விழாவில் டிரம்பின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய டிரம்ப், 2024-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட போவதை சூசகமாக தெரிவித்தார்.
இதுபற்றி அவர் பேசுகையில் “இந்த 4 ஆண்டுகள் ஆச்சரியமானவையாக இருந்தது. நாங்கள் இன்னும் 4 ஆண்டுகளுக்கு இருக்க முயற்சி செய்கிறோம். இது இல்லையெனில் அதற்கு அடுத்த 4 ஆண்டுகளில் நான் உங்களை பார்ப்பேன்” எனக் கூறினார்.
டிரம்பின் இந்த பேச்சு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அவரின் விருப்பத்தை காட்டுவதோடு, தற்போதைய தேர்தலில்
தனது தோல்வியை ஒப்புக்கொள்ள அவர் தயாராகி விட்டார் என்பதையும் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே ஜனாதிபதி தேர்தலின் முடிவை மாற்றக்கூடிய அளவுக்கு மோசடி நடந்ததற்கான எந்த ஆதாரமும் அமெரிக்க நீதித்துறையால் கண்டுபிடிக்கப்படவில்லை என அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து அவர் கூறுகையில் “தேர்தல் மோசடி தொடர்பாக அமெரிக்க வக்கீல்கள் மற்றும் மத்திய புலனாய்வு போலீசார் தங்களுக்கு கிடைத்த குறிப்பிட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இன்றுவரை தேர்தலில் வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்த கூடிய அளவில் மோசடியை நாங்கள் காணவில்லை” எனக் கூறினார்.
டிரம்பின் தீவிர விசுவாசியான வில்லியம் பார் தேர்தல் குறித்து டிரம்பின் குற்றச்சாட்டுக்கு முரணான கருத்தை தெரிவித்துள்ளது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு அதிகாரியை அதிரடியாக நீக்கிய டிரம்ப்
தேர்தல் பாதுகாப்பு அதிகாரியை அதிரடியாக நீக்கிய டிரம்ப்
அமெரிக்க தேர்தல் தொடர்பாக டிரம்பின் குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் பாதுகாப்பு அதிகாரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மோசடி குற்றச்சாட்டை நிராகரிப்பதா? -தேர்தல் பாதுகாப்பு அதிகாரியை அதிரடியாக நீக்கிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிபட
தெரிவித்துள்ளனர். டிரம்பின் குற்றச்சாட்டை தேர்தல் பாதுகாப்பு உயர் அதிகாரி கிறிஸ் கிரெப்சும் மறுத்திருந்தார். சமீபத்தில் அவர்
வெளியிட்டிருந்த அறிக்கையில், நவம்பர் 3ல் நடந்த தேர்தல், அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பானது என்று கூறியிருந்தார்.
இதனால் மேலும் கடுப்பான அதிபர் டிரம்ப், தேர்தல் அதிகாரி கிறிஸ் கிரெப்சை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். இதற்கான
அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டார் டிரம்ப். கிறிஸ் கிரெப்சின் பதவிநீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறி உள்ளார்.
‘தேர்தல் பாதுகாப்பு குறித்து கிறிஸ் கிரெப்ஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மிகவும் தவறானது. தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் நடந்துள்ளன. எனவே, கிறிஸ்
கிரெப்ஸ் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்’ என டிரம்ப் மேலும் கூறி உள்ளார்.
ஆனால், கிறிஸ் கிரெப்ஸ் தனது பதவி பறிபோகும் என கடந்த வாரமே தன் நண்பர்களிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தலில் தோற்றுவிட்டேன் – ஒப்பு கொண்ட டிரம்ப்
தேர்தலில் தோற்றுவிட்டேன் – ஒப்பு கொண்ட டிரம்ப்
அமெரிக்காவில் ஆளும் அதிபர் டிரம்ப் தான் தேர்தலில் தோற்று
விட்டதாக முதன் முறையாக ஒப்புக்கொண்டு டுவிட் செய்துள்ளார்
தை மாதம் இருபதாம் திகதி இவர் வெள்ளை மாளிகையை விட்டு விலகி
பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் .அது நடக்குமா
என்ற சர்ச்சை சந்தேகம் நிலவி வந்த நிலையில் டிரம்ப் இவ்விதம் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
2024 இல் தேர்தலில் போட்டியிடுவேன் டிரம்ப் போட்ட குண்டு
2024 இல் தேர்தலில் போட்டியிடுவேன் டிரம்ப் போட்ட குண்டு
நடந்து முடிந்த அமெரிக்கா தேர்தலில் சண்டியரும் ,சர்ச்சை
நாயகருமாக விளங்கி வந்த டிரம்ப் படுதோல்வியை சந்தித்தார்
இதனை அடுத்து தற்பொழுது ஜோ பைடன் மகத்தான வெற்றியுய் தட்டி
சென்ற நிலையில் எதிர்வரும் 2024 இல் மீளவும் ஜனாதிபதியாக
போட்டியிட்டு ஆட்சியில் அமர்வேன் என டிரம்ப் சூளுரைத்துள்ளார்
அமெரிக்காவின் மகிந்த ராஜபக்ஸா இவர் தாங்க
சீனா வங்கியில் வாங்கி கணக்கு- மாட்டிய டிரம்ப்
சீனா வங்கியில் வாங்கி கணக்கு- மாட்டிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனா வங்கியில் கணக்கு வைத்திருப்பது தெரியவந்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ளது.
சீனாவில் உள்ள வங்கியில் டிரம்ப் கணக்கு வைத்துள்ளார் -நியூயார்க் டைம்ஸ் தகவல்
சீனாவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் குறித்து அதிபர் டிரம்ப் விமர்சித்ததோடு இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போரை தூண்டி விட்டார்.
இந்த நிலையில் டிரம்பின் தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் நிதி விவரங்கள் தொடர்பான ஆவணத்தை பெற்ற நியூயார்க் டைம்ஸ்,
அவருக்கு சீனா வங்கியில் கணக்கு உள்ளது என்பதை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கு இருப்பதாக ஒப்புக்கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் ஜனாதிபதியானபோது, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க கூட்டாட்சி வரிகளில் 750 டாலர்கள் செலுத்தி உள்ளார்.
அவரது சீன வங்கிக் கணக்கு உள்ளூர் வரிகளில் 188,561 டாலர் செலுத்தியுள்ளது என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சீனா வங்கி கணக்கானது டிரம்ப் இன்டர்நேஷனல் ஓட்டல் மேனேஜ்மென்ட் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் 2013 மற்றும் 2015 க்கு இடையில் உள்ளூர் வரிகளை செலுத்தி உள்ளது.
இது ஆசியாவில் ஓட்டல் ஒப்பந்தங்களுக்கான சாத்தியங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டதாக டிரம்ப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் -மற்றும் மனைவிக்கு கொரனோ
அமெரிக்கா அதிபர் டிரம்ப் -மற்றும் மனைவிக்கு கொரனோ
ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை
ஒத்திவைத்த ட்ரம்ப், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன.
அதில், இருவருக்கும் பொசிட்டிவ் என வந்துள்ளது. இத்தகவலை டுவிட்டரில்
பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். அத்துடன், உடனடியாக தனிமைப்படுத்தும்
நடைமுறை மற்றும் சிகிச்சையை தொடங்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.
2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் டிரம்ப்
2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் டிரம்ப்
எப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியம் இல்லாமல் போகிறதோ அப்போது மட்டுமே முகக்கவசத்தை
பயன்படுத்துவதாகவும், 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தான் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் டிரம்ப்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 40 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தான் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறுகையில் “ நான் தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனை செய்கிறேன்.
சராசரியாக 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனைக்கு என்னை உட்படுத்திக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது “நான்
எப்போதும் முகக்கவசம் வைத்திருப்பேன். ஆனால் எப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியம் இல்லாமல் போகிறதோ அப்போது மட்டுமே முகக்கவசத்தை பயன்படுத்துவேன். மக்களும்
அதைப் போலவே தேவைப்படும்போது மட்டும் முகக்கவசத்தை பயன்படுத்த அறிவுறுத்துகிறேன்” என டிரம்ப் பதிலளித்தார்.
மேலும் அவர் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவதற்கு முன்பு அது மிகவும் மோசம் அடையும் என எச்சரிக்கை விடுத்தார்.
அதேசமயம் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் இறப்பு மற்றும் பாதிப்பு விகிதம் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தப் பேட்டியின் போது டிரம்ப் கொரோனா வைரசை மீண்டும் சீனா வைரஸ் என குறிப்பிட்டார்.
டிரம்ப் தேர்தல் பரப்புரை விளம்பரத்தை அகற்றிய டிவிட்டர் – அதிர்ச்சியில் அமெரிக்கா அதிபர்
டிரம்ப் தேர்தல் பரப்புரை விளம்பரத்தை அகற்றிய டிவிட்டர் – அதிர்ச்சியில் அமெரிக்கா அதிபர்
உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் அதிகம் பயனப்டுத்தி வரும் டுவிட்டர்
தளத்தில் ஆளும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது தேர்தல் பரப்புரை விளம்பரத்தை புரிந்து வந்தார்
மேற்படி இவரது விளம்பரத்தை டிவிட்டர் அதிரடியாக நீக்கியுள்ளது
குறித்த சமூக வலைதளத்தின் இந்த அதிரடி நடவடிக்கியால் டிரம்ப் கடும் கொதிப்பில் உறைந்துள்ளார்
டிரம்ப் பதவி விலக கோரி தீர்மானம் -தேடி வந்த ஆப்பு
என் மீது கொண்டு வந்துள்ள பதவி நீக்க தீர்மானத்தை நிராகரியுங்கள் என செனட் உறுப்பினர்களுக்கு டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என் மீது கொண்டு வந்துள்ள பதவி நீக்க தீர்மானத்தை நிராகரியுங்கள்- டிரம்ப் வேண்டுகோள்
டிரம்ப்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அதிபராக இருப்பவர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் பதவி பறிப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை, செனட் சபை என 2 அமைப்புகள் உள்ளன.
முதலில் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். அதன்பிறகு அந்த தீர்மானம் செனட் சபைக்கு
கொண்ட செல்லப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் அதிபருடைய பதவியை பறிக்க முடியும்.
தற்போதைய அதிபர் டொன்ல்டு டிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பதவி பறிப்பு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது.
டிரம்ப் மீது 2 குற்றச்சாட்டுகளை கூறி இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.
டிரம்ப் பதவி விலக கோரி தீர்மானம் -தேடி வந்த ஆப்பு
அடுத்து நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோபைடன் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவரது மகன் உக்ரைன் நாட்டில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். அவர் மீது மோசடி வழக்குப்பதிவு
செய்யும்படி உக்ரைன் அதிபருக்கு டொனல்டு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததுடன் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் பதவி பறிப்பு தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் கடந்த அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் மேலும் சில தவறுகளில் சம்பந்தப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டு இருந்தது.
இது சம்பந்தமாக பாராளுமன்றம் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது.
அதற்கு டிரம்ப் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மேலும் சாட்சிகளுக்கு இடையூறு அளிக்கிறார் என்றும்
குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் 2-வது பதவ பறிப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த இரு தீர்மானங்களும் பிரதிநிதிகள் சபையில் கடந்த மாதம் 18-ந் தேதி விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கே அதிக உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் இரு தீர்மானங்களும் சபையில் நிறைவேறின.
அடுத்ததாக இந்த தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி
பெலோசி அந்த தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்ப தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இன்னும் ஒரு வாரத்தில் செனட் சபைக்கு அனுப்பப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் செனட் சபையில் விவாதம் நடத்தி ஓட்டெடுப்புக்கு விடப்படும்.
பிரதிநிதிகள் சபையை பொறுத்த வரையில் பாதிக்கு மேல் ஓட்டு கிடைத்தாலே தீர்மானம் நிறைவேறி விடும்.
ஆனால், செனட் சபையில் 3-ல் 2 பங்கு பேர் ஆதரவாக ஓட்டு போட்டால்தான் தீர்மானம் நிறைவேறியதாக கருதப்படும்.
செனட் சபையில் டிரம்ப் கட்சியான குடியரசு கட்சிக்கே அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே, அங்கு
தீர்மானம் நிறை வேறுவதற்கு வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. இதனால் டிரம்ப் பதவி பறிபோகாது என்றே கருதப்படுகிறது.
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் டுவிட்டர் தளம் மூலம் தனது கருத்தை வெளியிட் டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
என் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் ஜனநாயக கட்சியினர் குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்கள். அவர்களால் எந்த
சாட்சியத்தையும் கொண்டு வர முடியவில்லை. மோசடியாக புகார் கூறுகிறார்கள்.
நாங்கள் நியாயத்துக்காக போராடுகிறோம் என்பது போல் பிரதிநிதிகள் சபை சபாநாயகரும், ஜனநாயக கட்சியினரும்
கூக்குரலிடுறார்கள். அவர்களுடைய செயல் நியாயமற்றது. பாராளுமன்ற வரலாற்றுக்கே களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.
நான் எந்த தவறும் செய்யாதபோது, என் மீது ஏன் களங்கம் இருக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டு விவரங்களை
முழுமையாக படித்து பாருங்கள். அதில் எந்த தவறையும் கண்டுபிடிக்க முடியாது.
இந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும். புரளியாக கூறப்பட்ட இந்த குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதை விட வேறு எதுவும் நடக்காது. என் மீது
டிரம்ப் பதவி விலக கோரி தீர்மானம் -தேடி வந்த ஆப்பு
விசாரணைக்காவது செனட் சபை ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதுவும் நடைபெறாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனால், டிரம்ப் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக பிரதிநிதிகள் சபை சபா நாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கூறிய அவர் “அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.
இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதற்கான இ.மெயில்கள்
கிடைத்துள்ளன. அவற்றை நிரூபிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தயாராக உள்ளார்.
இது தொடர்பாக செனட் சபையே தற்போது முடிவு எடுக்க வேண்டும்” என்றார்..டிரம்ப் பதவி விலக கோரி






