ஹைட்டியில் இலங்கை இராணுவம்
Posted in இலங்கை செய்திகள்

ஹைட்டியில் இலங்கை இராணுவம்

ஹைட்டியில் இலங்கை இராணுவம்

ஹைட்டியில் இலங்கை இராணுவம் ,ஹைட்டியில் துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான தரநிலைகள் குறித்த இலங்கை–ஐ.நா பேச்சுவார்த்தைகள்

நியூயார்க்கில் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும்

நியூயார்க்கில் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையே நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின் போது, ​​முன்மொழியப்பட்ட

கும்பல் ஒடுக்குதல் படையின் (GSF) கீழ் ஹைட்டிக்கு இலங்கை துருப்புக்களை நிலைநிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் முக்கியத்துவம் பெற்றன.

இக்கடிதங்களில் செயல்பாட்டுத் தயார்நிலை, ஐ.நா தரநிலைகளுக்கு இணங்குதல் மற்றும் மனித உரிமைத் தேவைகளைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்தப்பட்டது.

முன்மொழியப்பட்ட துருப்புக்களை நிலைநிறுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக,

பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகோந்த தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு, ஐ.நா-வின் மூத்த அதிகாரிகளுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தியது.

, ஐ.நா-வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி

இந்தத் தூதுக்குழுவில், ஐ.நா-வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஜயந்த ஜயசூரிய, ஐ.நா-வின் இராணுவ ஆலோசகர் மற்றும் பிற மூத்த

அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். இந்தப் பயணத்தின் போது, ​​பாதுகாப்புச் செயலாளர், செயல்பாட்டு ஆதரவுக்கான பிரதிப் பொதுச்செயலாளர் அதுல்

காரே, சீருடைத் திறன்கள் ஆதரவுப் பிரிவின் இயக்குநர் மைக்கேல் முலிங்கே கிட்டிவி மற்றும் ஐ.நா மனித உரிமைகள் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.

அனைத்துப் பணியாளர்களுக்கும் வலுவான மற்றும் வெளிப்படையான மனித உரிமைகள் சரிபார்ப்பு செயல்முறை தேவை என்பது கலந்தாலோசனையின்

ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. முன்மொழியப்பட்ட ஹைட்டிப் பணி உட்பட, ஐ.நா. களப் பணிகளுக்காக அனுப்பப்படும் அனைத்துப் படைகளுக்கும்

பொருந்தக்கூடிய ஒரு விரிவான தேசிய மனித உரிமைகள் சரிபார்ப்புப் பொறிமுறையை உருவாக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக இலங்கைத் தரப்பு குறிப்பிட்டது.

மேலும், ஐ.நா. வழிகாட்டுதல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க இந்தக் கட்டமைப்பைச் செயல்படுத்துவதற்காக, இலங்கையில் உள்ள ஐ.நா.

வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியது.

இது, அமைதி ஆதரவு நடவடிக்கைகளில் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தப்பி ஓடிய 50 ஆயிரம் இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவம்
Posted in இலங்கை செய்திகள்

தப்பி ஓடிய 50 ஆயிரம் இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவம்

தப்பி ஓடிய 50 ஆயிரம் இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவம்

தமிழீழ விடுதலை புலிகள் போரில் தப்பி ஓடிய 50 ஆயிரம் இலங்கை இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவ தலைமையகம் .

போரில் தப்பி ஓடிய இலங்கை இராணுவம்

புலிகள் இலங்கை இராணுவத்தினருக்கு இடையில் இடம் பெற்று வந்த உள்நாட்டு யுத்தத்தில், தப்பி ஓடிய ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இராணுவத்தை ,மீள வந்து படையில் சேருமாறு வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

சித்தரை மாதம் 20 ஆம் திகதி முதல் வைகாசி மாதம் 20 ஆம் திகதி வரை மீளவும் பொது மன்னிப்பு காலம் வழங்க பட்டுள்ளது .

இதில் படையில் மீள இணையவோ அல்லது விலகி செல்லவோ முடியும் என்கிறது இலங்கை இராணுவ தலைமையகம் .

இந்த கால பகுதியில் மீள இராணுவத்தில் வந்து சேருமாறு இலங்கை இராணுவ தலைமையகம் அழைப்பு விடுத்துள்ளது .

விடுதலை புலிகள் மரபு வழி போர்

தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் பாரிய யுத்தம் இடம்பெற்று வந்தன .

இவ்வாறான கால பகுதியில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினரால் குறியீட்டு பெயருடன் கொண்ட பல மரபு படை போர் நடத்த பட்டது .

தப்பி ஓடிய 50 ஆயிரம் இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவம்

அதில் குறிப்பாக ஓயாத அலைகள் ஒன்று முதல் ஓயாத அலைகள் மூன்று கட்டமான போர் இடம்பெற்று இருந்தது .

இந்த வெற்றிகரமான மண்மீட்பு போரில் பல்லாயிரம் இலங்கை இராணுவம் பலியாகியது .

அதேபோல் ஆனையிறவு படைத்தளம் அழிப்பின் பொழுது இலங்கை இராணுவம் தப்பி ஒடியிருந்தது .

அவ்வாறு தப்பி ஓடிய ஐம்பது ஆயிரம் படைகளில் பத்து ஆயிரம் பேர் மட்டும் மீள திரும்பினர் .

இலங்கை இராணுவத்தில் இணைய மறுக்கும் தப்பி ஓடிய படைகள்

இவ்வாறு தப்பி ஓடியவர்கள் தொடர்ந்தும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் .அவர்களையே இப்பொழுது இலங்கை இராணுவம் தேடி வருகிறது .

இன்று இலங்கை இராணுவத்தினருக்கு நடந்த இதே நிகழ்வு நாளை இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் நடக்கும் .அவர்களது படையிலும் பல ஆயிரம் படைகள் பலியாகி இருக்க கூடும் என்பது கணிப்பாகிறது .

தப்பி ஓடியவர்களை மீளவும் இலங்கை இணைக்க அழைப்பதில் இருந்து புதிய போராட்டம் ,இலங்கையில் வெடிக்க போவதற்கான முன் அறிவிப்பாக இதனை உற்று நோக்க முடிகிறது .

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டாலும் அவர்களதுவீரம் செறிந்த தாக்குதல் எவ்வாறு உள்ளது என்பதை, இலங்கை இராணுவம் இவ்விதம் தப்பி ஓடியதில் இருந்து தெரிகிறது .

வாழ்ந்தவர்கள் அழிக்க படலம் ஆனால் வரலாறு அழிக்க படாது என்பதற்கு இவை சான்றாகும் .

Featured

Loading...
உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு
Posted in இலங்கை செய்திகள்

உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு

உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு

உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவத்தினர் இணைந்துள்ளனர் ,இலங்கை இராணுவம் இணைவு தொடர்பாக ரஷ்யாவிடம் இலங்கை தகவல் கோரியுள்ளது .

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இரண்டு ஆண்டுகள் கழிந்து கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ..

இவ்வாறான காலப் பகுதியில் ரஷ்யா படையில் இனைந்து உக்ரைன் அரச படைகளிற்கு எதிராக போரிட இலங்கை இராணுவம் இணைந்துள்ளது சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .

சமீப சில வாரங்களுக்கு முன்னதாக உக்ரைன் இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைந்துள்ள காணொளிகள் வெளியான நிலையில் ,தற்போது ரஷ்ய இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு என்ற செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .

Featured

Loading...
இராணுவத்தினருக்கு தரம் உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தினருக்கு தரம் உயர்வு

இராணுவத்தினருக்கு தரம் உயர்வு

பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் பேரில் இலங்கை இராணுவத்தின் 314 அதிகாரிகள் மற்றும் இதர நிலைகளில் உள்ள 1,565 பேரும் தர முயர்த்தப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த குழு அடுத்த தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்படி மேஜர் ஜெனரல் தரத்திற்கு 07 பிரிகேடியர்களும். பிரிகேடியர் தரத்திற்கு 12 கேணல்களும், கேணல் நிலைக்கு 37 லெப்டினன்ட் கேணல்களும், 41 மேஜர்கள் லெப்டினன்ட் கேணல் தரத்திற்கும் உயர்தப்பட்டுள்ளனர்.

மருத்துவத்தில் இலங்கை இராணுவம் சாதனை
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவத்தில் இலங்கை இராணுவம் சாதனை

மருத்துவத்தில் இலங்கை இராணுவம் சாதனை

உலகின் மிகப்பெரிய மற்றும் சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ மருத்துவமனையில் அந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிறுநீரக மருத்துவர், லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் திடீரென இராணுவம் குவிப்பு பதட்டத்தில் மக்கள்

இலங்கையில் திடீரென இராணுவம் குவிப்பு பதட்டத்தில் மக்கள்

இலங்கையில் நாடெங்கும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் வீதி பாதுகாப்பில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .

தேவை ஏற்படும் பொது சோதனைக்ளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் அடிப்படையில் நாடெங்கும் ஆயுதம் தாங்கிய படையினர் குவிக்க படும் வர்த்தமானி அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது.

மக்கள் எழுச்சியை தடுக்கும் முகமாக, இந்த இராணுவ குவிப்பை , ரணில் விளக்கிரமசிங்க மேற்கொள்வதான குற்ற சாட்டு , முன் வைக்க பட்டுள்ளது .


மேலும் பசில் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பின் பின்னர் ,இந்த இராணுவ குவிப்பு நடவடிக்கை வேகப்படுத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இராணுவம் தயாரித்த குளிரூட்டப்பட்ட யுனிபப்பல்ஸ் கப்பல்

இலங்கை இராணுவம் தயாரித்த குளிரூட்டப்பட்ட யுனிபப்பல்ஸ் கப்பல்

இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல் இயந்திர படையணி (ளுடுநுஆநு) படையினரால் இராணுவ புதிய கண்டுபிடிப்புகளில் மற்றொரு மைல்கல்லை பதித்துள்ளது.

இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல் இயந்திர படையணியின் படையினர் தயாரித்த 9 நவீன மயமாக்கப்பட்ட யூனிபபல் வாகனங்கள் ஒரு மீட்பு வாகனம் மற்றும் 3

கொள்கலன்களை கப்பல் ஊடக மேற்கு ஆபிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட தேசமான மாலியில் பணியாற்றும் இலங்கையின் ஐ.நா அமைதி காக்கும் படையினருக்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர

சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு நேற்றுக் காலை (26) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் அந்த வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களை பார்வையிட்டார். அவற்றை கப்பலில் அனுப்பும்

ஏற்பாடுகளுக்காக பென் லைன் ஷிப்பிங் ஏஜென்சிகள் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமையாளர் திரு ரஹிலீன் பூராவிடம் கையளித்தார்.20200626un 9bஇலங்கை இராணுவ மின்சார மற்றும்

பொறியியல் இயந்திர படையணியின் படையினரின் தொழில் நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கண்ணிவெடி-எதிர்ப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் ஐ.நா.

விவரக் குறிப்புகளுடன் பொருந்தக்கூடிய வகையில் சர்வதேச தரங்களுக்கு இணையாக உதிரிபாகங்களைப் பயன்படுத்தி

உற்பத்தி செய்யப்படுவதால், அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் ஒரு பெரிய அந்நிய செலாவணியை சேமிக்கிறது. பல ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க வாகனங்களுக்கு ஒத்ததாக அந்த வாகனங்களை

உற்பத்தி செய்வதில் இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல் இயந்திர படையணி முக்கிய பங்கு வகிக்கிறது.

இதன் போது ஊடகவியலாளர்களுக்கு பேசிய பிரதம அதிதி அவர்கள், மாலியில் ஐ.நா. கடந்த இரண்டு ஆண்டுகளில் படையினர்களுக்கு கிடைக்கக்கூடிய அத்தகைய வாகனங்களின்

எண்ணிக்கை குறித்து ஐ.நா.வுடன் ஒரு புரிந்துணர்வை எட்டியுள்ளோம். முன்னதாக, இறக்குமதி செய்யப்பட்ட றுஆயுணு வாகனங்கள், ஒவ்வொன்றும் சுமார் 40 மில்லியன் டொலர் செலவில்

ஐ.நா. படையினர்களுக்காக வாங்கப்பட்டன. அவை மிகவும் விலை உயர்ந்தவை. படைகள் பொதுவாக அந்த வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எங்கள் திறமையான இராணுவ மின்சார மற்றும்

பொறியியல் இயந்திர படையணியின் படையினர் அந்த செலவில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியை செலவில் இந்த வாகனங்களை இங்கு தயாரிக்க முடிந்தது.

‘இந்த யுனிபபெல்கள் றுஆயுணு வாகனங்களுக்கு ஒத்தவை ஆனால் இதில் செல்லக்கூடிய எண்ணிக்கை அதிகம்.
அவை ஐ.நா. தேவைகள் மற்றும் விவரக் குறிப்புகளுக்கு

முழுமையாக குளிரூட்டப்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்குள் அமர்ந்திருப்பது மிகவும் எளிதானதுஇ மேலும் மாலியில் நடவடிக்கைகள் பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை

உள்ளடக்கியிருப்பதால் எங்கள் படைகளுக்கு அதிகபட்ச வசதியை உறுதி செய்துள்ளோம். மற்றய யூனிபபல்களைப் போலல்லாமல் ஒவ்வொரு வாகனத்திலும் இரண்டு துப்பாக்கிகளை

வைத்திருக்கிறோம்இ இருப்பினும் ஒரு துப்பாக்கி மட்டுமே மற்றய வாகனங்களில் வசதி செய்யப்படுகிறது. நிபுணத்துவம் பெற்ற எங்கள் படையினர் மாலி மற்றும் பிற வெளிநாடுகளில்

பாராட்டத்தக்க கடமைகளைச் செய்கின்றன. கொவிட் -19 நெருக்கடியின் போதுஇ நமது படையினரை வீட்டிலேயே அடைத்து வைக்காமல் நேரத்தை வீணாக்காமல்இ புதுமைகள் மற்றும் புதிய

தயாரிப்புகளின் தொகுப்பை உருவாக்கி உள்ளோம் அவற்றை இங்கு தொடர்ந்து உற்பத்தி செய்தால் மில்லியன் கணக்கில் மீதப்படுத்த முடியும் எங்கள் திறன்கள் தெரிந்து

கொள்ளப்பட்டவுடன்இ எதிர்காலத்தில் வெளி நாடுகளிடமிருந்தும் இதற்க்கான கோரிக்கைகள் வரும் என நாங்கள் நம்புகிறோம்,

ஏனெனில் யுனிபபல் காலாட்படைக்கு மிகவும் அவசியமான ஒரு துணை ஆயுதமாகும் என லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

தற்போது ஐ.நா அமைதி காக்கும் படையில் 20 அதிகாரிகள் மற்றும் 223 படையினராக மொத்தம் 243 பேர் லெப்டினன்ட் கேணல் நிஹால் காலகே தலைமையில், 65 வாகனங்களுடன் மாலி படையில் சேவை

செய்கின்றனர். இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் இன்று (26) இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு

வியாழக்கிழமை (25) கட்டு பெத்தை வேலை தளத்தில் வெளிநாட்டு பணிப்பாக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஏ.எஸ். வனசிங்க அவர்களால் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.

இராணுவ தலைமையகத்தில் உத்தியோக பூர்வ ஒப்படைப்பு விழாவில் முதன்மை பணி நிலை அதிகாரிகள், பணிப்பாக உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்குபற்றினர்.

இலங்கை இராணுவம்
இலங்கை இராணுவம்