இவளை பார்க்க யாரும் இல்லை
Posted in இலங்கை செய்திகள்

இவளை பார்க்க யாரும் இல்லை

இவளை பார்க்க யாரும் இல்லை

பார்வையிழந்த இவளை பார்க்க யாரும் இல்லை ,வவுனியாவில் தனிமையில் கதறும் இளம் தமிழ் பெண் .

போரினால் பாதிக்க பட்ட ஆதரவற்ற நிலையில் ,வவுனியா கணேசபுரம் பகுதியில் தனிமையில் வசித்து வரும் இந்த பெண் ,வறுமையில் பல இன்னல்களை அனுபவித்த வண்ணம் .உள்ளார்

சுய தொழில் செய்து வாழ விரும்பும் இவர் ,குடி நீர் இன்றி தவித்து வருகின்றார் .

இவருக்கு குழாய் கிணறு ஒன்று நிறுவி கொடுத்தால் அதனை வைத்து குடி நீரை பூர்த்தி செய்வதுடன் ,தனது சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி அதன் ஊடாக அவர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்வார் .

கண் பார்வையின்றி தவிக்கும் இந்த இளம் பெண்

அதனால் ஒரு கண் பார்வையின்றி தவிக்கும் இந்த இளம் பெண்ணுக்கு வெளிநாடுகளில் வசிக்கும் எம் தமிழ் உறவுகளே உங்கள் ,அன்பையும் ஆதரவையும் இந்த பெண்ணுக்கு வழங்கிடுங்கள் .

கடல் கடந்து வந்த போதும் தாய் மண்ணையும் ,அந்த மக்களையும் தாங்கி பிடித்து பேருதவி புரிந்து ,பெரும் இன்னல்களை சந்தித்த மக்கள் கண்ணீரை துடைக்கும் தாயகத்து உறவுகளை ,நல்ல மனங்களே இந்த பார்வை அற்ற பெண்ணுக்கு வாழ்வு கொடுங்கள் .

எம ,சோதரி எம் அக்கா கதறுகிறாள் ,அவள் கண்ணீரை துடைத்து ,உங்கள் அன்பை செலுத்தி உண்பதற்கான ஒரு உத்தரவாத உழைப்பை ஏற்படுத்தி கொடுங்கள் .

இந்த இளம் பெண்ணுக்கு உதவிட விரும்பும் அன்பர்கள் கீழ் வரும் கைபேசி ஊடாக தொடர்பு கொண்டு உதவலாம் ,வாட்சப் ,வைபர் ஊடாகவும் அழைப்பை ஏற்படுத்தி உதவுங்கள் மக்களே .0094 77111 8129

வீடியோ

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம் புஸ்ஸல்லாவை பெரட்டாசி மேமலை பகுதியில் வாலிபன் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு .

நீரோடை ஒன்றில் இருந்து சடலமாக மீட்க பட்ட வாலிபன் சடலம், மருத்துவ மரண பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து வர பட்டது .

வாய்க்காலில் மீட்க பட்ட வாலிபன் சடலம்

வாய்க்காலில் மீட்க பட்ட 24 வயதுடைய வாலிபன் அதே பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

எமது பிள்ளை எப்படி இறந்தான் என்பது தொடர்பாக விசாரனை நடத்தி குற்றவாளிகளை கண்டு பிடித்து ,சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ,பாதிக்க பட்ட மக்கள் கண்ணீர் மல்க வேண்டுதல் விடுத்துள்ளனர் .

குறித்த இளம் வாலிபன் சடலமாக வாய்க்காலில் இருந்து மீட்க பட்ட சம்பவம், அந்த பகுதி மக்கள் மத்தியில் ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

மகனை பறிகொடுத்த பெற்றோர்கள் கதறும் காட்சிகள், மக்களை துயரில் .ஆழ்த்தியுள்ளது

மிரட்டும் மர்ம படுகொலைகள்

இலங்கையை மிரட்டும் மர்ம படுகொலைகள் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பதை ,இலங்கை காவல்துறை கண்டுபிடிக்க முடியாது திணறி வருகிறது .

துணிகரமாக நடத்த படும் இவாறான படுகொலைகள், மக்கள் நின்மதியாக வாழும் வாழ்தலுக்கு, அச்சுறுத்தலாக காணப்படுகிறது .

மக்களை அச்சத்தில் வைத்து கொள்ளும் திட்டமிடப்பட்ட, படுகொலைகளாக இவை காண படுகின்றன .

ஆட்சியாளர்கள் மக்களுக்கு அச்சத்தை விதைத்து, ஆண்டுகள் ஆண்டுவிட துடிப்பதன் நோக்கம் தான் ,இந்த படுகொலைகளின் தொடர்ச்சி என, மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகிறது .

இறந்த இந்த வாலிபனுக்கு நீதி வேண்டும் என, அவர் தம் குடும்பங்கள் வேண்டி நிற்கின்றன .

படுகொலைகள் பல தற்கொலை என கூறி, வழக்குகள் மூட பட்டுள்ளதாக பாதிக்க பட்ட மக்கள் சிலர் ,தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .