பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

குடி போதையில் கோர விபத்தை ஏற்படுத்திய நபர்

குடி போதையில் கோர விபத்தை ஏற்படுத்திய நபர்

எம்பிலிபிட்டிய, கல்வங்குவ பிரதேசத்தில் குடிபோதையில் கார் ஒன்றை செலுத்திச் சென்ற நபர், 5 வாகனங்கள் மீது மோதியதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர் 73 வயதுடைய முதியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கார் 3 முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றுமொரு காருடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்