Tag: காணாமல் போனவர்கள்
காணாமல் போனவர்கள் எங்கே
காணாமல் போனவர்கள் எங்கே
காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபவித்து வரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர்
கிறிஸ்டின் சிபோல்லா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த வார இறுதியில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இலங்கையில் வாழும் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த காணாமல்போனோரின் குடும்பத்தினர் அனுபத்துவரும் துன்பத்துக்குத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
காணாமல் போனவர்கள் விசாரணைகள் வரும் ஆண்டு நிறைவடையும் இலங்கை
காணாமல் போனவர்கள் விசாரணைகள் வரும் ஆண்டு நிறைவடையும் இலங்கை
இலங்கையில் இறுதி போரின் பொழுது கைது செய்யப்பட்டு காணமால் போன உறவுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இந்த விசாரணைகள் எதிர்வரும் ஆண்டு நிறைவடையும் என என அமெரிக்கா தூதுவரிடம் இலங்கை நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார் .
மகிந்தா ,மைத்திரி ,கோத்தபாயா அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கா என நான்கு ஜனாதிபதிகள் ,ஆண்டு ஆட்சி புரிந்த பொழுதும் ,இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்பது இங்கே கவனிக்க தக்கது .














