Category: வன்னி மைந்தன் கவிதைகள்
வன்னி மைந்தன் கவிதைகள் , காதல் கவிதைகள் வன்னி மைந்தன் ,மனித உணர்வின் பிரதியாக நடைமுறை வாழ்வியலில் ஒன்றாக கலந்துள்ளது .
இந்த கயவர்களை கொல்லு
இந்த கயவர்களை கொல்லு
பட்டு சேலை விட்டு விடு
பாவம் அவரை வாழ விடு
உடல் ஒட்டு துணியை நீ கலைந்து
உறவு கொள்தல் பிழைதானே …
கட்டி தாலி நீ கட்டி
கண்ணா காமம் விளையாடு …..
கட்டா தாலி நீ பற்றின்
கயவன் உன்னை பந்தாடு ….
விழி முட்டி நீரை அவள் கொட்ட
விழுந்து விழுந்து நீ புசிப்பாய் ….
ஆடையில்லா உடல் ஒன்று
அவமான படுதல் மறந்தாயே ….
கடவுள் உன்னை ஏன் படைத்தான் ..?
கண்ணா கொஞ்சம் புரிந்து விடு …..
கருவறை தாங்கி உன்னை சுமந்தாள்
கண்ணா தாய் தெரிந்து விடு …
மனிதம் தொலைத்து வாழ்பவனே
மனிதம் இன்றேல் செத்து விடு …..
மனிதன் நீ என்றே சொல்லிவிடின்
மனிதரே கூடி இவன் தலை வெட்டு ….!
- வன்னி மைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -21/08/2017 - வன்னி மைந்தன் கவிதைகள்
நான் இறந்த பின் என் சொல்வாய் …?
நான் இறந்த பின் என் சொல்வாய் …?
கண்ணீரில் நீ குளிக்க
காளை மனம் வாடுதடி …
இது தீர வழியென்ன
இதயமே கேட்குதடி ….
அழுதழுது நீ களைத்து
அன்றாடம் களித்திருக்க …..
பொழுது வந்து எனை திட்டி
பொல்லாப்பை விதைக்குதடி ….
நீ எறிந்த கண்ணீர்க்கு
நியமாக நான் தானோ …?
ஏ தறிந்து எனை அடித்தாய்
ஏ மனமே பதில் சொல்லு …..
பழிக்குள்ள நான் சிக்கி
பலியாடாய் துடிக்கிறேன் ….
இருந்தென்ன லாபம் எண்ணு
இதயமும் உடைஞ்சிருச்சு ….
முச்சடங்கி வீழ்ந்தாலும்
முன்னே என்னை பார்க்காதே …
பேச்சடங்கி போன பின்னே
பேசியென்ன நீ காண்பாய் …?
-வன்னி மைந்தன் (T-ஜெகன் )
அக்கம் -15/08/2017
உன் துயரில் …..அழுகிறோம் ….!
உன் துயரில் …..அழுகிறோம் ….!
செந்தமிழ் பாடிய செந்நிற மேனியை
செந்தணல் இன்று தின்பதோ ..?
எம்முடல் ஆவியாய் எமக்குள் நின்றானை
எமனே நீயும் கொல்வதோ…?
வந் தமிழ் ஊரினில் வளமுடன் நிமிர்ந்தான்
வாஞ்சை வீசியே எழுந்தான் ….
உறவுகள் மிளிர உணர்வுடன் நின்றான்
உயிரை ஏனோ பறித்தாய் …?
பாடியே அழைத்து பாசத்தை வீசி
பா வலனாகியே நின்றான் …
தொட்டியை கட்டி நீரது தேக்கி
தொழும் மாடுகள் குடிக்கவே வைத்தான் ….
அறமது நீட்டி ஆர தழுவிய
அகமது வீழ்ந்தது பேரிழப்பு …
உரமது இட்டே உயர வளர்ந்தவர்
உன்னை சுற்றியே அழுதனர் ….
வேதனை தாங்கி விழிகள் கதறிட
வேலவா ஏனடா சென்றாய் …?
சாதனை நாட்டி சாவிலும் எழுந்தாய்
சாதனை யாளனாய் சென்றுவா ….!
- வன்னி மைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -10/08/2017
முரசுமோட்டை -இரண்டாம் கட்டை -ராசன் அண்ணாவின் ஆறா துயரில் தவிக்கும் குடும்பத்தார்க்கு என் கண்ணீர் சமர்ப்பணம்
நீ சிரித்தால் நான் உயிர் வாழ்வேன்
நீ சிரித்தால் நான் உயிர் வாழ்வேன்
அழகாய் நாலு மொழி பிடித்து
அன்பே அன்பே நீ பேசு …..
ஆயூள் பூராய் நான் மகிழ
அன்பாய் நீயும் உறவாடு ….
ஆறுதல் கூற நீ இருந்தால்
ஆயூள் நூறு கூடுமடி
விண்ணை பிடித்து நான் வரவே- உன்
வின் விழி ஒன்றே போதுமடி ….

நெஞ்ச குழியில் நீ இருந்து
நெருடும் நெருடல் பிடிக்கிறதே …
கன்ன குழியில் உட்காரும்
காதல் சிரிப்பு பிடிக்கிறதே ….
சலங்கை சத்தம் காதில் விழ – விழி
சாளரம் மெல்ல திறக்கிறதே
குறும்புகள் எறியும் விழி ஒன்றில்
கோடி ஆண்டுகள் நான் வாழ்வேன் …
வா வா தென்றலே
வந்து என்னில் மோது ….
நூறாண்டு நான் மகிழ
நூலிடையால் தழுவு …!
வன்னி மைந்தன் (ஜெகன் – T)
அக்கம் -04/08/2017
கல்லறை சாயும் காதல்
கல்லறை சாயும் காதல்
கண்ணீர் இல்லா காதல் ஒன்றை
கண்ணே கண்ணே காட்டு ….
கரங்கள் கூப்பி கடவுளிடம் கேட்டேன்
கண்ணீர் விட்டான் காணு …
இது நாள் வரையில் அழுதிடா காதல்
இவ் வையம் எங்கும் இல்ல …
இருந்தால் காட்டு இரு கரம் கூப்பி
இன்றே வணக்கம் இடுவேன் ….
உண்மையாய் காதல் கொண்டார் – நெஞ்சின்
உள்ளே அழுகின்றார் …
உள்ளே அழுது வெளியே நடித்து
உலவி திரிகின்றார் ….
நினைத்தது யாரோ மணந்தது யாரோ
இது தான் வாழ்வாச்சு ….
இதை எல்லாம் எண்ணி- அழுதே
வாழ்தல் வாழ்வின் விதியாச்சு …..
உள்ள பிழையை உறங்கு முன் அறிந்தால்
உலகே உன்னை மதிக்கும் …..
கால பிழையால் கசங்கும் காதல்
கல்லறை தானே தேடும் …!
வன்னி மைந்தன் -(ஜெகன்- T )
ஆக்கம் -04/08/2017
வன்னி மைந்தன் கவிதைகள்
அஞ்சாதே -காதல் செய்வோம் வா
அஞ்சாதே -காதல் செய்வோம் வா
உந்தன் பேச்சில் எந்தன் மனதில்
காதல் ஊறுதடி ……
உன்னை மறக்கா முடியா நிலையில்
உள்ளம் தவிக்குதடி …..
காலம் யாவும் உந்தன் மடியில்
தூங்கிட எண்ணுகிறேன் ….
கட்டளை தந்தால் போதுமடி – உன்
காலடி நான் கிடப்பேன் …..
வாழும் காலம் கொஞ்சம் தானே
வாழ்ந்தே மடிந்திடலாம் ….
வேதனை தாங்கி வாழும் வாழ்வு
வாழ்வின் விதி தானோ …?
ஆசை அடக்கி ஆயூள் பூராய்
அடி வாழ்வது முறைதானோ …?
அடக்கும் சமுகம் கண்டு பயந்தால்
அடி வாழ்தல் பிழைதானே …..
ஒடுக்கும் சிந்தை வாங்கி நெஞ்சில்
ஒளிவது முறைதானோ ….?
எதிர்க்கும் சிந்தை நெஞ்சில் தாங்கி
எழுவோம் எழுந்தே வா ….!
வன்னி மைந்தன் -(ஜெகன்- T )
ஆக்கம் -04/08/2017
வன்னி மைந்தன் கவிதைகள்
உன்னிடம் சரணடைந்தேன் ….!
உன்னிடம் சரணடைந்தேன் ….!
தூக்கம் தொலைத்த இரவுகளில்
துணையாய் பேசி நின்றவளே …
ஏங்க வைத்து ஏன் சென்றாய் …?
எங்கோ இப்போ நீ சொல்வாய் …?
கோடை வெயில் தீயாகி
கொதிக்க வைத்து ஏன் போனாய் ..?
மாரி மழையை கூட்டி வந்து
மனதை தடவி போகாயோ…?
பேசும் நாட்கள் சிலதாச்சு – நீ
பேசாதிருப்பது ஏனாச்சு ..?
தலையை ஆட்டி பதில் சொல்லும்
தந்திரம் எங்கு கற்றாயோ ..?
பக்கம் வந்து குந்தையிலே
பரவசமாகி மனம் துடிக்க …
வெட்க பட்டு நீ இருக்கும்
வேளை தன்னை இரசிக்கின்றேன் …
ஒற்றை கையால் தலை கோதி
ஒத்தி ஒத்தி தடவையிலே …
முழுவதும் உன்னில் வசபட்டேன்
முட்டியிட்டு நான் கிடந்தேன் …!
வன்னிமைந்தன் (ஜெகன் )
அக்கம் -01/08/2017
என்னை கொன்றிடு ….!
என்னை கொன்றிடு ….!
துயர் ஒன்று வந்தென்னை துண்டாடுதே
தூளாக்கி மனம் வீச பந்தாடுதே ….
வீசும் புயலாகி வலியாடுதே
விழியோடி மழையாகி குளிப்பாட்டுதே
கரை காண முடியாத கடலாகுதே – இறுதி
கல்லறை தேடும் முடிவாகுதே ….
வாலிப தவறொன்று இடியாகுதே
வான்வழி மின்னல் பொறியாகுதே….
கேள்விக்கு பதிலின்றி மனம் வாடுதே
கேலிக்கையாகி வாழ்வோடுதே …..
சதியென்று புதிராடி உறவாடுதே
சாவதை தேடியே மனம் ஓடுதே ….
இதுவென்ன வாழ்வா மனம் பேசுதே
இனியென்ன வாழ்வோ உயிர் கூசுதே
கண்ணீர்க்கு சொந்தம் யாரானதோ ..?
கை கூப்பி கும்பிட்டேன் எனை கொன்றிடு ….!
வன்னி மைந்தன் – (ஜெகன்-T )
ஆக்கம் -03,05,2017
செல்லப்பா உனை மறவோம் ..!
செல்லப்பா உனை மறவோம் ..!
முரசுமோட்டை ஒன்றியத்தின்
முதலவாது மன்றத்தில்
வந்தமர்ந்த மூத்தவனே -எங்கள் …
மனத் தடத்தில் நீ இருப்பாய் …
சந்தியில வந்து நின்று
சாக்கடையை திறந்தவரை
கண்டு பொங்கி எழுந்தவனே
கள பாடல் தந்தவனே …
மிஞ்சி தமிழ் வையம் எழ
கொஞ்சு தமிழ் நீ குழைத்து
ஏந்த கருவி செய்தவனே
எங்கள் ஆசான் ஆனவனே …
கானகத்தில் அவன் இருந்து
கட்டளைகள் தந்து விட
பாட்டாலே உயிர் தந்த
பா இசை நீ தானே ….
வங்க கடல் இடையினில
வந்து வழி தடுத்துன்னை
சிறை இருத்தி வைக்கையிலும் -நீ
சிறகுடைந்து போகலையே …
மூத்தவனே நீ வந்து
முன் அமர்ந்து மகிழ்வித்தாய்
நெஞ்ச மெல்லாம் மலர்கிறது
உன் நினைவினிலே சுத்துறது …
கண் முன்னே வந்தமர்ந்து
காட்சி தந்த பண்ணவரே
முரசுமோட்டை மாநகரம் -உங்கள்
மூவரையும் மறவாது
தேகம் உடல் வேகையிலும்
தேம்பி விழி கதறையிலும்
கரம் தந்து வலி துடைத்த
காணக் குயில் நீ தானே …

ஓடி வந்து இங்கமர்ந்து
உன்னை பார்க்க வந்ததிந்த
கொஞ்சு தமிழ் பார்த்தாயா
கொள்ளை பிரியம் கண்டாயா …?
வாடாத மலரவனே
வைய தமிழ் மறவானே
எம் நெஞ்சில் நீ இருப்பாய்
என்றும் உன்னை மறவோமே …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -12/04/2017
உயிர் பலியை தடுப்பது யார் …?
உயிர் பலியை தடுப்பது யார் …?
உயிர் குடிக்க தானே இந்த போர் நடக்குது
உலகம் எல்லாம் கூடி தானே பலி எடுக்குது …
பேச்சு மேசை ஒன்றும் இங்கே பேசவில்லையோ ..?- இந்த
பேரழிவு தடுக்கத்தானே கூடவில்லையோ ..?
ஆட்சியிலே உள்ள கதிரை ஆடவில்லையோ ..?
அதி காரம் தந்த மக்கள் காணவில்லையோ ..?
நீளும் இந்த போருக்குகிங்கு முடிவு இல்லையோ ..?
நின் மதியாக வாழும் நிலை தோன்ற கூடுமோ ..?
ஆடும் இந்த ஆட்டத்திலே ஏது தோன்றுமோ ..?
அழிந்த பின்னர் மாந்தர் இங்கே ஏது தேறுமோ ..?
காக்கும் ஆட்சி கண்ணை மூடி உறங்கலாகுமோ ..?
கள பலிகள் தடுக்கா ஆட்சி தேவையாகுமோ ..?
உயிர் பலியை தடுப்பது யார் …?
வலிகளாலே விழிகளும் நீரை கொட்டுதே
வந்து வெடிக்கும் கணைகளும் உயிரை தட்டுதே …
வாழும் இந்த வாழ்க்கையிலே ஏது மிஞ்சுமோ ..?
வழி காட்டும் உயர் மனிதமும் வீழ்ந்து போனதோ ..?
செய்தி செல்லும் ஊடகங்கள் செவிகள் இல்லையோ ..?
செய்து வைத்த அரசியலே சதிகள் கொல்லுமோ..?
ஓர் உலகாய் வாழும் மக்கள் உயிர்கள் இல்லையா ..?
ஒருவன் மாறி ஒருவர் அழித்தால் உலகு மிஞ்சுமா ..?
- வன்னி மைந்தன் -( ஜெகன் )
அக்கம் -06-03-2017
உன்னால் சாகிறேன் …கலங்காதே ….!
உன்னால் சாகிறேன் …கலங்காதே ….!
முட்டி விட்ட உன் நினைப்பில்
மூழ்குதடி என் துடிப்பு …
விட்டு உயிர் போயிடவா..? – நெஞ்சே
விடை என்ன சொல்லி விடு ….
சுற்றி உன்னை வந்ததினால் – என்னை
சுட்டு விட்டு எங்கொளிந்தாய் …?- காற்றாய்
தட்டுகிறேன் உன் மேனி
தடவி என்னை போயிடுவாய் ….
பறந்திடவா எனை படர்ந்தாய் ..?- காதல்
பட்டிடவா எனை தொடர்ந்தாய் ..?
விட்டு விட துடிப்பதென்ன …? – இந்த
விடுதலைக்கு பிறப்பென்ன …?
சொல்லிடுவாய் ஒரு வரியில் – என்னை
கொன்றிடுவாய் ஒரு நொடியில் ..
ஈர்ப்பின்றி போனவளே – என்
இறப்பை எண்ணி கலங்காதே..!
- வன்னி மைந்தன் -( ஜெகன் )
ஆக்கம் -18/01/2017






