Posted in சினிமா

அரசியலில் களமிறங்கும் சோனு சூட்

அரசியலில் களமிறங்கும் சோனு சூட்


தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்த நடிகர் சோனு சூட், தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அரசியலில் களமிறங்கும் சோனு சூட்
சோனு சூட்


தமிழில் சந்திரமுகி, அருந்ததி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சோனு சூட். இந்தியில் பிரபல வில்லன் நடிகராக இருக்கிறார். சோனுசூட் கொரோனா ஊரடங்கில் புலம் பெயர்ந்த

தொழிலாளர்களை பஸ், ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். வெளிநாட்டில் தவித்த மாணவ, மாணவிகளை விமானத்தில்

இந்தியாவுக்கு அழைத்து வந்தார். கொரோனாவால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்தார்.

அவரது இதுபோன்ற சேவைகளை பாராட்டும் விதமாக தெலுங்கானாவில் சோனுசூட்டுக்கு கோவில் கட்டினர். இந்த நிலையில் தனது சகோதரி மாளவிகா அரசியலில் ஈடுபட இருப்பதாக

சோனுசூட் அறிவித்து உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘எனது சகோதரி மாளவிகா

மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் சேர்வதற்கு ஆர்வமாக இருக்கிறார். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் மோகா தொகுதியில் அவர் போட்டியிடுவார்” என்றார்.

சோனு சூட்

இதுபோல் சோனுசூட்டும் அரசியலில் ஈடுபட இருக்கிறார். பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அல்லது

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

    Posted in சினிமா

    ஓட்டல் கட்டிய சர்ச்சை… சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்

    ஓட்டல் கட்டிய சர்ச்சை… சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்

    தனது 6 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஓட்டலாக மாற்றியதாக குற்றம் சாட்டி மும்பை மாநகராட்சி, நடிகர் சோனு சூட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

    ஓட்டல் கட்டிய சர்ச்சை… சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்
    சோனு சூட்


    தமிழில் ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சோனுசூட். கள்ளழகர், மஜ்னு, ராஜா, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

    சோனுசூட் கொரோனா ஊரடங்கில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். இந்த நிலையில் மும்பை ஜூகு பகுதியில் உள்ள தனது 6

    மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஓட்டலாக மாற்றியதாக குற்றம் சாட்டி மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

    சோனு

    இதை எதிர்த்து சோனுசூட் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. இதனால் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அந்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் மும்பை மாநகராட்சி, ஓட்டலாக மாற்றிய கட்டிடத்தை 2 வாரங்களுக்குள் அடுக்குமாடி

    குடியிருப்பாக மாற்ற வேண்டும் என்று கெடுவிதித்து சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.