ஊடகவியலாளர் மீது தாக்குதல் விசாரணைக்கு ​அமெரிக்கா வலியுறுத்தல்
Posted in இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் மீது தாக்குதல் விசாரணைக்கு ​அமெரிக்கா வலியுறுத்தல்

ஊடகவியலாளர் மீது தாக்குதல் விசாரணைக்கு ​அமெரிக்கா வலியுறுத்தல்

ஊடகவியலாளர் மீது தாக்குதல் விசாரணைக்கு ​அமெரிக்கா வலியுறுத்தல் சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் பாரபட்சமற்ற விரைவான விசாரணை நடத்த வேண்டும் என

அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்குகின்ற பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின் (CPJ) திட்ட இயக்குநர் Carlos Martínez de laSerna வியாழக்கிழமை (09) அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் டிசம்பர் 26 ஆம் திகதி கிளிநொச்சி நகரில்
வைத்து தாக்கப்பட்டு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இவர்
அதிலிருந்து தப்பியிருக்கிறார். பின்னர் அவர் நெஞ்சு, கழுத்து,
முதுகில் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சை
பெற்றுள்ளார்.

அவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் படி டிசெம்பர் 27ஆம் திகதி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு 30 ஆம் திகதி நீதிமன்றில்சந்தேக நபர்கள் தமிழ்ச்செல்வனால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் அவர்கள் பிணையில் விடுவித்துள்ளது.

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத்
சமரவிக்ரசிங்கவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் உடனடியாக பதில் கூற முடியாது என தெரிவித்துவிட்டார்.

உள்ளூர் நாளிதழ்களில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதி வருவதன் காரணமாக தான் தாக்கபட்டிருக்கலாம்.


என எம்மிடம் தமிழ்ச்செல்வன் சந்தேகம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ்.


பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு தண்டனைகள் கிடைக்காமை
தொடர்பில் CPJ ஆவணப்படுத்தி இருக்கிறது.1983 தொடக்கம் 2009 வரையான
காலப்பகுதியில் உள்நாட்டு போர் காரணமாக கொல்லப்பட்ட அதிகளவான
பத்திரிகையாளர் தமிழ் பத்திரிகையாளர்கள்.

எனவே, புதிதாக பொறுப்பேற்ற அரசு தமிழ் பத்திரிகையாளர்கள் மீதான
தாக்குதல், துன்புறுத்தல்கள் மற்றும் தண்டனை விலக்களிப்பு என்பவற்றை
முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பத்திரிகையாளர்களை

பாதுகாக்கின்ற குழுவின் (CPJ) திட்ட இயக்குநர் Carlos Martinez de la Serna
கோரியுள்ளார்.

ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம்

ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம்

ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம், யாழ்ப்பாணம் அச்சுவலி பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்த மர்மகும்பல் அங்கு திடீர்னு நடத்தி மோட்டார் சைக்கிள் எரித்து வீடுகளை தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர் .

மாற்று பாலினத்துக்கு எதிராக குறித்த ஊடகவியலாளர்கள் மாற்றுக்கருத்தினை தெரிவித்த நிலையில் ஆக்கிரமித்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது .

ஆனால் மிகப்பெரும் ஊடகவியலாளராகவும் மக்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருபவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் செய்திகள் தெரிவிக்கின்றன.

தனிநபர் தாக்குதலாக பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளரான பிரதிபரின் வீட்டின் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றது .

இந்த தாக்குதல் தனிநபர் தாக்குதலாக பார்க்கப்படுகின்றது.

இதன் பொழுது போக்கில் உள்ள வாகனங்கள் சேதமாக்கப்பட்ட நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தின் ஆளுநரின் விசேட உத்தரவின் அடிப்படையில் நான்கு போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விசாரணையின் பொழுது மர்ம நபர்கள் தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்களது பின்புலம் யாது என்பது விரைவில் தெரியவரும் என்பதாக அந்த ஊடக நபர் வட்டாரங்கள் ஊடாக செய்திகள் வெளியாகி உள்ளது .

யாழ்ப்பாணத்தில் இவ்வாறான வாள் வெட்டு அத்துமீறல் சம்பவங்கள் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன .

காவல்துறையும் ராணுவமும் வீதிக்கு வீதி குவிப்பு

எனினும் காவல்துறையும் ராணுவமும் வீதிக்கு வீதி குவிக்கப்பட்டுள்ள பொழுதும் இவ்வாறான பல்வேறுபட்ட சம்பவங்கள் தொடர்கின்றன .

தாலியறுப்பு சம்பவங்கள், நகைதிருட்டுகள், தடுக்க முடியாது இலங்கை போலீசார் திணறி வருகின்றனர் .

அவ்வாறான நிலையில் தற்போது ஊடகவியலாளர் வீட்டில், இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது ,பேசு பொருளாக தற்போது மாற்றம் பெற்றுள்ளது.