Posted in உலக செய்திகள்

அமெரிக்கா அதிபர் டிரம்ப் -மற்றும் மனைவிக்கு கொரனோ

அமெரிக்கா அதிபர் டிரம்ப் -மற்றும் மனைவிக்கு கொரனோ

ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை

ஒத்திவைத்த ட்ரம்ப், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன.

அதில், இருவருக்கும் பொசிட்டிவ் என வந்துள்ளது. இத்தகவலை டுவிட்டரில்

பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். அத்துடன், உடனடியாக தனிமைப்படுத்தும்

நடைமுறை மற்றும் சிகிச்சையை தொடங்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.

Posted in உலக செய்திகள்

2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் டிரம்ப்

2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் டிரம்ப்

எப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியம் இல்லாமல் போகிறதோ அப்போது மட்டுமே முகக்கவசத்தை

பயன்படுத்துவதாகவும், 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தான் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 40 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தான் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறுகையில் “ நான் தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனை செய்கிறேன்.

சராசரியாக 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனைக்கு என்னை உட்படுத்திக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது “நான்

எப்போதும் முகக்கவசம் வைத்திருப்பேன். ஆனால் எப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியம் இல்லாமல் போகிறதோ அப்போது மட்டுமே முகக்கவசத்தை பயன்படுத்துவேன். மக்களும்

அதைப் போலவே தேவைப்படும்போது மட்டும் முகக்கவசத்தை பயன்படுத்த அறிவுறுத்துகிறேன்” என டிரம்ப் பதிலளித்தார்.

மேலும் அவர் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவதற்கு முன்பு அது மிகவும் மோசம் அடையும் என எச்சரிக்கை விடுத்தார்.

அதேசமயம் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் இறப்பு மற்றும் பாதிப்பு விகிதம் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தப் பேட்டியின் போது டிரம்ப் கொரோனா வைரசை மீண்டும் சீனா வைரஸ் என குறிப்பிட்டார்.

Posted in உலக செய்திகள்

டிரம்ப் தேர்தல் பரப்புரை விளம்பரத்தை அகற்றிய டிவிட்டர் – அதிர்ச்சியில் அமெரிக்கா அதிபர்

டிரம்ப் தேர்தல் பரப்புரை விளம்பரத்தை அகற்றிய டிவிட்டர் – அதிர்ச்சியில் அமெரிக்கா அதிபர்

உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் அதிகம் பயனப்டுத்தி வரும் டுவிட்டர்

தளத்தில் ஆளும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது தேர்தல் பரப்புரை விளம்பரத்தை புரிந்து வந்தார்

மேற்படி இவரது விளம்பரத்தை டிவிட்டர் அதிரடியாக நீக்கியுள்ளது

குறித்த சமூக வலைதளத்தின் இந்த அதிரடி நடவடிக்கியால் டிரம்ப் கடும் கொதிப்பில் உறைந்துள்ளார்

      Posted in உலக செய்திகள்

      டிரம்ப் பதவி விலக கோரி தீர்மானம் -தேடி வந்த ஆப்பு

      என் மீது கொண்டு வந்துள்ள பதவி நீக்க தீர்மானத்தை நிராகரியுங்கள் என செனட் உறுப்பினர்களுக்கு டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

      என் மீது கொண்டு வந்துள்ள பதவி நீக்க தீர்மானத்தை நிராகரியுங்கள்- டிரம்ப் வேண்டுகோள்
      டிரம்ப்
      வாஷிங்டன்:

      அமெரிக்காவில் அதிபராக இருப்பவர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் பதவி பறிப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

      அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை, செனட் சபை என 2 அமைப்புகள் உள்ளன.

      முதலில் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். அதன்பிறகு அந்த தீர்மானம் செனட் சபைக்கு

      கொண்ட செல்லப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் அதிபருடைய பதவியை பறிக்க முடியும்.

      தற்போதைய அதிபர் டொன்ல்டு டிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பதவி பறிப்பு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது.

      டிரம்ப் மீது 2 குற்றச்சாட்டுகளை கூறி இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

      டிரம்ப் பதவி விலக கோரி தீர்மானம் -தேடி வந்த ஆப்பு

      அடுத்து நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோபைடன் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

      இவரது மகன் உக்ரைன் நாட்டில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். அவர் மீது மோசடி வழக்குப்பதிவு

      செய்யும்படி உக்ரைன் அதிபருக்கு டொனல்டு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததுடன் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

      இந்த புகாரின் அடிப்படையில் பதவி பறிப்பு தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

      மேலும் கடந்த அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் மேலும் சில தவறுகளில் சம்பந்தப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டு இருந்தது.

      இது சம்பந்தமாக பாராளுமன்றம் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது.

      அதற்கு டிரம்ப் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மேலும் சாட்சிகளுக்கு இடையூறு அளிக்கிறார் என்றும்

      குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் 2-வது பதவ பறிப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து இருந்தனர்.

      இந்த இரு தீர்மானங்களும் பிரதிநிதிகள் சபையில் கடந்த மாதம் 18-ந் தேதி விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

      பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கே அதிக உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் இரு தீர்மானங்களும் சபையில் நிறைவேறின.

      அடுத்ததாக இந்த தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி

      பெலோசி அந்த தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்ப தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

      இன்னும் ஒரு வாரத்தில் செனட் சபைக்கு அனுப்பப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் செனட் சபையில் விவாதம் நடத்தி ஓட்டெடுப்புக்கு விடப்படும்.

      பிரதிநிதிகள் சபையை பொறுத்த வரையில் பாதிக்கு மேல் ஓட்டு கிடைத்தாலே தீர்மானம் நிறைவேறி விடும்.

      ஆனால், செனட் சபையில் 3-ல் 2 பங்கு பேர் ஆதரவாக ஓட்டு போட்டால்தான் தீர்மானம் நிறைவேறியதாக கருதப்படும்.

      செனட் சபையில் டிரம்ப் கட்சியான குடியரசு கட்சிக்கே அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே, அங்கு

      தீர்மானம் நிறை வேறுவதற்கு வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. இதனால் டிரம்ப் பதவி பறிபோகாது என்றே கருதப்படுகிறது.

      இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் டுவிட்டர் தளம் மூலம் தனது கருத்தை வெளியிட் டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

      என் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் ஜனநாயக கட்சியினர் குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்கள். அவர்களால் எந்த

      சாட்சியத்தையும் கொண்டு வர முடியவில்லை. மோசடியாக புகார் கூறுகிறார்கள்.

      நாங்கள் நியாயத்துக்காக போராடுகிறோம் என்பது போல் பிரதிநிதிகள் சபை சபாநாயகரும், ஜனநாயக கட்சியினரும்

      கூக்குரலிடுறார்கள். அவர்களுடைய செயல் நியாயமற்றது. பாராளுமன்ற வரலாற்றுக்கே களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

      நான் எந்த தவறும் செய்யாதபோது, என் மீது ஏன் களங்கம் இருக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டு விவரங்களை

      முழுமையாக படித்து பாருங்கள். அதில் எந்த தவறையும் கண்டுபிடிக்க முடியாது.

      இந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும். புரளியாக கூறப்பட்ட இந்த குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதை விட வேறு எதுவும் நடக்காது. என் மீது

      டிரம்ப் பதவி விலக கோரி தீர்மானம் -தேடி வந்த ஆப்பு

      விசாரணைக்காவது செனட் சபை ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதுவும் நடைபெறாது.

      இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      ஆனால், டிரம்ப் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக பிரதிநிதிகள் சபை சபா நாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

      இதுபற்றி கூறிய அவர் “அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.

      இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதற்கான இ.மெயில்கள்

      கிடைத்துள்ளன. அவற்றை நிரூபிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தயாராக உள்ளார்.

      இது தொடர்பாக செனட் சபையே தற்போது முடிவு எடுக்க வேண்டும்” என்றார்..டிரம்ப் பதவி விலக கோரி