Tag: அடித்துக் கொலை
அம்பாறையில் பெண் அடித்துக் கொலை
அம்பாறையில் பெண் அடித்துக் கொலை
அம்பாறையில் பெண் அடித்துக் கொலை ,பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டம் பெரிய நீலவனை காவல்துறை பகுதியில் விஷ்ணு கோயில் பகுதியில் பகுதியில் .அமைந்துள்ள வீடு ஒன்றில் 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயே .இவ்வாறு மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
அடித்து துன்புறுத்தி படுகொலை
வீட்டில் தனியாக இருந்தபோது .அங்கு நுழைந்த மார்பக நபர்கள் அவரை அடித்து துன்புறுத்தி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கழுத்து மற்றும் தலைகளில் பலமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவ,ர் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் தங்கி உள்ள நிலையிலேயே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ,ஆய்வு செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் படுகொலை சம்பந்தமாக கல்முனை பிராந்திய உதவி போலீஸ் அதிகாரி, உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்தில் சென்று நேரடி பார்வையிட்டனர்.
அடுத்த கொலையை மேற்கொண்டவர்கள் ,யார் என்ன என்பது தொடர்பாக மோப்ப நாய்களின் உதவியுடன் அங்கு தடையை சேகரிப்புகள் இடம்பெற்று வருகின்றன.
சம்பவ இடத்துக்கு சென்ற நீதிமன்ற நீதிபதி அவர்களும் சம்பவத்தை பார்வையிட்டு தரவுகளையும் சம்பவங்களையும் கேட்டு அறிந்து சென்றிருக்கின்றார்.
இந்தப் படுகொலை என்பது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பெண் கொலையின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்
இதன் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்? ஏன் படுகொலை செய்யப்பட்டார் விசாரணை தொடர்கிறது மக்கள் அச்சத்தில்உறைந்துள்ளனர் .
மாணவன் அடித்துக் கொலை 11 பேர் கைது
மாணவன் அடித்துக் கொலை 11 பேர் கைது
மாணவன் அடித்துக் கொலை 11 பேர் கைது ,வெலகெதர பொலிஸ் பிரிவில் சக பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பதினொரு இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர், சில
வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதுடன், மேலும் இருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 16 ஆம் திகதி தனிப்பட்ட தகராறு காரணமாக சக பாடசாலை மாணவனை இளைஞர்கள் குழு ஒன்று உடல் ரீதியாக தாக்கியது.
பலத்த காயமடைந்த சிறுவன் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் திகதி உயிரிழந்தார்.
தாக்குதல் நடந்த நாளில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால்,
சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ள எட்டு சந்தேக நபர்களும் நேற்று பிலேஸ்ச நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அதன் பின் இரண்டு சந்தேக நபர்கள் ஏப்ரல் 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
மீதமுள்ள ஆறு சந்தேக நபர்கள் வயது குறைந்தவர்கள் என்பதால், அவர்களை சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
எட்டு சந்தேக நபர்களும் ஏப்ரல் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட உள்ளனர். மாவத்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒருவர் அடித்துக் கொலை
ஒருவர் அடித்து கொலை
வில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெடுந்தீவு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
நெடுந்தீவு காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஏழாம் வட்டார பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய் தகறாரு முற்றிய நிலையில் 21 வயதுடைய வாலிபர் ஒருவர் இருவர் அடங்கிய குழுவினால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர் .
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .
கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர் .
அடித்து கொலை செய்யப்பட்ட இந்த சம்பவமானது தற்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக எழுந்த முரண்பாட்டை அடுத்து 21 வயது வாலிபரை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் தொடர்ந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இடம் பெற்று வருகின்ற இவ்வாறான வன்முறை சம்பவங்கள் பலர் இவ்விதம் பலியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
யாழில் ஒருவர் அடித்துக் கொலை
யாழில் ஒருவர் அடித்துக் கொலை
யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவரொருவர் நேற்று இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிறேமராசன் என்கிற 66 வயதான முதியவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
யாழில் ஒருவர் அடித்துக் கொலை
உணவகம் ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என தெரியவரும் நிலையில் அதே பகுதியை வாய் பேச இயலாத சேர்ந்த 44
வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை நடந்த இடத்தில் யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜா இன்று பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு
- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்
- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்
- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை
- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்
- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு
- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ
- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு
- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது
பிரேசில் நாட்டில்- கருப்பினத்தவர் அடித்துக் கொலை
பிரேசில் நாட்டில்- கருப்பினத்தவர் அடித்துக் கொலை
பிரேசில் நாட்டில் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து பல்பொருள் அங்காடியில் வன்முறை வெடித்தது.
பிரேசில் நாட்டில் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் கருப்பினத்தவர் அடித்துக் கொலை
கலவரம் நடந்த பல்பொருள் அங்காடியை படத்தில் காணலாம்
பிரேசிலியா:
தெற்கு பிரேசிலில் உள்ள போர்ட்டோ அலெக்ரே நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில், கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ(வயது 40) என்ற நபர் அங்குள்ள பாதுகாவலர்களால்
அடித்துக் கொல்லப்பட்டார். இது குறித்து வீடியோ காட்சிகள் அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட பல்பொருள் அங்காடி போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. தற்போது, பிரேசில் முழுவதும் கருப்பினத்தவர் உரிமை மீட்பு முழக்கங்கள் எழத்
தொடங்கியுள்ளன. பிரேசில் நாட்டில் ஏற்கனவே கருப்பின மக்களுக்கான உரிமை குறித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து
வரும் நிலையில், இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே மேலும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த பல்பொருள் அங்காடியின் முன்பு மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு அந்த நிறுவனம் சார்பில் வருத்தம் தெரிவித்ததோடு, இதில் சம்பந்தப்பட்ட
காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.






















