Tag: இந்திய இலங்கைக்கு இடையில் பாலம்
இந்திய இலங்கைக்கு இடையில் பாலம்
இந்திய இலங்கைக்கு இடையில் பாலம்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி இணைப்புகள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் மேம்படுத்த வேண்டும் என்று த ஹிந்து தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில், இந்தியாவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவை மேற்கொண்டிருந்தார்.
எனினும் அது உடனடியாக நடைமுறைக்கு வரப்போவதில்லை.
முன்னதாக இருபது ஆண்டுகளுக்கு முன்னரும் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, சென்னையில் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள தலைமன்னாருடன் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தை இணைக்கும் பாலம் கட்டும் யோசனையை முன்வைத்திருந்தார்.
இந்திய இலங்கைக்கு இடையில் பாலம்
இது பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு பற்றிய அவரது பெரிய பார்வையின் ஒரு பகுதியாகும்,
இது இலங்கையையும் இந்தியாவின் தென் மாநிலங்களையும் உள்ளடக்கியது மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
எனினும் சிங்கள-பௌத்தர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் குழுக்களும், கட்சிகளும் இலங்கைக்கு எந்தப் பயனும் தராது என்ற அடிப்படையில் இந்தத் திட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.
இதன்போது இந்த விரிவுபடுத்தப்பட்ட பௌதீகத் தொடர்பைப் பற்றிய பேச்சு அடியோடு நின்றுவிடுகிறது என்றும் த ஹிந்து குறிப்பிட்டுள்ளது.
2015 டிசம்பரில் இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி, 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான
இலங்கை இந்திய பாலத் திட்டத்திற்கு நிதியளிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருப்பதாக மக்களவையில் தெரிவித்தபோது,எதிர்ப்பாளர்களின்
கடுமையான விமர்சனங்கள் காரணமாக இலங்கையின் பதில் முடக்கப்பட்டதாகவும் த ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையிலேயே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு இப்போது இருப்பதை விட ஆழமாக இருக்க வேண்டும் என்றும் த ஹிந்து தெரிவித்துள்ளது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை
- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்
- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது
- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை
- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்
- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை
- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது
- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்
- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது
- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

















