159 வருட பொலிஸ் வீரர் தினம்
Posted in இலங்கை செய்திகள்

159 வருட பொலிஸ் வீரர் தினம்

159 வருட பொலிஸ் வீரர் தினம்

159 வருட பொலிஸ் வீரர் தினம் கிளிநொச்சியில் இன்று (21) இடம்பெற்றது.

21.03.1984 இதே நாளில் உயிரிழந்த பொலிஸ் உத்தியயோகத்தரான சபான் என்பவரை நினைவுகூறும் வகையில் குறித்த நிகழ்வு இன்று பெற்றது.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கலந்து கொண்டு திணைக்கள கொடியை ஏற்றி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார்.

தொடர்ந்து உயிரிழந்த அத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் இடம்பெற்றதுடன், பூச்செண்டுகள் வைக்கப்பட்டு நினைவு கூறப்பட்டது.

No posts found.
தொதல் பொதியில் இறந்த எலி
Posted in இலங்கை செய்திகள்

தொதல் பொதியில் இறந்த எலி

தொதல் பொதியில் இறந்த எலி

விடுமுறைநாட்களில் இலட்சக்கணக்கானோர் வந்துசெல்லும் சுற்றுலாத்தளமாக சிவனொளிபாத​மலை மாறிவிட்டது.

அவ்வாறு சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்களாக வருகைதந்தவர்களில் சிலர், நல்லத்தண்ணி நகரில் உள்ள இனிப்பு பண்டங்களை விற்பனை நிலையமொன்றில் தொதல் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களை கொள்வனவுச் செய்துள்ளனர்.

அதனை உண்பதற்காக, எடுத்து வெட்டிய போது அந்த தொதல் பொதியில் இறந்த நிலையில் எலி இருப்பதை அவதானித்து உள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை பாதிக்கப்பட்டவர்கள் விடுக்கின்றனர். செ.தி.பெருமாள்

No posts found.
சஜித் பிரேமதாசா அமெரிக்கா தூதுவர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

விமானி ஆக ஆசைப்பட்டேன்: எதிர்கட்சித் தலைவ

விமானி ஆக ஆசைப்பட்டேன்: எதிர்கட்சித் தலைவர்

அரசியலுக்கு வரவில்லை என்றால் தான் ஒரு விமானி ஆக வேண்டும் என ஆசைப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பயணிகளின் உயிருக்கு விமானி பொறுப்பாளியாக இருப்பது போல் அரசாங்கத்திற்கும் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது . அரசாங்கம் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக அதை வலுவற்றதாக்கிக்

கொண்டு இருக்கிறது என கடந்த சனிக்கிழமை கொலன்னாவையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது அவர் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் கூட அப்போதிருந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்து ஆலோசித்து IMF இன் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தியிருந்தார்.

ஆனால் ஒருபோதும் மக்கள் மீது சுமையை ஏற்றும் திட்டங்கள் முன்மொழிவுகளுக்கு அவர் உடன்படவில்லை.

அப்போது இலங்கையின் சொந்த திட்டங்களை IMF விடம் முன்வைக்க அவரால் முடிந்தது. ஆனால் இப்போது IMF முன்மொழியும் திட்டங்களை நாங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதுதான் இப்போதைய அரசாங்கத்திற்கும் அப்போதைய அரசாங்கத்திற்கும் இருக்கும் வித்தியாசம் என அவர் தெரிவித்தார்.

No posts found.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இறுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் இன்று

சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் இன்று

இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கை நேரப்படி இன்று இரவு கூடவுள்ளதுடன், இதற்கான அனுமதி தொடர்பில் இதன்போது இறுதித் தீர்மானம் எட்டப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

கூட்டத்தின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

No posts found.
லண்டனில் இலங்கை தூதரகம் மக்களினால் முற்றுகை |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் இலங்கை தூதரகம் மக்களினால் முற்றுகை |இலங்கை செய்திகள்

லண்டனில் இலங்கை தூதரகம் மக்களினால் முற்றுகை |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர்

இலங்கையில் ,இலங்கை அரச இராணுவத்தால் மேற்கொள்ள படும் ,கடத்தல்,கொலை,கற்பழிப்பு ,சித்திரவதை ,மனித உரிமை மீறல்கள் ,அச்சுறுத்தல் என்பனவற்றை நிறுத்த கோரி ,பெண்கள் தினத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது .

இன்று 08|03|2023 மதியம் 13.00 முதல் 15.00மணிவரை இந்த போராட்டம் இடம் பெறுகிறது .கொட்டும் மழையிலும் ,உறை பனி குளிரில் நனைந்த வண்ணம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

தமிழர்களுக்கான சுதந்திர வேட்டை காரிகளினால் ,இந்த போராட்டம் முன்னெடுக்க பட்டு வருகிறது .
இலங்கையில் நாள் தோறும் பெண்கள் ,மற்றும் மக்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

லண்டனில் இலங்கை தூதரகம் மக்களினால் முற்றுகை |இலங்கை செய்திகள்

கடந்த தினம் வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் ,
மர்மமாக கொலை செய்ய பட்ட நிலையில்
சடலங்களாக மீட்க பட்டனர் .

மனைவி மற்றும் இரு பெண் பிள்ளைகள் கொலை செய்யப்பட்ட நிலையிலும் ,
கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவை மர்ம கும்பலினால் இவ்வாறு ,கொலை செய்ய பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது .

நாள் தோறும் நீரேரிகள் ,காடுகள் உள்ளிருந்து ஆண் ,பெண்கள் சடலமாக மீட்க பட்டு வரும் பயங்கரம் இடம்பெற்று வரும் நிலையில் ,
இந்த போராட்டம் இன்று லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக இடம்பெறுள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.
ரசியா இராணுவ கேணல் அலுவலக அறையில் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

தப்பிச் செல்ல முற்பட்ட கைதி சுட்டுக் கொலை | இலங்கை செய்திகள்

தப்பிச் செல்ல முற்பட்ட கைதி சுட்டுக் கொலை | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |கேகாலை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த கைதி சிறைச்சாலையின் பணிகளுக்காக அதிகாலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கைதி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது .

No posts found.
இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தாவுக்கு விதிக்க பட்ட வெளிநாட்டு பயண தடை நீக்கம் | இலங்கை செய்திகள்

மகிந்தாவுக்கு விதிக்க பட்ட வெளிநாட்டு பயண தடை நீக்கம் | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |நீக்கம் இலங்கை முன்னாள் ஜனாதிபதி விதிக்க பட்டிருந்த தடை நீக்க பட்டுள்ளது .


கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .

கோட்டாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வேளை ,
ராஜபக்ஸ குடும்பம் நாட்டை விட்டு தப்பி ஓட முடியா நிலையில் தடைகள் விதிக்க பட்டிருந்தன .

அவ்வாறான தடையே தற்போது நீக்க பட்டுள்ளது.

No posts found.
நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

கொலை சம்பவம் தொடர்பில் 5 பேருக்கு மரண தண்டனை| இலங்கை செய்திகள்

கொலை சம்பவம் தொடர்பில் 5 பேருக்கு மரண தண்டனை| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |கேகாலை மாகாண மேல் நீதிமன்றத்தில் இன்று (08) குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

03.07.2014 அன்று கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின் போது சீமெந்து கல்லால் தாக்கி நபர் ஒருவரைக் கொலை செய்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கேகாலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

No posts found.
தேர்தல் தை மாதம் இடம்பெறும் என அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தபால்மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு | இலங்கை செய்திகள்

தபால்மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு மார்ச் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி நிமால் ஜி.புஞ்சிஹேவாவிடம் ´அத தெரண´ வினவியபோது, ​​எதிர்வரும் மார்ச் மாதம் 28, 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த
திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (07) அறிவித்தது

No posts found.
இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க நடவடிக்கை | இலங்கை செய்திகள்

கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க நடவடிக்கை | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்| பல மாத காலத்திற்கு வழங்கப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க, இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கடன் வசதி இந்த ஆண்டு மார்ச் 17 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இதுவரை பெறப்பட்ட கடன் வசதியில், மூன்றில் இரண்டு பங்கு மருந்து மற்றும் உணவுக்காக இலங்கை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No posts found.
இரு பேரூந்துகள் நேரெதிர் மோதல் -23 பேர் காயம் | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

இரு பேரூந்துகள் நேரெதிர் மோதல் -23 பேர் காயம் | இலங்கை செய்திகள்

இரு பேரூந்துகள் நேரெதிர் மோதல் -23 பேர் காயம் | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |கொழும்பு – கண்டி வீதியின் மாவனெல்லை கனேதென்ன பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 23 பேர்
காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார்
பேருந்து ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுமே
இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

No posts found.
போராட்ட காரர்கள் மீது கண்ணீர் குண்டு தாக்குதல் | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

போராட்ட காரர்கள் மீது கண்ணீர் குண்டு தாக்குதல் | இலங்கை செய்திகள்

போராட்ட காரர்கள் மீது கண்ணீர் குண்டு தாக்குதல் | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின்
மாணவர்கள் போராட்டத்த்தை நடத்தி வருகின்றனர் .

இதன் பொழுது அந்த போராட்டத்த்தை அடக்கிட ,
கணீர் புகை மற்றும் நீரை பீச்சி அடித்து காவல்துறை ,
ஆராயக்கத்தில் ஈடுபட்டு வருகிறது .

ரணில் அரசுக்கு எதிராக மக்கள் வீதி
இரங்கி போராடும் நிலை மீள எழுச்சி பெறும்
என்பதை வை மீள எடுத்துரைத்துள்ளன .

No posts found.
இளம் யுவதிகளுக்கு சவால் விட்ட பாட்டி |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

இளம் யுவதிகளுக்கு சவால் விட்ட பாட்டி |இலங்கை செய்திகள்

இளம் யுவதிகளுக்கு சவால் விட்ட பாட்டி |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியில் கடந்த 03.03.2023 ஆம் இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எஸ். சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் மாணவர்களின் பல்வேறு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

குறித்த விளையாட்டு போட்டியில் பழைய மாணவர்களிற்கான 400 m ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது.

அந்த ஓட்டப்போட்டி நிகழ்வில் அப்பாடசாலையின் பழைய மாணவிகள் பலர் பங்குபற்றி இருந்தனர்.

குறித்த பாடசாலையில் கல்விகற்ற 75 வயதுடைய புனிதவதி என்ற மூதாட்டி ஒருவர் கலந்து கொண்டு சிறப்பு பரிசினை தட்டி சென்றுள்ளார்

No posts found.
நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும் | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும் | இலங்கை செய்திகள்

நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும் | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |இந்த நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும். இந்த நாட்டில் நடக்கும் விஷயங்களை நாம் புறநிலையாக பார்க்காமல், அடுத்த தேர்தலை கண்கூடாக பார்க்காமல் இருந்தால், பௌத்த

மதகுருமார்கள் இந்த நாட்டை சீரழித்துக்கொண்டே இருப்பார்கள். நாட்டை முன்னேற்றவோ, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக மகாசங்கம் பற்றிய உங்களது கருத்துக்கள் சிங்களவர்கள் மத்தியில் எதிர்மறையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மகா சங்கத்தினரை விமர்சிப்பது புத்திசாலித்தனமா? என வாராந்த இன்று

ஊடகவியாளர்களுக்கு கேள்வி பதிலுக்கான பதில் வழங்கையில் இவ்வாறு அறிக்கை மூலமாக பதில் வழங்கினார் மேலும் தெரிவிக்கையில்..

நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும் | இலங்கை செய்திகள்

என் வயது முதிர்ந்த வயதிலேயே அதன் விளைவுகளை உணர்ந்து பூனைக்கு மணி கட்டும் பணியை நான் மேற்கொண்டேன். பௌத்த மதகுருமார்கள்

அரசின் விவகாரங்களில் தீவிரமாகப் பங்கேற்பதால் ஏற்படும் ஆபத்துகளை அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களும் சுட்டிக்காட்ட வேண்டிய நேரம் இது.

ஆனால் நிச்சயமாக அறிவுள்ள பௌத்த மதகுருமார்கள் தெற்கு மற்றும் வடக்கு கிழக்கிற்கு இடையில் சமாதான தூதுவர்களாக செயல்பட முடியும்.

பௌத்த பிக்குகளின் ஆங்கிலம் அல்லது தமிழ் பேசும் தூதுக்குழு ஒன்று முதலில் வடக்கில் உள்ள எமது புத்திஜீவிகளை சந்தித்து தமிழர்களின் பிரச்சனைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுமாறு நான் பரிந்துரைக்கிறேன்.

அதன்பிறகு, வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள, எங்கள் வரலாற்றுப் பேராசிரியர்களுக்கு இடையே தொடர்பு கொள்ளலாம்.

அதே சமயம் அடிமட்ட மட்டத்தில் ஒருவரையொருவர் சந்திக்கும் வகையில் இரு சமூகத்தினருக்கும் இடையிலான சந்திப்புகளை சிங்கள தமிழ் நட்புறவுச் சங்கங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மனித உரிமைகள் ஆணையாளர்களை வடக்கிற்கு அனுப்புவது மக்களின் தேவைகள் மற்றும் உணர்வுகள் பற்றிய சரியான கண்ணோட்டத்தையோ அல்லது போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும்

மனித உரிமை மீறல்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையும் சர்வதேச உள்ளீட்டுடன் இருக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையை வழங்காது என்றார்.

No posts found.
ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி | இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் நேற்று (05) மாலை உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ். மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதிஉயர் மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்

தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்| தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய ஓர் இளம் பெண்ணின் சடலத்தை புஸல்லாவ சோகமா தோட்ட மேல் பிரிவிலிருந்து மீட்டுள்ளதாக புஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் எல்பொட தோட்ட கட்டுகித்துல ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். நிரஞ்சலா தேவி என்பவர் ஆவார்.

அந்தப் பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே தனது முதல் கணவரை பிரிந்து, வேறொரு நபரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அதன் பின்னர் இருவரும் கொழும்பில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது.

தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்

இந்நிலையில் எல்பொட கட்டுகித்துலையில் உள்ள பெண்ணின் தாய்வீட்டுக்கு செல்வதற்காக கொழும்பிலிருந்து இருவரும் புஸல்லாவ நகருக்கு வந்துள்ளபோதும், வீட்டுக்குச் செல்லவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் தேயிலை கொழுந்து பறிக்கச் சென்ற இரு பெண்கள் சடலத்தை குறித்த இடத்தில் கண்டு, புஸல்லாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

அத்துடன் உயிரிழந்த பெண்ணின் இரண்டாவது கணவர் தலைமறைவாகியுள்ளதாக கூறும் பொலிஸார், பெண் வேறோர் இடத்தில் கொலை செய்யப்பட்டு, குறித்த இடத்தில் கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான ஸ்தல விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதவான் மேற்கொண்டதோடு, சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸல்லாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No posts found.
இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

20 வயதான யுவதியை கட்டிவைத்து துஷ்பிரயோகம் | இலங்கை செய்திகள்

20 வயதான யுவதியை கட்டிவைத்து துஷ்பிரயோகம் | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்| வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான யுவதியொருவர் அந்த வீட்டின் எஜமானால் 4 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என மொறட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

60 வயது மதிக்கத்தக்க ஒருவரே அந்த யுவதியை கட்டிவைத்து மூன்று நாட்களாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

அவரது பிடியில் இருந்து தப்பிவந்த யுவதி, மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் முறைப்பாடு செய்துள்ளார்.

நோர்வூட்டைச் சேர்ந்த தரகர் மூலமாக அந்த யுவதி, 20 நாட்களுக்கு முன்னரே அந்த வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

20 வயதான யுவதியை கட்டிவைத்து துஷ்பிரயோகம் | இலங்கை செய்திகள்

சந்தேகநபரான அந்த நபர், அவ்வப்போது அந்த யுவதியிடம் அங்க சேஷ்டைகளை விட்டுவந்துள்ளார். இந்நிலையில், அவ்வீட்டைச் சேர்ந்த ஏனைய அங்கத்தவர்கள் விடுமுறையை கழிப்பதற்காக வெளியில் சென்றுள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்​தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டே, அந்த யுவதியை அச்சுறுத்தி, இவ்வாறு கட்டிவைத்து, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பிடியில் இருந்து தப்பி வீட்டைவிட்டு வெளியேறிய யுவதி, வீதியில் சென்றுக்கொண்டிருந்தவரிடம் பொலிஸ் நிலையத்தின் தகவலைப் பெற்று, பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிட்டுள்ளார்.

No posts found.
இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்

இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில், அக்கரைப்பற்று 241ஆம் இராணுவ படைப்பிரிவு முகாமின் தேனீர் சாலை முன்பாக இன்று (05) அதிகாலை கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இக்கார் வீதியை விட்டு விலகி, வீதி அருகில் இருந்த சிறிய தூண்களை உடைத்துக்கொண்டு, அருகில் இருந்த சிறிய பள்ளமான பிரதேசமொன்றில் தலை கீழாக வீழ்ந்து கிடப்பதை காண முடிந்தது.

காரின் இரு பக்க இலக்கத்தகடுகளும் காணப்படாத நிலையில், காரின் முன்பகுதி மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதையும் காரின் சில பாகங்கள் சிதறி கிடப்பதையும் அவதானிக்க முடிந்தது.

இதில் பயணம் செய்தவர்கள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில், அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார், இன்று காலை குறித்த இடத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

No posts found.
வரக்காபொல விபத்தில் ஒருவர் மரணம் | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

வரக்காபொல விபத்தில் ஒருவர் மரணம் | இலங்கை செய்திகள்

வரக்காபொல விபத்தில் ஒருவர் மரணம் | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |வரக்காபொல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டாங்கர் லொறி கவிழ்ந்ததில் ,அருகில் உள்ள கடைகள் பல சேதமடைந்துள்ளன,

இந்த விபத்து காரணமாக குறித்த விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .

No posts found.
மனித பாவனைக்கு உதவாத உணவு விற்பனை | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

மனித பாவனைக்கு உதவாத உணவு விற்பனை | இலங்கை செய்திகள்

மனித பாவனைக்கு உதவாத உணவு விற்பனை | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் உணவுத் தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள் மற்றும் பேக்கரிகள் என உணவுத் தயாரிக்கும் இடங்கள் நேற்று மாலை சோதனை செய்யப்பட்டன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ச.எம்.மாதவன் தலைமையில், அவரது வழிகாட்டலில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மனித பாவனைக்கு உதவாத உணவு விற்பனை | இலங்கை செய்திகள்

இதன்போது உணவுப் பாதுகாப்பு இல்லாமல் மனித பாவனைக்குதவாத, பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பல உணவுப் பொருட்கள் சுகாதார அதிகாரிகளினா கைப்பற்றப்பட்டதுடன், வர்த்தகர்கள் நால்வர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த உணவுப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மூவருக்கு தலா 10,000 ரூபாய் மற்றும் வர்த்தகர் ஒருவருக்கு 5,000 ரூபாயும் அபராதமாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போலினால் அறவிடப்பட்டதுடன்,
உணவுப் பொருட்கள் நீதவானின் உத்தரவின்பேரில் அழிக்கப்பட்டன.

No posts found.