Tag: ஆயுதத்தால்
ஒருவர் கொலை ஆயுதத்தால் தாக்கப்பட்டு
ஒருவர் கொலை ஆயுதத்தால் தாக்கப்பட்டு
ஒருவர் கொலை ஆயுதத்தால் தாக்கப்பட்டு,மஹியங்கனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை
கூரிய ஆயுதத்தால்
மஹியங்கனையின் குருமட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர்.
மஹியங்கனையைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நடைபெற்று வரும் விசாரணைகளின்படி
தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின்படி, இறந்தவரின் உறவினரின் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட குடும்ப தகராறில் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த இரண்டாவது நபர் தற்போது மஹியங்கனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை ,ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவின் சுந்தரபுரம் பகுதியில் இன்று (24) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் மற்றைய நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தாக்குதல் சம்பவமாக மாறியதைத் தொடர்ந்து இந்தக் கொலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் சுந்தரபுரத்தைச் சேர்ந்த 31 வயதுடையவராவார்.
கொலையைச் செய்த 30 வயதுடைய சந்தேக நபர், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை வெயங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதுரவ விகாரைக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், வத்துபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 49 வயதுடைய வதுரவ-வெயங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்தவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக வெயங்கொட பொலிஸார் குறிப்பிடத்தக்கது


















