Tag: ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி உதயமானது
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி உதயமானது
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உதயமானது.
இதற்கமைய, ஐக்கிய மக்கள் கூட்டணியை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (05) காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் பேராசிரியர் ஜி.எல். பீர்ஸ் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இன்று (05) காலை கைச்சாத்திட்டுள்ளனர்.
இதன்படி, சுதந்திர மக்கள் சபையின் 6 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து தனித்தனியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.
பேராசிரியர் ஜி.எல்.பீர்ஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, கே.பி. குமாரசிறி, கலாநிதி உபுல் கலப்பட்டி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் இவ்வாறு சமகி ஜன சந்தனவில் இணைந்துள்ளனர்
சஜித் பிரேமதாசா அணியில் இருந்து ரணில் பக்கம் 25 பேர் தப்பி ஓட பேச்சு
சஜித் பிரேமதாசா அணியில் இருந்து ரணில் பக்கம் 25 பேர் தப்பி ஓட பேச்சு
ஐக்கிய மக்கள் சக்தி சஜித் அணியில் இருந்து ரணில் கட்சியுடன் இணைந்து செயல்பட இருபத்தி ஐந்து பேர்
தயார் நிலையில் உள்ளனர்
இவ்வாறு செல்வோர் அனைவரும் ரணில் அணியினர் என சஜித் அணியினர் தெரிவித்துள்ளனர்
சஜித்தின் வெற்றியை தடுத்து ,அந்த கட்சியை உடைக்கும் நிலையில் ரணில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட
தக்கது.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிரணியில் போராட்டம்
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிரணியில் போராட்டம்
இலங்கையில் ஆளும் ராஜபக்ஸ குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் 22 நாளாக
போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் ,இவ்வேளை ஐக்கிய மக்கள் சக்தியினர் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி
பெரும் பேரணி ஒன்றை நடத்திய வண்ணம் உள்ளனர்
இந்த பேரணி இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது
ஐக்கிய மக்கள் சக்தியின்அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக.றிஸ்கா நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தியின்
அம்பாறை மாவட்ட
இளைஞர் அமைப்பாளராக
றிஸ்கான் முகம்மட் நியமனம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஐக்கிய மக்கள் சக்தியின்
அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக
கே.ஆர்.றிஸ்கான் முகம்மட், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் திங்கட்கிழமை (08) கட்சி தலைமையகத்தில்
வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால்
வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய
இளைஞர் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க
ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்நியமனத்தின் மூலம் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு பல்வேறு நலன் சார்ந்த
திட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரிடம் றிஸ்கான் முகம்மட் கலந்துரையாடினார்.
அத்துடன், இவர் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக கடமையாற்றிய காலத்தில்
இளைஞர்களுக்கு பல்வேறு நலன்சார் திட்டங்களை முன்னெடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.







