Posted in சினிமா

அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுத – நயன்தாரா

அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் – நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, முக்கியமான நபர் ஒருவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுததாக தெரிவித்துள்ளார்.

அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –


சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா.

அதனை அடுத்து ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்ற இவர்,

அதே நேரம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர் கோவில் கோவிலாக, ஊர் ஊரக சுற்றி வருகிறார்.

இந்நிலையில், நயன்தாரா தனது வாழ்க்கையில் முக்கியமான நபர், அவரைபிரிந்ததற்காக ஒருமணிநேரம் கதறி கதறி அழுத சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

நயன்தாரா

தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோ‌ஷமான வி‌ஷயம் என்றால் தனது அண்ணன் மகள் பிறந்ததுதான்

எனவும், மேலும் ஏஞ்சலினா பிறந்த பிறகுதான் தனக்கு பட வாய்ப்புகள் கிடைத்து, சந்தோ‌ஷமான சம்பவங்கள் நடந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏஞ்சலினா தன்னுடன் இல்லாமல், துபாய்

சென்றுவிட்டதாகவும், அதை நினைத்து தான் அழுததாகவும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

செத்து போன காதல்

செத்து போன காதல்

ஆள் மனசு தேடுதடி – விழி
ஆறாக ஓடுதடி
காணாமல் போனவளே – உன்
கால் தடத்தை தேடுகிறேன் …

வேராகி முளைத்தவளே – நெஞ்சை
வேலெடுத்து அறுத்ததென்ன ..?
கூடு ஒன்று மாறிட தான்
குயிலே கூவ மறந்தாயோ …?

பாவமடி பெண் மயிலே – இந்த
பாவி என்ன செய்திடுவேன் …?
தேம்புதடி உன் நினைவு – எனை
தேற்றிடத்தான் வாராயோ …?

நாள் கணக்காய் காத்திருந்து
நாட்களிலே வாடி விட்டேன் …
பேச்சிழந்து போனவளே – என்
பேரன்பை ஏன் தொலைத்தாய் ..?

மூச்சிழந்து போகு முன்னே
முகம் வந்து காட்டாயா ..?
ஆள் மனதில் உனை வைத்தேன்
அடியே மறந்து போயிடவோ ..?

-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/10/2018

Home » காதல் » Page 3