Tag: உரம்
உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி ,அரசாங்கம் அதிக விலைக்கு உரத்தை கொள்வனவு செய்துள்ளதாக தேசிய விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் தேசிய உரச் செயலகம் விளக்கமளித்துள்ளது.
அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த அலுவலகம், குறித்த கூற்றில் உள்ள சில விடயங்கள் உண்மையானவை அல்ல என வலியுறுத்தியுள்ளது.
800 அமெரிக்க டொலர்
கஜகஸ்தானில் இருந்து குறைந்த விலைக்கு உரத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்தும், 800 அமெரிக்க டொலர்
விலையில் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அந்தப் பிரதிநிதி சுட்டிக்காட்டியிருந்தார்.
அந்நாட்டிலிருந்து ஒரு மெட்ரிக் தொன் யூரியா உரத்தை 220 முதல் 320 அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியில், 800 டொலர் போன்ற அதிக விலைக்கு உரத்தை இறக்குமதி செய்ய நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் வெளிப்படுத்தினார்.
இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள தேசிய உரச் செயலகம், அந்நாட்டிலிருந்து யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு விடுக்கப்பட்ட
கோரிக்கைகளுக்கு தாம் தாமதமின்றி அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எனினும், இதுவரையில் அந்த நிறுவனங்கள் கஜகஸ்தானில் இருந்து யூரியா உரத்தை இறக்குமதி செய்யவில்லை என அந்த செயலகம் சுட்டிக்காட்டுகிறது.
அதேபோல், ஏப்ரல் 29ஆம் திகதி ‘Ceylon Trading and Plantation (Pvt) Ltd’ எனும் நிறுவனம் 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்திற்கான கட்டளையைப்
யூரியா உரத்தை இறக்குமதி செய்யவில்லை
பெற்றுள்ளது. எவ்வாறாயினும், அந்த நிறுவனமும் இதுவரை யூரியா உரத்தை இறக்குமதி செய்யவில்லை என தேசிய உரம் செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த மாதத்தில் இந்தியாவும் ஒரு மெட்ரிக் தொன் யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 900 அமெரிக்க டொலர் செலவிட்டுள்ளதாகவும் அந்த செயலகம் மேலும் வலியுறுத்தியுள்ளது
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

விவசாயிகளுக்கு இலவச உரம்
விவசாயிகளுக்கு இலவச உரம்
விவசாயிகளுக்கு இலவச உரம் ,விவசாயிகளுக்கு எதிர் வரும் இரண்டு போங்களுக்கான இலவசமாக உரம் வழங்க உள்ளதாக இலங்கை ஆளும் அரசு தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் இவ்வாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார் .
சில மாதங்களில் இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்பொழுது விவசாயிகளுக்கு உரத்தை தாங்கள் இலவசமாக வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .
மகிழ்ச்சியில் விவசாயிகள்
இந்த அறிவிப்பால் மக்களை குஷி படுத்தி அதனூடாக வாக்குகளை பெற்றுக் கொள்ள ஒரு தந்திரமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது .
ஆளும் தேசிய கட்சி எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட இலவச உரமாகவே இதனை எடுத்து கொள்ள முடிகின்றது.
தொடராக மக்களுக்கு இலவசமாக பல சலுகைகளை வழங்கி வருவதுடன் ,வெள்ளங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீடுகள் புபுனர்நிர்மாணம் செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுகள் என்பனவற்றையும் அரசு தாரளமாக வழங்கி வருகின்றது .
இரண்டு போகங்களுக்கு விவசாயத்திற்கு இலவச உரம்
அதன் அடிப்படையில் எதிர்வரும் இரண்டு போகங்களுக்கான உரத்தினை தாங்கள் வழங்க உள்ளதாக இலங்கை அரசு இவ்வாறு அறிவித்துள்ளது .
பல்வேறுபட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
அறிவிக்கப்பட்டதன் படி தொடர்ந்து இந்த இலவசங்களை ஐக்கிய தேசியக் கட்சியி அரசாங்கம் வழங்குமா ,அல்லது தேர்தல் முடிந்தவுடன் அவற்றை காற்றில் மறந்து விட்டு பறந்து விடுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
1000 ரூபாவால் குறைவடையும் உரம்
1000 ரூபாவால் குறைவடையும் உரம்
நாளை (15) முதல் 50 கிலோ கிராம் ‘பண்டி’ உரம் எனப்படும் MOP உர மூட்டை ஒன்றின் விலை 1000 ரூபாவால் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இன்று (14) காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்










