Posted in மருத்துவம்

வாய் துர்நாற்றம்… இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்..

வாய் துர்நாற்றம்… இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்..

வாயில் ஏற்படும் துர்நாற்றம் இந்த நோயின் தீவிர அறிகுறியாக இருக்கலாம். எனவே வாய்துர்நாற்றம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது.

வாய் துர்நாற்றம்… இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்..
வாய் துர்நாற்றம்


அழகான முகத்துடன் பிரகாசமான பல் வைத்திருப்பதும் சிறப்பு. ஆனால் துர்நாற்றம் என்றால் யாரும் உங்களுடன் பேச விரும்ப

மாட்டார்கள். இது உடல்நலம் தொடர்பான வேறு சில காரணங்களால் ஏற்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, வாயின் வாசனையும் நோயின் அறிகுறியாக இருக்கலாம். நீங்களும் இந்த

பிரச்சனையுடன் போராடுகிறீர்களானால், கெட்ட மூச்சுக்கு என்ன காரணம், கெட்ட மூச்சுடன் அதை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள்?

வாய்வழி தொற்று, துரித உணவை அதிகமாக பயன்படுத்துதல், வாய் வறட்சி அல்லது எந்தவிதமான போதைப்பொருள் உள்ளிட்ட மோசமான வாய் துர்நாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன.

நம் வாயில் உள்ள உமிழ்நீர் நம் வாயை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது பல நோய்களிலிருந்து பற்களையும்

பாதுகாக்கிறது. இருப்பினும், வாயில் உமிழ்நீர் இல்லாதது பற்களில் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.

-நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், அதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். எதையாவது சாப்பிட்ட பிறகு அது மிகவும் துர்நாற்றம்

வீசுகிறது என்று நீங்கள் நினைத்தால், முதலில் அதை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

  • புகைபிடித்தல் பல வழிகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் உங்களுக்கு மூச்சுத் திணறல் இருந்தால், அது உங்கள் பிரச்சினையை இரட்டிப்பாக்கும்.
  • உண்மையில் சிகரெட் அல்லது புகைபிடித்தல் உங்கள் வாயில் ஒரு துர்நாற்றத்தை உண்டாக்கி உங்கள் வாயை உலர வைக்கும். இது உங்கள் துர்நாற்றத்தை மோசமாக்கும்.
  • உங்கள் வாயிலிருந்து வாசனை வருகிறதென்றால், சைனஸ், வாய் அல்லது தொண்டை தொடர்பான கடுமையான பிரச்சினை
  • உங்களுக்கு இருக்கலாம். சைனஸ் நோய்த்தொற்றுகள், உடலில் நீரின் பற்றாக்குறை, நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, உங்கள்
  • மேல் அல்லது கீழ் சுவாசக் குழாயில் தொற்று மற்றும் டான்சில்ஸ் இதன் விளைவாக வரலாம். இதன் பாக்டீரியா உங்கள் வாயின் வாசனையை ஏற்படுத்தும்.
Posted in மருத்துவம்

ஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?

ஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?

ஒரே ஒருமுறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்? இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு.

ஒரே ஒருமுறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்? இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு.

ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள். பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து

விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார்

என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம்.

ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது. இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும்

தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை.

மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும். சிலருக்கு முதல் முறையிலேயே கருத்தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது

முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை.

முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத்தரிக்கலாம் என்பதே நிதர்சனம். பொதுவாக ஒரு

மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள்.

85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. சிலருக்கு

பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக

வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.

எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.

Posted in மருத்துவம்

வயிற்றில் புண் கிருமித் தொற்றை குணமாக்க இதை பண்ணுங்க

வயிற்றில் புண் கிருமித் தொற்றை குணமாக்க இதை பண்ணுங்க

இந்த சூப் குடித்தால் குடல் புழுக்கள் நீங்கும். வயிற்றில் புண், கிருமித் தொற்று இருந்தால் சரியாகும். பசியைத் தூண்டி, செரிமான ஆற்றலைக் கொடுக்கும். உடலுக்கு புத்துணர்வைத் தரும்.

வயிற்றில் புண், கிருமித் தொற்றை குணமாக்கும் வேப்பம்பூ கொள்ளு சூப்


வேப்பம்பூ கொள்ளு சூப்
தேவையான பொருட்கள் :

வேப்பம்பூ – 4 டீஸ்பூன்,

கொள்ளு – 50 கிராம்,
மிளகு – 2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை – 2,


அன்னாசிப் பூ – 5 கிராம்,
நல்லெண்ணெய் – 25 மி.லி,
கடுகு, மஞ்சள் தூள் – சிறிதளவு,


உப்பு – தேவையான அளவு,
பூண்டு – 50 கிராம்.

வேப்பம்பூ கொள்ளு சூப்

செய்முறை:

கொள்ளுவை நன்றாக வறுத்துப் பொடித்து கொள்ளவும்.

நல்லெண்ணெயில் வேப்பம்பூவை வறுத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீரை, நன்றாகக் கொதிக்கவிடவும்.

இதில் மஞ்சள் தூள் சேர்த்து, கொள்ளுப் பொடியைக் கட்டி இல்லாமல் கரைத்துச் சேர்க்கவும்.

வயிற்றில் புண் கிருமித் தொற்றை குணமாக்க இதை பண்ணுங்க

இதில், வறுத்த வேப்பம்பூ, உப்பு சேர்க்க வேண்டும்.

மிளகு, பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ இவற்றை நன்றாக அரைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பூண்டு, அரைத்த மிளகுக் கலவையைச் சேர்த்துக் கலக்கவும்.

இந்தக் கலவையைக் கொதிக்கும் சூப்பில் கொட்டி, கலக்கி இறக்கவும்.

சத்தான வேப்பம்பூ கொள்ளு சூப் ரெடி.

    Posted in மருத்துவம்

    முகச்சுருக்கமா? கவலைய விடுங்க… இத டிரை பண்ணுங்க

    முகச்சுருக்கமா? கவலைய விடுங்க… இத டிரை பண்ணுங்க

    இளம் வயதிலேயே ஒரு சிலருக்கு சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை ஏற்படுத்தி விடும். வறட்சியான தேகம், எண்ணெயில்

    பொரித்த உணவுகள். பாஸ்ட் புட் கலாச்சாரம் போன்றவைகள் இளமையிலேயே முகச்சுருக்கத்தை ஏற்படுத்திவிடும்.

    இளம் வயதிலேயே முகச்சுருக்கமா? கவலைய விடுங்க… இத டிரை பண்ணுங்க…
    இளம் வயதிலேயே முகச்சுருக்கமா?


    இளம் வயதிலேயே ஒரு சிலருக்கு சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை ஏற்படுத்தி விடும். வறட்சியான தேகம், எண்ணெயில்

    பொரித்த உணவுகள். பாஸ்ட் புட் கலாச்சாரம் போன்றவைகள் இளமையிலேயே முகச்சுருக்கத்தை ஏற்படுத்திவிடும்.

    அதேபோல் தேவையற்ற விசயங்களுக்கு கவலைப்படுவதும் முகச்சுருக்கம் ஏற்பட காரணமாகிறது. எனவே முகச்சுருக்கத்தைப் போக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள். காய்ச்சி

    ஆறவைத்த பால் உடன் இரண்டு டீஸ்பூன் அதனுடன் நான்கு துளி எலுமிச்சை சாறு கலந்து இரவு படுக்கும் முன்பு முகத்தில் சுருக்கம் உள்ள இடங்களில் பூசவும்.

    காலை எழுந்த உடன் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சோப் போடக்கூடாது. இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு செய்து வர சுருக்கம் போகும். கேரட் சாறு, தேன் ஒரு டேபிள் ஸ்பூன் கேரட்

    சாறுடன் ஒரு டீஸ்பூன் பால் சேர்த்து முகத்திலும் கழுத்திலும் தேய்க்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து கழுத்திலும் முகத்திலும் தேய்க்கவும்.

    20 நிமிடத்திற்குப் பிறகு ஒரு பிஞ்ச் சோடா பை கார்பனேட் கலந்த சுடுநீரில் பஞ்சை முக்கி துடைத்தால் எப்படிப்பட்ட சுருக்கங்களும் மாயமாகி விடும். பப்பாளி, பாதம் எண்ணெய் பப்பாளிப்பழம்

    முகச்சுருக்கத்தைப் போக்கும் பழுத்த பப்பாளியை நன்கு கூழாக்கி அதனை முகத்தில் தேய்ப்பது நல்ல பலன் தரும்.

    பப்பாளி சதையை சாப்பிட்ட பின் அதன் தோலின் உட்பகுதியில் உள்ள பகுதியை தேய்த்தால் போதும் நல்ல பலன் கிடைக்கும். இரவு படுக்கைக்குப் போகும் முன்பு பாதம் எண்ணெயை நன்றாக

    முகத்தில் தேய்த்து உறங்கவும். பின்னர் காலையில் எழுந்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவ சுருக்கம் போயே போச்சு.

    வைட்டமின் ஈ முகச்சுருக்கத்தை நீக்குவதில் ஈ வைட்டமினுக்கு முக்கிய பங்கு உண்டு. வைட்டமின் மாத்திரையை உடைத்து, அதனுடன் கிளிசரின் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம்

    கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். முகச்சுருக்கம் நீங்கும். நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து

    முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.

    ஆரஞ்ச் ஜூஸ் முகச் சுருக்கம் வராமல் தடுக்க வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கேரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும். துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு

    தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

    தண்ணீர் குடிங்க தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    அதிக அளவு தண்ணீர் குடிப்பதன்மூலம் தோலில் ஈரப்பசை அதிகரித்து இளமை தோன்றும். அது முகச்சுருக்கத்தை நீக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக பெண்கள் தினமும்

    குறைந்தது 1 1/2 லிட்டர் தண்ணீர் பருக வேண்டுமாம் இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    Posted in மருத்துவம்

    பற்கள் உடைவதால் ஏற்படும் பிரச்சனைகள்

    பற்கள் உடைவதால் ஏற்படும் பிரச்சனைகள்

    விபத்தினால் பல்லில் அடிபடுமானால் பல் உடையலாம். பற்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு உள்ளனவோ அதைப் பொறுத்து சிகிச்சை அமையும்.


    பல் சொத்தை கடுமையாக இருந்தால் ஒரு கட்டத்தில் பொடிப் பொடியாகப் பற்கள் உடைந்துவிட வாய்ப்பு அதிகம். விபத்தினால் பல்லில் அடிபடுமானால் பல் உடையலாம். குழந்தைகள்

    விளையாடும்போது கவனக்குறைவாக காயம் பட்டாலும் பற்கள் உடைய வாய்ப்பு இருக்கிறது. சண்டை போடும்போது முகத்தைத் தாக்கினால் பற்கள் உடையும். இருளில் எங்காவது இடித்துக்

    கொள்ளும் போதுகூட பற்கள் உடையக்கூடும். தெற்றுப்பற்கள் உள்ளவர்களுக்கு சிறு விபத்து ஏற்பட்டாலும் பற்கள் உடைந்துவிடும்.

    பல்லில் அடிபட்டு முழு பல்லும் பெயர்ந்து விழுந்தாலும், பாதி பல் உடைந்தாலும், அந்தப் பல்லை ஒரு டம்ளர் பாலில் போட்டு மூடி, உடனடியாக பல் மருத்துவரிடம் அதைக்கொண்டு செல்லுங்கள்.

    உடைந்த பல்லை மீண்டும் அதே இடத்தில் பொருத்திவிடவும் வழிகள் உள்ளன. பல்லின் உடைந்த பகுதியை ஒரு வகை சிமெண்ட் கொண்டு அடைப்பது, பல்லின் மேல் கேப்’ போட்டு மூடுவது, பல்

    முழுவதையும் எடுத்துவிட்டு, அந்த இடத்தில் ‘இம்பிளான்ட் சிகிச்சை’ மூலம் செயற்கை பல்லைப் பொருத்துவது எனப் பல சிகிச்சைகள்

    மேற்கொள்ளப்படுகின்றன. பற்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு உள்ளனவோ அதைப் பொறுத்து சிகிச்சை அமையும்.

    சில நேரம் பல்லில் அடிபட்டு இருக்கும், ஆனால் உடைந்திருக்காது. இதனால் வலி இருக்காது. அதேநேரம் சில நாட்களில் பல்லின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக பழுப்பு நிறத்துக்கு மாற ஆரம்பிக்கும்.

    இதற்குக் காரணம், பல்லுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்துவிட்டது, என்பதுதான். இந்த நிலையில் உடனடியாகப் பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

    இல்லையென்றால், பல் முழுவதும் பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். பல்லையே அகற்ற வேண்டி வரலாம். இதைத் தவிர்க்கவே உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டியது அவசியம்.

    Posted in மருத்துவம்

    மூல நோய் வரக்காரணமும் தடுக்கும் வழிமுறைகளும்

    மூல நோய் வரக்காரணமும் தடுக்கும் வழிமுறைகளும்

    சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மூல நோய் (Piles) வரும். இது தற்காலிகமானது தான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும்.

    கர்ப்பிணிகளுக்கு மூல நோய் வரக்காரணமும் தடுக்கும் வழிமுறைகளும்
    கர்ப்பிணிகளுக்கு மூல நோய் வரக்காரணமும் தடுக்கும் வழிமுறைகளும்


    மூல நோய்… இந்த நோய் வந்தாலோ அல்லது இந்த நோய் அறிகுறிகள் இருந்தாலோ பெரும்பாலும் இதை வெளியில் யாரும் சொல்வது இல்லை. சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மூல

    நோய் (Piles) வரும். இது தற்காலிகமானது தான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை மூல நோய் வருவதாக சொல்லப்படுகிறது.

    மூல நோய் பிரச்னையை சரி செய்யும் வழிகளைப் பார்க்கலாம். சரியாக மலக் கழிக்காத குழந்தைகள், இளம் பருவத்தினர், 40

    வயதைக் கடந்த ஆண், பெண் இருப்பாலினருக்கும் ஆசனவாயில் மூன்று பிரச்னைகள் வருகின்றன.

    1. மூலம் (Piles)

    2.ஆசனவாய் வெடிப்பு(Fissure)

    1. மூன்றாவது, பௌத்திரம் (Fistula)

    உடலில் அசுத்த ரத்தம் செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் சரியான இடைவெளிகளில் வால்வுகள் இருக்கும். இவை தேவையில்லாமல் ரத்தம் தேங்கி நிற்பதைத் தடுக்கும். ஆனால், நம் உடலில் ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல ரத்தக் குழாய் வீங்குவதே ‘மூலநோய்’ என்கிறோம்.

    ஆசன வாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாகப் புதைந்து இருப்பது ‘உள் மூலம்’. தொட்டுப் பார்த்து கண்டுபிடிக்க முடியாது.

    மருத்துவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். வெளிப்புறத்தில் தோன்றுவது ‘வெளி மூலம்’. இதைத் தொட்டுப் பார்த்தே கண்டு பிடிக்கலாம்.

    அறிகுறிகள்…

    மலம் கழிக்கையில் ரத்தம் சொட்டுவது மலத்துடன் ரத்தமும் வெளி வருதல் மலம் கழித்த பின் லேசாக ஆசன வாயில் வீக்கம்

    மலம் இறுகி எளிதில் வெளியேறாது

    அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல்.

    மூல சதை வெளித்தள்ளுதல்

    செரிமான பிரச்னை

    புளித்த ஏப்பம்

    யாருக்கெல்லாம் மூல நோய் வரலாம்?

    நீண்ட தூரம் பைக் ஓட்டுபவர்கள் காரமான உணவுகளை உண்பவர்கள் அதிகமாக நின்று கொண்டே இருப்பவர்கள்

    வெரிகோஸ் வெயின் பிரச்னை உள்ளவர்கள் உடல்பருமன் அதிக எடை தூக்குபவர்கள் மலம், சிறுநீர் அடக்குபவர்கள் உட்கார்ந்தே வேலை செய்யும் பணியாளர்கள்

    மூல நோய் வர என்ன காரணம்?

    இந்த வீக்கம் ஏற்பட பலக் காரணங்கள் உண்டு. அவற்றில், நாட்பட்ட மலச்சிக்கல் தான் மிக முக்கியமான காரணம். மலச்சிக்கல்

    இருக்கும் போது, முக்க வேண்டியுள்ளதால் ஆசன வாயுக்கு அதிக அழுத்தம் தரப்படுகிறது. இதனால் மூல நோய் வருகிறது.

    கர்ப்பிணி களுக்கு மூல நோய்…

    கர்ப்பிணிகளின் வயிற்றில் கரு வளர வளர அடிவயிற்று உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படும். ஆசனவாய் குழாய்களில் அழுத்தம் ஏற்படுவதால் வீக்கம் உண்டாகும். இதனால் சில கர்ப்பணிகளுக்கு அக்காலத்தில் மட்டும் மூலநோய் வருகிறது. சிலருக்குப் மரபியல் மூலமாகவும் மூலநோய் வரலாம்.

    வீட்டு வைத்திய முறைகள்…

    ஆமணக்கு இலையை நெய் விட்டு இளஞ்சூடாக வதக்கவும். இரவு தூங்கும் முன்பு, மூலம் உள்ள இடத்தில் வைத்து உறங்கலாம். அரை

    ஸ்பூன் கடுக்காய் தூளை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து இரவில் குடிக்க வேண்டும். துத்திக் கீரையை நறுக்கி அதனுடன்

    பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு கடைய வேண்டும்.

    வாரம் இரண்டு முறை மதிய உணவுக்குப் பின் சாப்பிட்டு வரலாம். நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். காலையும் மாலையும் துத்தி இலையை அரைத்து

    ஒரு நெல்லிக்காய் அளவு விழுங்கிய வுடன் மோர் குடிக்கலாம். மதிய உணவில், 5 சின்ன வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாப்பிடும் பழக்கம் இருப்பவர் களுக்கு பைல்ஸ் வராது.

    அத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலை அதை நன்கு மென்று சாப்பிடவும். அந்த நீரையும் குடித்து விடுங்கள்.

    மாதுளை தோலை சுத்தம் செய்து விட்ட பின் நீரில் போட்டு கொதிக்க விட்ட பின்னர் அதை வடிகட்டி அந்த நீரை குடித்து வரலாம்.

    மூலம் வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்?

    தினமும், நார்ச்சத்து உணவுகளை சாப்பிடுங்கள். பச்சை நிற காய்கறிகள் அனைத்துக் கீரைகள் பீன்ஸ், அவரை புடலங்காய் வெண்டை காய் தினம் ஒரு கீரை சிவப்பரிசி சாதம், கைக்குத்தல் சாதம் 2-3 வகை பழங்கள் வாழைப்பழம் அவசியம் பப்பாளி சாத்துகுடி, கமலா பழம் 2- 3 லிட்டர் தண்ணீர்

    தவிர்க்க வேண்டியவை

    சப்பாத்தி, பரோட்டா இரும்பு சத்து மாத்திரைகள் காரம், புளிப்பு உணவுகள் அதிகமான அசைவ உணவுகள் பீட்சா, பர்கர் சீஸ் உள்ள பேஸ்டி உணவுகள் பசை போல இழுக்கின்ற உணவுகள் மைதா உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

    Posted in மருத்துவம்

    தாம்பத்திய சிக்கலை தீர்க்க இதை பண்ணுங்க

    தாம்பத்திய சிக்கலை தீர்க்க இதை பண்ணுங்க

    தாம்பத்திய உறவை மகிழ்ச்சியாக கொண்டாட புதுமண ஜோடிகளுக்கு பாலியல் மருத்துவர்கள் வழங்கும் விஞ்ஞானபூர்வமான ஆலோசனைகளை பார்க்கலாம்.

    இந்திய திருமணங்கள் புனிதமானவை. அதனால்தான் அவை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் முக்கியத்துவம் பெற்று

    திகழ்கின்றன. அது மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்திய கலாசார திருமண முறைகளால் கவரப்படுகிறார்கள். வெளிநாட்டு ஆணும், பெண்ணும் இந்திய திருமணமுறைகளை ஏற்று திருமணம்

    செய்துகொள்ளும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்திய திருமண முறைகளில் முதலிரவும் முக்கியத்துவம்

    பெறுகிறது. வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கும், எதிர்கால வாழ்க் கைக்கு திட்டமிடுவதற்கும், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்வதற்கும் அந்த இரவை

    பயன்படுத்திக்கொள்கிறார்கள். அன்று மனோரீதியாக நெருங்கி, உடல் ரீதியாக நிறைவடைகிறார்கள்.

    தாம்பத்திய உறவை மகிழ்ச்சியாக கொண்டாட புதுமண ஜோடிகளுக்கு பாலியல் மருத்துவர்கள் வழங்கும் விஞ்ஞானபூர்வமான ஆலோசனை!

    உடல்ரீதியான இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முதலில் புதுமணத் தம்பதிகள் மனோரீதியாக தயாராகவேண்டும். குறிப்பாக பெண்ணின் மனதில் பயமும், பதற்றமும், ஈடுபாடின்மையும்

    இருந்துகொண்டிருந்தால் உறவை ஆர்வமாக்கும் வழுவழுப்பு திரவம் சுரக்காது. அதனால் பாலுறவு வலி நிறைந்த அனுபவமாகிவிடும். அத்தகைய வலிக்கு சிகிச்சை தேவையில்லை. ஒருவரை ஒருவர்

    நன்றாகப் புரிந்து மனம்விட்டுப்பேசி, முன்விளையாட்டுகளிலும் ஈடுபட்டால் அவர்களாகவே இந்த பிரச்சினையை தீர்த்து, வலியின்றி தாம்பத்ய உறவை மேற்கொள்ளலாம்.

    ‘வஜைனஸ்மஸ்’ என்ற உறுப்பு இறுக்க பாதிப்பால் புதுப்பெண்கள் தாம்பத்ய உறவை சரிவர மேற்கொள்ள முடியாமல்

    அவதிப்படுவதுண்டு. அத்தகைய பாதிப்பிற்குள்ளான பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. ‘வஜைனஸ்மஸ்’ பாதிப்பு இருக்கும் பெண்கள் உறவுக்கு

    தயாராகும்போது அவர்களது உறுப்பை சுற்றியுள்ள தசைநார்கள் இறுகி சுருங்கி, உறுப்பை மூடும் அளவுக்கு முறுக்கிக்கொள்ளும். அப்போது தாம்பத்யம் செய்யமுடியாது. அதை மீறி கணவன்

    வலுகட்டாயமாக உறவு கொள்ள முயன்றால் அது பெண்ணுக்கு தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்.

    வஜைனஸ்மஸ் பாதிப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உடலுறவை பற்றிய பயம் இருந்தாலும், கடந்த காலத்தில் பாலியல் வன்புணர்வு கொடுமையை

    அனுபவித்திருந்தாலும், இந்த பாதிப்பு தோன்றும். உடல்ரீதியாக ஆராய்ந்தால், உறுப்பு பகுதியில் வளர்ச்சிக்குறைபாடு கொண்ட

    பெண்களும் இந்த பாதிப்பிற்கு உள்ளாகுவார்கள். அங்கிருக்கும் காயங்கள், தழும்புகள், கட்டிகள், படைகள் போன்ற வைகளும் வஜைனஸ்மஸ்க்கு காரணம்.

    கருப்பை நழுவி கீழ்நோக்கி வந்து துருத்திக்கொண்டிருக்கும் ‘பிரலேப்ஸ் யூட்ரெஸ்’ என்ற பாதிப்பும் உடலுறவை

    வேதனைக்குரியதாக்கிவிடும். இது தவிர பிறப்பு உறுப்பு அழற்சி, கருப்பைக்கழுத்து அழற்சி, எண்டோமெட்ரியத்தில் ஏற்படும் அழற்சி போன்றவைகளாலும் வஜைனஸ்மஸ் ஏற்படும்.

    பெண்களின் தாம்பத்ய ஈடுபாட்டிற்கு கிளர்ச்சி நிலை மிக முக்கியம். ஆனால் தற்போது நிலவிவரும் வேலையின்மை, பொருளாதார சிக்கல் போன்றவைகளால் ‘கிளர்ச்சியின்மை’க்கு

    உருவாகும் பெண்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. கணவனும்- மனைவியும் அந்தரங்கமாக தொட்டு

    உறவாடவேண்டும். அப்போதுதான் உடலும், மனமும் இன்பத்திற்கு தயாராகும். தயாரானால்தான் உடலில் இயல்பான மாற்றங்கள் உருவாகி கிளர்ச்சி தோன்றும்.

    அந்த தருணத்தில் கருப்பைக் கழுத்து மற்றும் உறுப்பு பகுதியில் இருக்கும் சுரப்பிகள் வேலை செய்யத் தொடங்கும். ஈரக்கசிவு தோன்றும். அது கிளர்ச்சியை மேன்மைப்படுத்தி தாம்பத்யத்தில்

    இணையவைக்கும். பொதுவாகவே ஆண்கள் விரைவாக கிளர்ச்சியடைந்துவிடுவார்கள். பெண்கள், ஆண்களைப்போல் விரைவாக கிளர்ச்சியடைவதில்லை. தனது மனைவியை

    கிளர்ச்சியடையச் செய்வதும், அவளை திருப்தியடையச் செய்வதும் ஆணின் கடமை. கிளர்ச்சியடையாத பெண்களுக்கு விஞ்ஞானபூர்வமான தீர்வு நவீன பாலியல் மருத்துவத்தில் உள்ளது.

    Posted in மருத்துவம்

    நோய்தொற்றுகளில் இருந்து தப்பித்த இதை கண்டிப்பா சாப்பிடுங்க

    நோய்தொற்றுகளில் இருந்து தப்பித்த இதை கண்டிப்பா சாப்பிடுங்க

    பருவநிலை மாற்றங்களுக்கு ஏதுவாக நாவிற்கு இதமளித்து நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் சூப் வகைகள் பருகலாம். இன்று காளான் கிரீம் சூப் செய்முறையை பார்க்கலாம்.

    நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் காளான் கிரீம் சூப்
    காளான் கிரீம் சூப்
    தேவையான பொருட்கள் :

    காளான் – 200 கிராம்

    பெ.வெங்காயம் – 1
    பூண்டு – 10 பல்


    பிரிஞ்சி இலை – சிறிதளவு
    மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்


    உப்பு, வெண்ணெய் – தேவைக்கு
    மைதா – 4 டீஸ்பூன்
    பால் – கால் லிட்டர்
    எண்ணெய் – சிறிதளவு

    செய்முறை:

    காளான், பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு வெண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் மைதா மாவை கொட்டி வறுக்கவும்.

    பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பாலை ஊற்றி கட்டி பிடிக்காமல் கிளறிவிட்டு கொதிக்க விடவும்.

    அது கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து கிரீம் பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.

    அது வதங்கியதும் பிரிஞ்சி இலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    பிறகு காளானை சேர்த்து கிளறவும்.

    அது வெந்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    கொதிக்க தொடங்கியதும் கிரீம், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும்.

    அடுத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ருசிக்கலாம்.

    Posted in மருத்துவம்

    உதட்டு வெடிப்பை குணமாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்

    உதட்டு வெடிப்பை குணமாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்

    தட்ப வெப்பச் சூழ்நிலை மாற்றத்தால் ஒரு சிலருக்கு உதடுகளில் வெடிப்புகள் ஏற்படும். இதற்கான சித்த மருத்துவம் சார்ந்த தீர்வுகளை இங்கு காண்போம்.

    தட்ப வெப்பச் சூழ்நிலை மாற்றத்தால் ஒரு சிலருக்கு உதடுகளில் வெடிப்புகள் ஏற்படும். இது அனைத்து வயதினருக்கும் ஏற்படுகின்ற

    பொதுவான பாதிப்புதான். இதற்கான சித்த மருத்துவம் சார்ந்த தீர்வுகளை இங்கு காண்போம்.

    • தினமும் காலை மாலை இருவேளை பசும்பாலின் பாலேட்டை உதடுகளின் மீது தடவ வேண்டும். மேலும் கரும்பின் இலைகளைச் சுட்டு சாம்பலாக்கி அதனுடன் பசுமாட்டின் வெண்ணையைக்
    • குழைத்து தடவ உதடு வெடிப்பு நீங்கும்.
    • நெல்லிக்காய்ச் சாற்றை அதன் சம அளவு தேனுடன் கலந்து
    • தடவிவர நல்ல பலன் தெரியும். கேரட் சாறு, கிளசரின்,
    • பசும்பாலாடை ஆகிய மூன்றையும் கலந்து தடவ வேண்டும். இதன் மூலம் உதடு வெடிப்பு குணமாகும்.
    • உதடுகளில் ஈரப்பதம் குறையாமலிருக்க அடிக்கடி நீரையும், பழச்சாறுகளையும் பருக வேண்டும் இது உதடு வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கும்.
    • காலை, மாலை வேளைகளில் ரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து உதட்டில் பூசிவர வேண்டும். புண்ணாகிப்போன உதடுவெடிப்புகள் குணமாக நல்லெண்ணெயையோ,
    • நெய்யையோ தடவ அப்புண்கள் விரைவில் குணமாகும்.
    • எலுமிச்சையின் சாற்றை உதட்டுப்புண்கள் ஆறிய பிறகு தடவிவர உதடுகள் பழைய நிறத்தையும், பளபளப்பையும் பெரும்.
    Posted in மருத்துவம்

    அறிகுறி இல்லாமலேயே தோன்றும் நோய்கள்

    அறிகுறி இல்லாமலேயே தோன்றும் நோய்கள்

    சில வியாதிகள் அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றுகின்றன. அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்.

    அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்களும்… ஏற்படுத்தும் பாதிப்புகளும்…
    அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்களும்
    சளி, இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை

    கொரோனா நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகளாக இருக்கின்றன. இந்த அறிகுறிகள் இல்லாமலேயே சிலர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதுபோலவே சில வியாதிகள் அறிகுறிகள்

    இல்லாமலேயே தோன்றுகின்றன. ஆரம்பக்கட்டத்தில் கண்டறிய முடியாமல் இறுதிகட்டத்திற்கு முந்தைய நிலையில்தான் நோயின்

    வீரியம் வெளிப்பட தொடங்கும். எந்தவியாதியாக இருந்தாலும் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்தால்தான் தீவிர சிகிச்சை

    அளித்து குணப்படுத்தமுடியும். இல்லாவிட்டால் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ

    பரிசோதனை மேற்கொண்டால்தான் நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும்

    நோய்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்.

    நீரிழிவு நோய்: ‘சைலெண்ட் கில்லர்’ எனப்படும் அமைதியான கொலையாளியாக நீரிழிவு நோய் கருதப்படுகிறது. ஏனெனில் நீரிழிவு நோய் ஒருவருக்கு இருப்பதை சுலபமாக கண்டறிவது

    கடினம். அதிலும் டைப்-2 நீரிழிவு பாதிப்பு என்றால் ஆரம்பகட்டத்தில் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீரிழிவு நோய் இருப்பதற்கான

    அறிகுறிகளை கண்டறியமுடியாமலே போய்விடும். இறுதிகட்டத்தில் அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், எரிச்சல் போன்ற

    அறிகுறிகள் தென்படும். சில சமயங்களில் அந்த அறிகுறிகளும் தெளிவற்றதாக அமைந்துவிடும்.

    கணைய புற்றுநோய்: புற்றுநோயின் கொடிய வடிவங்களில் ஒன்றாக கணைய புற்றுநோய் அமைந்திருக்கிறது. இறுதிகட்டத்தை நெருங்கும் வரை எந்த அறிகுறிகளும் தெரியாது. அதன் பிறகுதான்

    மஞ்சள் காமாலை, வயிற்றின் மேல்பகுதியில் வலி, எதிர்பாராதவிதமாக அதிக எடை இழப்பு போன்ற அறிகுறிகளை

    வெளிப்படுத்தும். அப்போதும் உடனே சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் கடும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.

    ஆஸ்டியோபோரோசிஸ்: எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தை உருவாக்கும். ஆனால் ஆரம்பக்கட்டத்தில் எந்த அறிகுறிகளும் தெரியாது. எலும்புகளில் லேசாக பாதிப்பை ஏற்படுத்தி

    படிப்படியாக எலும்புகள் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாகிவிடும். நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றமுடியாத நிலைக்கு ஆளாக நேரும்.

    மாரடைப்பு: சிலருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படும். இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்தம் செல்லமுடியாமல் தடைபடும்போது ‘சைலண்ட் ஹார்ட் அட்டாக்’ எனப்படும் மாரடைப்பு ஏற்படும்.

    மாரடைப்பு ஏற்படப்போகிறது என்பதை சம்பந்தப்பட்டவரால் உணரமுடியாது. எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.

    சாதாரண மார்பு வலி, மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் எப்போதாவது வெளிப்படக்கூடும்.

    சிறுநீரக நோய்கள்: ஆரம்பகால கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் யூகிக்க முடியாது. பெரும்பாலும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் சிறுநீரக நோய் பாதிப்புக்கும் ஆளாகுவார்கள்.

    ஆதலால் அவர்கள் ‘யூரின் மைக்ரோ அல்புமின்’ பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. அந்த பரிசோதனை முடிவுதான் நோய் பாதிப்பை கண்டறிய உதவும்.

    எச்.ஐ.வி.: ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. நோய் எதிர்ப்பு குறைபாடு தன்மையை உருவாக்கும் வைரஸ் இதற்கு மூலகாரணமாக இருக்கிறது. இந்த வைரஸால்

    பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு பிறகு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால்

    பெரும்பாலும் அவை பிற நோய்களுக்கான அறிகுறியாகவே அமைந்துவிடும். அதனால் எளிதில் கண்டறிவது கடினம்.

    Posted in மருத்துவம்

    பெண்களுக்கு மலட்டு தன்மையை உருவாக்கும் இந்த நோய்

    பெண்களுக்கு மலட்டு தன்மையை உருவாக்கும் இந்த நோய்

    சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.


    உடல் பருமன் என்ற சொல், நம் உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சத்து சேர்ந்திருக்கிறது என்பதை காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான

    உணவு பழக்கம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில் தைராய்டு குறைபாடு

    உள்ளவர்களின் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாகச் சேர்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானது போல் காட்டுகிறது.

    தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையை தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும்.

    சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு. அதே நேரத்தில்

    கொழுப்புச் சத்து காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும்.

    அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும் என்று மருத்துவர்கள்

    எச்சரிக்கின்றனர். அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும்

    தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.

    தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை

    சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும். இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நல குறைப்பாட்டால்

    மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

    Posted in மருத்துவம்

    எந்த முக கவசம் அணிவது பாதுகாப்பானது

    எந்த முக கவசம் அணிவது பாதுகாப்பானது

    இந்தியாவில் ஆரம்பத்தில் முக கவசம் பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டை பெறாதபோதும், இப்போது பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு பெற்று அணியத்தொடங்கி இருக்கிறார்கள்.

    கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வருகிற வரையில், தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முக

    கவசம், தனிமனித இடைவெளி, கைச்சுத்தம் ஆகிய மூன்றும்தான் பாதுகாப்பு கவசங்களாக பயன்படும் என உலக சுகாதார நிறுவனம் தொடங்கி அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்படுகிறது.

    இந்தியாவில் ஆரம்பத்தில் முக கவசம் பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டை பெறாதபோதும், இப்போது பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு பெற்று அணியத்தொடங்கி இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் 14 விதமான முக கவசங்களை அமெரிக்காவில் டர்ஹாம் நகரில் அமைந்துள்ள டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து இருக்கிறார்கள்.

    இந்த ஆய்வில் பங்கேற்பாளர் ஒருவருடைய மூச்சில் இருந்து நீர்த்துளிகள் சிதறடிக்கப்படுவதை ஒப்பிட்டு பார்த்தார்கள்.

    இதில் சாதாரணமாக சுகாதார ஊழியர்கள் அணிகிற வால்வுகள் இல்லாத என்-95 முக கவசங்கள்தான் மிகவும் பயனுள்ள முக கவசம்

    என்று அவர்கள் கண்டறிந்தனர். நெக் பிளஸ் வகை முக கவசம்தான் மிக குறைவான பயன் அளிக்கத்தக்கது. உண்மையில் இந்த வகை

    முக கவசம்தான் தொற்று அபாயத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வினை நடத்திய ஆராய்ச்சியாளர் மார்டிட்டின் பிஷ்ஷர் கூறுகையில், “எந்த முக கவசமும் அணியாமல் அளவிடப்பட்ட துகள்களின்அளவை விட நெக் பிளஸ் வகை முக கவசம்

    அணிகிறபோது அதில் உள்ள துகள்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தோம். நாங்கள் மக்கள் முக

    கவசங்கள் அணிவதை ஊக்குவிக்கிறோம். ஆனால் அவர்கள் வேலை செய்கிற முக கவசங்களை அணிய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்கிறார்.

    பண்டனாஸ் வகை முக கவசம் மோசமான முக கவசத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பின்னலாடை முக கவசம் மூன்றாவது மோசமான முக கவசம் என கண்டறிந்துள்ளனர்.

    அறுவை சிகிச்சையின்போது டாக்டர்கள் அணிகிற சர்ஜிக்கல் முக கவசம், ஆய்வில் நன்றாக வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது நல்ல முக கவசங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    பாலிபுரொபைலின் முக கவசம் மூன்றாவது சிறந்த முக கவசம்.

    கையால் செய்யப்பட்ட பருத்தி முக கவசமும் நன்றாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சாதாரண உரையாடல்களில் கணிசமான எண்ணிக்கையிலான

    நீர்த்துளிகளை அகற்றுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிற முக்கிய தகவல்கள்:-

    • மக்கள் பேசுகிறபோது சிறிய அளவில் நீர்த்துளிகள் வெளியேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இருமல்
    • ,
    • தும்மல் இன்றி பேசுவதின் மூலமும் தொற்று பரவலாம்.
    • கொரோனா தொற்றை விரட்டியடிக்க முக கவசம் அணிவது எளிய வழி.
    • பாதி நோய் தொற்று அறிகுறிகளை காட்டாத நபர்களிடம் இருந்து வந்தவை. ஆனால் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு தாங்கள்
    • பாதிக்கப்பட்டிருப்பது தெரியாது. அவர்கள் இருமும்போது, தும்மும்போது, ஏன் பேசும்போது கூட தொற்று பரவுகிறது.
    • எல்லோரும் முக கவசம் அணிந்தால், நீர்த்துளிகள் 99 சதவீதம் வரை வேறொருவரை அடைவதற்கு முன் தடுத்து நிறுத்த முடியும்.
      Posted in மருத்துவம்

      பொடுகு, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் பூண்டு

      பொடுகு, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் பூண்டு

      முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. மேலும் பொடுகு, முகப்பரு பிரச்சனைகளுக்கும் பூண்டு தீர்வு தருகிறது.

      முகத்தில் ஆங்காக்கே தென்படும் பருக்கள் மறைய பூண்டை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பின் அதில் தேன் மற்றும் கொஞ்சம் தயிர் சேர்த்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள். 15

      நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இப்படி செய்து வர முகப்பருக்களின் அளவு குறைந்து அப்படியே மறைவதைக் காணலாம். பூண்டை இடித்துக்கொள்ளுங்கள். பின் ஆலிவ்

      எண்ணெயை கடாயில் ஊற்றி காய்ச்சி அதில் இடித்த பூண்டுகளையும் சேர்த்து கொதிக்க வையுங்கள். அந்த

      எண்ணெய்யை வடிகட்டி தலையின் வேர்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை

      அலசுங்கள்.இப்படி தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் செய்து வாருங்கள் பலன் கிடைக்கும்.

      பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட தன்மைகள் காரணமாக, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. அவை,

      1. பூண்டில் ஜின்க், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற சில முக்கிய மூலப்பொருட்கள் இருப்பதால், முடி உதிர்வதை எதிர்த்து போராட உதவுகிறது.
      2. பூண்டு , நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், தலை முடி உதிர்விற்கு காரணமான கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகிறது
      3. பூண்டில் உள்ள செலெனியம் என்னும் கூறு, இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
      4. முடியின் வேர்க்கால்களை சுத்தம் செய்து, அடைப்பைப் போக்குகிறது, இதனால் முடியின் வலிமை அதிகரிக்கிறது.
      5. தலையில் உள்ள பொடுகைப் போக்கவும் பூண்டு சிறந்த தீர்வைத் தருகிறது.

      கூந்தல் ஆரோக்கியத்திற்கு, தேங்காய் எண்ணெய் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. பூண்டுடன் இணைந்து தேங்காய்

      எண்ணெய், முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது. இரண்டு பல் பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

      தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, அதில் பூண்டைச் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக மசாஜ்

      செய்து தடவவும். அரை மணி நேரம் இந்த எண்ணெய் உங்கள் தலையில் ஊறியவுடன், வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசவும்.

      பூண்டுடன் தேன் சேர்த்து முடி உதிர்வுக்கான சிகிச்சையில் பயன்படுத்தலாம். 8 பல் பூண்டை எடுத்து மசித்து, இரண்டு ஸ்பூன்

      அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றில் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் உச்சி முதல் நுனி வரை தடவவும்.

      பிறகு 20 நிமிடங்கள் ஊற விடவும். 20 நிமிடம் கழித்து, வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். ஒரு வாரத்தில் இரண்டு

      முறை இந்த தீர்வைப் பின்பற்றுவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

          Posted in மருத்துவம்

          உடலுறவு கொள்ளும்போது மாரடைப்பு ஏற்படும் – எச்சரிக்கை

          உடலுறவு கொள்ளும்போது மாரடைப்பு ஏற்படும் – எச்சரிக்கை

          உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

          ஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது.

          துல்லியமாக 4,557 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 மட்டுமே உடலுறவின் போதும், உடலுறவுக்கு பிந்தைய ஒரு மணி நேரத்திலும்

          ஏற்பட்டு இருக்கிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் ஆண்கள்.

          மாரடைப்புக்கும் உடலுறவுக்கும் சம்பந்தம் உள்ளது. உடலுறவு மாரடைப்பிற்கு முக்கிய காரணி என்று சொல்லும் முதல் ஆய்வு

          இதுதான் என்கிறார் சிடார்ஸ் சினாய் இதய கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த சுமீத் சக்.

          இந்த ஆய்வறிக்கை, அமெரிக்க இதய கழகம் ஒருங்கிணைத்த சந்திப்பில் சமர்பிக்கப்பட்டது.

          இதயம் முறையாக செயல்படாதபோது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயம் துடிப்பது உடனே நிற்கிறது. இதனால் சுயநினைவை

          இழக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் சுவாச இயக்கமும் நிற்கிறது. ‘கார்டியோபல்மனரி ரிஸாசிடேஷன் சிகிச்சை’ அளிக்காதபோது, அவர்கள் இறக்கவும் நேரிடுகிறது.

          இதய இயக்க கோளாறிலிருந்து (Heart attack) இது முற்றிலுமாக வேறுபடுகிறது. ஹார்ட் அட்டாக், இதயத்துக்குச் செல்லும் ரத்தம் நிற்பதால் ஏற்படுகிறது.

          உடலுறவால் ஹார்ட் அட்டாக் ஏற்படுவது முன்பே அறிந்த ஒன்று. ஆனால், மாரடைப்புக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்பு முன்பு அறியாத ஒன்று.

          மருத்துவர் சுமீத் மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள அவருடைய சகாக்களும், 2002 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில்

          மாரடைப்புக்கு உள்ளான போர்ட்லாண்ட் மற்றும் ஒரிகன் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்தனர்.

          இதில், உடலுறவினால் ஏற்படும் மாரடைப்புகள் 1 சதவீதத்துக்கும் குறைவானதாக இருந்து இருக்கிறது. அப்படி மாரடைப்புக்கு

          உள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். அதுவும் குறிப்பாக நடுத்தர வயதுகாரர்கள், ஆஃப்ரிக்கன்- அமெரிக்கன்கள் மற்றும் முன்பே இதய நோய் உள்ளவர்கள்.

          சுமீத்,”இந்த கண்டுப்பிடிப்புகள்,கார்டியோபல்மனரி ரிஸாசிடேஷன் சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு உணர்த்த பயன்படும்.” என்கிறார்.

          ஹார்ட் அட்டாக் அல்லது இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், குறைந்தது ஆறு வாரங்களுக்கு உடலுறவில்

          ஈடுப்படகூடாது என்று பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை வலியுறுத்துகிறது.

              Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

              ரத்தம் உறையாமை நோய் வருவதற்கு காரணம்

              ரத்தம் உறையாமை நோய் வருவதற்கு காரணம்

              ரத்தம் வெளியேறுவது நிற்காமல், தொடர்ந்து வெளியேறினால், ரத்தம் உறையாமை நோய். ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு

              அதுதான் ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருந்தால் உயிரிழப்புகூட ஏற்பட்டுவிடும்.

              ரத்தம் உறையாமை நோய் வருவதற்கு காரணம் என்ன?
              ரத்தம் உறையாமை நோய்


              கையில் சிறிய காயம் ஏற்படுகிறது. உடனே ரத்தம் வழிகிறது. சில நிமிடங்களில் ரத்தம் வெளியேறுவது தானாகவே நின்றுவிடுகிறது, அல்லவா?

              அப்படி ரத்தம் வெளியேறுவது நிற்காமல், தொடர்ந்து வெளியேறினால், அதுதான் ரத்தம் உறையாமை நோய்.

              ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருந்தால் உயிரிழப்புகூட ஏற்பட்டுவிடும்.

              இது மரபியல் கோளாறு காரணமாக ஏற்படும் நோய். உலகில் பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு இந்நோய் ஏற்படுவதாகப் புள்ளி

              விவரங்களும் கூறுகின்றன. குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய்

              ஏற்படலாம். எனவே, இதைப் பரம்பரை நோய் என்றும் கூறுகிறார்கள்.

              ரத்த உறவில் திருமணம் செய்வதன் மூலம், இந்நோய் அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

              தாயின் கருவில் உருவாகும் குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிக்கும் குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாடே

              இந்நோய் ஏற்படக் காரணம். இந்த நோய் உள்ளவர்கள் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். உடலில் எங்கும்

              காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காயம் காரணமாக ஏற்படும் ரத்தக்கசிவு சிக்கலை உண்டாக்கிவிடும். சிலருக்கு எந்தக்

              காரணமும் இல்லாமல்கூட ரத்தக் கசிவு ஏற்படலாம் என்கிறார்கள், நிபுணர்கள்.

              இந்த நோயை எப்படிக் கண்டுபிடிப்பது?

              பிறந்த குழந்தைக்குத் தொப்புள்கொடி விழுந்த பிறகு ரத்தம் நிற்காமல் வெளியேறுவது, பல் விழுந்த பிறகு அல்லது பல் எடுத்த பிறகு தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்படுவது, உடலில் எங்கேயாவது

              காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு நிற்காமல் இருப்பது, உடலில் நீல நிறத் தழும்புகள் தோன்றி மறைவது, கால் மூட்டுகள் மீண்டும் மீண்டும் வீங்கி வலிப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் ரத்தம்

              உறையாமை நோய் இருக்கலாம். இந்நோயை குணப்படுத்துவது மிகவும் கடினம். ரத்தம், பிளாஸ்மா செலுத்துவது மற்றும் உறை

              நிலை மருந்துகளைச் செலுத்துவது என முறையான சிகிச்சையின் மூலம் மட்டுமே இந்நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்பது, மருத்துவர்களின் அறிவுரை.

              Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

              பெண்களே காபி குடித்தால் முகப்பரு வரும் தெரியுமா?

              பெண்களே காபி குடித்தால் முகப்பரு வரும் தெரியுமா?

              முகப்பரு வருவதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. நமது உணவுப் பழக்க வழக்கம். காபி குடிக்கும் பழக்கமும்

              முகப்பருவிற்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.


              முகப்பரு அற்ற தெளிவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது. இன்றைய சுற்றுச்சூழல், வெப்பம் எனப் பல

              காரணிகளுடன் போராடி சருமத்தை காப்பாற்ற பல முயற்சிகளும் நாம் எடுக்கிறோம். முகப்பரு வருவதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. நமது உணவுப் பழக்க வழக்கம்.

              பால் பொருட்கள், காரசார உணவுகள், ப்ரெட், பொரித்த உணவுகள் போன்ற பலதரப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் முகப்பருவுக்கு காரணம். காஃபி கூட உங்கள் முகப்பருவுக்குக் காரணம் எனச்

              சொன்னால் ஆச்சர்யமாவீர்கள் தானே? ஆம். நீங்கள் சரியாகத்தான் வாசித்தீர்கள். “அதிகமாக காஃபி உட்கொள்ளும் பழக்கம்

              உள்ளவர்களுக்கு முகப்பரு வரும் வாய்ப்புள்ளது. பெரும்பாலும் ஹார்மோனின் சமநிலையற்ற தன்மைதான் முகப்பருவின்

              அடிப்படைக் காரணி. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், சர்க்கரை ஆகியவற்றை உணவில் தவிர்த்தல் வேண்டும். சுத்தமான

              பழங்கள், காய்கறிகளை உட்கொள்ளுதல் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

              தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். காஃபியில் உள்ள வேதிப் பொருட்கள் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை

              தூண்டிவிடுகிறது. அதுவே தேவையற்ற கலோரிகளை உடலில் சேரவும் வழிவகுத்து முகப்பருவுக்கு காரணமாகிவிடுகிறது.

              தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

              தோலின் ஆரோக்கியத்திற்கு நிறைய தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம் என நாம் அனைவரும் அறிவோம். உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் போனாலும் சரும பிரச்சனைகள்

              ஏற்படும். “காஃபி விரைவில் கழிவாகி சிறுநீர் வழியாக வெளியேறும். அதிக காஃபி குடிக்கும் போது நிறைய சிறுநீர் வெளியாகும் போது

              இயல்பாகவே நம் உடலில் உள்ள நீர்சத்து குறைந்து அமில அளவு அதிகமாகும். இப்படி உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் போவது கூட முகப்பருவுக்கு காரணமாக அமையும்.

              எனவே, காஃபி தானே என்று அலட்சியம் அதிலும் அளவோடு இருந்தால் தேவையற்ற முகப்பருக்கள் தானாகவே தடுக்கப்படும்.

              Posted in மருத்துவம்

              பெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்

              பெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்

              உடலுறவின் போது பெண்களுக்குக் கடுமையான வலி உண்டாகிறது எனில் அது சாதாரண விஷயம் எனக் கடந்துவிடாதீர்கள். அதற்குப் பின் பல காரணங்கள் இருக்கலாம்.

              பெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்


              பெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்
              உடலுறவின் போது பெண்களுக்குக் கடுமையான வலி உண்டாகிறது எனில் அது சாதாரண விஷயம் எனக்

              கடந்துவிடாதீர்கள். அதற்குப் பின் பல காரணங்கள் இருக்கலாம். அவை என்னென்ன என தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கும் அதுபோன்ற அறிகுறி இருந்தால் கவனம் செலுத்துதல் அவசியம்.

              கர்ப்பப்பை வாய் தொற்று : கர்ப்பப்பையின் வாய் பகுதி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலுறவின் போதோ அல்லது பின்பும் கடுமையான வலியை உண்டாக்கும்.

              பெண்ணுறுப்பு வறட்சி : உடலுறவின் போது மென்மையாக இருக்க பெண்ணுறுப்பின் வாய்ப் பகுதியில் திரவம் வெளியேறவில்லை எனில் வலி ஏற்படும்.

              முடி , காயம் : பிறப்புறுப்பில் முடியின் தொற்றால் பருக்கள் உண்டாகி உராய்வின் போது வலியை உண்டாக்கலாம். உட்புறத்தில் காயங்கள் இருந்தாலும் உராய்வினால் வலி ஏற்படலாம்.

              தவறான நிலை : உடலுறவு நிலைகளை படத்தில் பார்த்துவிட்டு அப்படியே முயற்சி செய்யாதீர்கள். புதிதாக அந்த நிலைகளை மேற்கொண்டாலும், தவறாக செய்தாலும் வலி உண்டாகும்.

              குழந்தை பெற்ற தாய் : சமீபத்தில் தான் குழந்தையை ஈன்றிருக்கிறீகள் என்றாலும் வலி உண்டாகும்

              ஆக்ரோஷமான உடலுறவு : ஆக்ரோஷமாக உடலுறவு மேற்கொண்டாலும் அடி வயிற்றில் , பிறப்புறுப்பில் வலி உண்டாகும்.

              பாலியல் தொற்று : பலருடன் உடலுறவு மேற்கொள்பவர் எனில் அதனால் தொற்று ஏற்பட்டிருந்தால் வலி உண்டாகலாம். ஒருவருடன் உடலுறவு வைத்துக்கொண்டாலும் சில நேரங்களில் தொற்று ஏற்படலாம்.

              கருத்தடை பயன்பாட்டில் சிக்கல் : ஆணுறையை சரியாக அணியவில்லை என்றாலும் பிறப்புறுப்பிற்குள் சென்று வலியை உண்டாக்கலாம்.

              விருப்பமின்மை : உடலுறவில் விருப்பமில்லை எனில் பெண்களின் பிறப்புறுப்பு ஆண்களுக்கு இணைந்து கொடுக்காது. பிடிப்புடன் இருக்கும். அந்த சமயத்தில் நுழைய முடியாமல் வற்புறுத்தும்போது வலி ஏற்படும்.

              பயம் , பதட்டம் : உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மை, பயம், பதட்டம் போன்றவை இருந்தாலும் அந்த உடலுறவை அசௌகரியமாக்கும். அந்த சமயத்தில் உடலுறவு மேற்கொண்டாலும் அது வலி கொண்டதாக இருக்கும்.

              Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

              மனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி

              மனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி

              நம் உடலில் நன்மை விளைவிக்கும் ஒரு உயிர் அணுவை மற்றொரு நல்ல உயிர் அணு அழிப்பதுதான் சைட்டோகைன் புயல் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

              மனிதர்களின் உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி?


              கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் ஒரு இடத்தை தொட்டால், அந்த இடத்தை மற்றொருவர் தொடும் போது அவருக்கு நோய்க்கிருமி பரவுகிறது. அப்படி உடலின் வெளிப்புறத்தில் பரவிய

              கொரோனா வைரஸ் கண், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றின் மூலம் தொண்டை குழாய் வழியாக உடலுக்குள் செல்கிறது.

              அந்த வைரஸ் மூக்கும், வாயும் சேரும் இடத்தில் சில நாட்கள் தங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் அறிகுறிதான்

              தொண்டை வலி. தொண்டை வலி வந்தவுடன் உரிய சிகிச்சை மூலம் வைரசை அழிக்க வேண்டும். அப்படி அழிக்கவில்லை என்றால் அது மூச்சுக்குழாய் வழியாக உடலுக்குள் சென்று விடும்.

              உடலுக்குள் சென்ற வைரஸ் எப்படி நம் உடலில் உள்ள ஒவ்வொரு நோய் எதிர்ப்பு உயிர் அணுக்களையும் (செல்) பல கோணங்களில்

              மனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி

              தாக்கி அழித்து முக்கிய உடல் உறுப்புகளை எப்படி செயல் இழக்கச் செய்து கொல்கிறது என்பது பற்றி ‘பிராண்டியர்ஸ் இன் பப்ளிக்

              ஹெல்த்’ என்ற அறிவியல் இதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்த இதழில் கூறியிருப்பதாவது:-

              மனிதர்களுக்கு நோய் ஏற்பட்டால் அதை எதிர்த்து போரிடுவதற்கு நம் உடலில் ஏராளமான நோய் எதிர்ப்பு உயிர் அணுக்கள் உள்ளன. ஆனால் அந்த உயிர் அணுக்களை கொரோனா வைரஸ்

              புதுமையான முறையில் அழிக்கிறது. அதற்கு ‘சைட்டோகைன் புயல்’ என்று பெயர்.

              நம் உடலில் நன்மை விளைவிக்கும் ஒரு உயிர் அணுவை மற்றொரு நல்ல உயிர் அணு அழிப்பதுதான் சைட்டோகைன் புயல் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

              உடலில் நோய்களை எதிர்த்து போராடும் அதிகப்படியான ‘லிம்போ சைட்ஸ்’ மற்றும் ‘நியூட்ரோபைல்ஸ்’ என்று அழைக்கப்படும் ரத்த வெள்ளை அணுக்களை ஒன்றோடொன்று தாக்கிக் கொள்ள

              கொரோனா வைரஸ் தூண்டுகிறது. இதனால் அவை அழிந்து போய் விடுகின்றன. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்

              ரத்த வெள்ளை அணுக்கள் இறந்த பின்னர் கொரோனா வைரஸ் நுரையீரலுக்குள் எளிதாக ஊடுருவி சேதத்தை ஏற்படுத்துகிறது.

              அடுத்து சைட்டோகைன் புயல் என்ற நிகழ்வு உடலில் அதிகப்படியான காய்ச்சலை உருவாக்கி ரத்த அணுக்களில் கசிவை ஏற்படுத்தி ரத்தத்தை உறையச் செய்கிறது. இதுதவிர குறைந்த ரத்த

              அழுத்தத்தை உண்டாக்கி ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி, ரத்தத்தில் அமிலத்தன்மையை உருவாக்குகிறது. இதனால் நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

              மேலும் கொரோனா வைரஸ் ரத்த வெள்ளை அணுக்களை தவறாக வழிநடத்தி ஆரோக்கியமான திசுக்களை தாக்கி வீக்கத்தை உருவாக்குகிறது. இதனால் நுரையீரல், இதயம், குடல், கல்லீரல்,

              மனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி

              சிறுநீரகம், பிறப்பு உறுப்புகள் செயல் இழந்து விடுகின்றன. இப்படி பல உடல் உறுப்புகளை செயல் இழக்கச் செய்து நுரையீரலின்

              செயலை கொரோனா வைரஸ் முடக்கி விடுகிறது. இதனால் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

              இது எதனால் ஏற்படுகிறது என்றால் கொரோனா வைரஸ் கொன்ற உயிர் அணுக்கள், புரதங்களின் கழிவுகள் ஆகியவை நுரையீரலில்

              தேங்கி விடுவதால் ஆக்சிஜனை உள்ளிழுக்கும் திறனை நுரையீரல் இழந்து விடுகிறது. எனவே தான் கொரோனா பாதிப்பினால்

              உயிரிழப்பவர்கள் பெரும்பாலானவர்கள் மூச்சுச் திணறி இறக்கிறார்கள்.

              கொரோனா வைரசை அழிக்க மருந்து இல்லாத காரணத்தினால் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் அதை எதிர்த்து போரிடுவதற்கு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. அதாவது கொரோனா வைரஸ்

              பாதிப்பை ஏற்படுத்தும் உடல் உறுப்புகளை அதி தீவிரமாக கண்காணித்து செயல்பட வைப்பதின் மூலமே இறப்பு விகிதத்தை

              குறைக்க முடியும். இது எப்படி சாத்தியமென்றால், கல்லீரலில் உள்ள ரத்தத்தை செயற்கை முறையில் எப்படி சுத்திகரிக்கிறோமோ

              அல்லது சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தை சுத்திகரிக்க டயாலிசிஸ் முறையை எப்படி பயன்படுத்துகிறோமோ

              அதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை செயற்கையாக செயல்பட வைத்து இறப்பை தடுக்க முடியும்.

              கொரோனா தாக்கத்தினால் நுரையீரல் செயலிழந்து விட்டால், அதற்கு மாற்றாக தொண்டை குழாய் வழியாக செயற்கை சுவாச

              எந்திரத்தை(வென்டிலேட்டர்) இணைக்காமல் செயற்கை காற்று குழாய் மூலமாக இளஞ்சூடான ஈரப்பதமிக்க ஆக்சிஜனை மூக்கு

              வழியாக செலுத்தினால் உயிர் பிழைக்க வைக்க முடியும். இதனால்தான், கொரோனா வைரஸ் உடல் உறுப்புகளை தாக்கி

              செயல் இழக்கும் அளவுக்கு அதை வளர விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

              கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காத்துக் கொள்ள வேண்டுமென்றால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்

              ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். இதன் மூலம் இதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் மோசமடைவதை தடுக்கலாம்.

                  Posted in மருத்துவம்

                  முதுகுவலி உணர்த்தும் பிற நோயின் அறிகுறிகள்

                  முதுகுவலி உணர்த்தும் பிற நோயின் அறிகுறிகள்

                  மனிதனின் உடல் உள் உறுப்புக்கள் பழுதடைந்தால், ஒழுங்காக இயங்கவில்லை என்றால் அது முதுகெலும்பில் வலியாக

                  உணர்த்துகின்றது. கழுத்து முதுகுவலி ஏற்பட்டால் இதயம், நுரையீரல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம்.

                  முதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்
                  முதுகுவலி
                  மனிதனுக்கு அழகு எது? முதுகெலும்புதான். யாராவது நம் வாழ்வில் அதிகம் உதவி செய்தால் இவர்தான் என் வாழ்க்கையின்

                  முதுகெலும்பாகத் திகழ்கிறார் என்று கூறுவது வழக்கம். மனிதன் ஒருவனே தனது முதுகெலும்பை தரையில் படுக்கவைத்து உறங்கும்

                  நிலையைப் பெற்றுள்ளான். மற்ற விலங்கினங்கள் எதுவுமே தனது முதுகெலும்பை தரையில் படுக்க வைத்து உறங்க முடியாது.

                  முதுகுத்தண்டின் நீளம் பதினாறரை அங்குலம். இது நரம்பு நாளங்களால் ஆனது. இதிலிருந்து 12 இணை நரம்புகள் மூளைக்குச்

                  செல்கிறது. மேலும் முப்பத்தாறு இணை நரம்புகள் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. அதனால் முதுகுத்தண்டு மனிதனின் இரண்டாவது மூளை என அழைக்கப்படுகின்றது.

                  மூளைக்கும், உடலின் உறுப்புகளுக்கும் இணைப்பு நிலையமாக திகழ்வது இந்த முதுகுத் தண்டு தான். மேலும் இதயம், நுரையீரல்,

                  இரைப்பை, குடல் முதலிய உறுப்புகளின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதும் இந்த முதுகுத்தண்டு தான்.

                  மனித உடலில் நடுப்பகுதியான முதுகில் 33 முதுகெலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக நேர் வரிசையில் அடுக்கப்பட்டு அற்புதமாக இந்த உடல் கட்டப்பட்டுள்ளது. இந்த முதுகெலும்பு வழியாகத் தான்

                  முதுகுத் தண்டுவடம் உள்ளே செல்கின்றது. இந்த முதுகெலும்பில் 24 எலும்புகள் தனித் தனியானவை. அசையும் தன்மை வாய்ந்தது.

                  மற்ற ஒன்பது எலும்புகள் இணைந்து இரண்டு அசையா எலும்புகளாக பெரியவர்களாக வளரும் பொழுது இடுப்புக்கு அடியில் மாறிவிடும்.

                  முதுகுவலி உணர்த்துவது என்ன?

                  மனிதனின் உடல் உள் உறுப்புக்கள் பழுதடைந்தால், ஒழுங்காக இயங்கவில்லை என்றால் அது முதுகெலும்பில் வலியாக

                  உணர்த்துகின்றது. அடிமுதுகு வலி ஏற்பட்டால் நமது உடலில் கோணாடு சுரப்பி ஒழுங்காக இயங்கவில்லை. அதனால் சிறுநீரகம் சம்பந்தமான வியாதி வருவதற்கு ஒரு அறிகுறிதான் அடிமுதுகு வலி.

                  இதேபோல் நடுமுதுகு வலி ஏற்பட்டால் சிறுகுடல், பெருங்குடல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம். கழுத்து முதுகுவலி

                  ஏற்பட்டால் இதயம், நுரையீரல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம்.

                  முதுகுவலி வரக் காரணங்கள்

                  உடல் பயிற்சி செய்யாமல், நன்றாக அதிகம் சாப்பிட்டு தொப்பை போடுபவர்களுக்கு அடிமுதுகுவலி வரும். சிறுநீரகப் பிரச்சினை இருக்கும். இவர்களுக்கு நடுமுதுகுவலியும் வரும். சிறுகுடல்,

                  பெருங்குடல் பிரச்சனை இருக்கும். அதிக நேரம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு அடி முதுகுவலி வரும்.


                  தொடர்ந்து அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற் பயிற்சி செய்யாதிருந்தால் முதுகுவலி (கழுத்து முதுகுவலி) வரும்.


                  ஒரே இடத்தில் பல மணி நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி ஏற்படும்.

                  அடிக்கடி சளி பிடித்தல், மூக்கடைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு கழுத்து, முதுகுவலி ஏற்படும். நுரையீரல் பழுதடைவதால், கழுத்து முதுகுவலி வருகின்றது.


                  அதிகம் கவலைப்படுபவர்களுக்கு இதயம் பாதிப்பால் கழுத்து முதுகுவலி ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகி

                  அதனால் அடிக்கடி காய்ச்சல் வருபவர்களுக்கு முதுகு முழுவதும் வலி இருக்கும்.

                  காய்ச்சல் எல்லாம் நோயல்ல கழிவுகள் வெளியேற்றம்தான். ஏதாவது ஒரு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிமுதுகுவலி, கழுத்து முதுகு வலி ஏற்படும்.


                  எதிர்பாராத விபத்தினாலும், முதுகில் பலம் வாய்ந்த எடையுள்ள பொருட்கள் விழுந்தாலும் அடி முதுகில் வலி ஏற்படுகின்றது. இனி

                  கவலையை விடுங்கள். முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அற்புத யோகக்கலையினை பயிலப் போகின்றோம்.

                  மனித உடல்

                  நம் உடல் எப்பொழுதும் தன்னைக்காப்பாற்றிக் கொள்ள முயன்று கொண்டேயிருக்கும். அதற்கு யாரும் சொல்லித்தர தேவையில்லை. இந்த உடல் தன்னை பாதுகாக்க தானாக ஒவ்வாத உணவை

                  வெளித்தள்ளுகின்றது. எங்காவது பறவை, நாய், பூனை, தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி மருத்துவரிடம் சென்றதைப் பார்த்துள்ளீர்களா? இயற்கையோடு இயற்கையாக வளரும்

                  பிராணிகளுக்கு நோய் வராது. வந்தாலும் தானே சரி செய்துவிடும். ஒவ்வொரு விலங்கிற்கும், மனித உடலுக்கும் அந்த பண்பு உண்டு.

                  ஏன் இதை இங்கு தெரிவிக்கிறேன் என்றால் எனக்கு முதுகுவலி வந்துவிட்டது என்று யாரும் வருந்த வேண்டாம். பயப்பட வேண்டாம். அவசரப்பட்டு ஒரு மருத்துவர் கூறினார் என்று உடன் அறுவை

                  சிகிச்சைக்கு சென்றுவிடாதீர்கள். முதுகெலும்பில் கத்தியே வைக்கக்கூடாது. அதற்கு நம் புத்தியைக் கூர்மையாக்கி இனிவரும் யோகக்கலையினை பயில்வோம்.

                  தன் உடலே தன்னைப் பாதுகாக்க முயலும் பொழுது, நீங்கள் இயற்கையான மருந்தில்லா மருத்துவமான யோக்கலைகளை செய்தால் உடல் மிக நன்றாக ஒத்துழைக்கும். விரைவில் பலன்

                  கிடைக்கும். இன்றைய அவசரமான உலகில் முதுகுவலி உள்ளவர்களும், இல்லாதவர்களும் கீழ்கண்ட யோகப் பயிற்சியை தினமும் காலை மாலை பத்து நிமிடங்கள் செய்யுங்கள். வலி

                  இருந்தால் படிப்படியாகக் குறையும். முதுகுவலி இல்லாதவர்களுக்கு நிச்சயமாக பிற்காலத்தில் வராமல் தடுக்கும்.

                      ஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்
                      Posted in மருத்துவம்

                      ஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்

                      ஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்

                      ஆணுறை இவ்வளவு பயன்மிக்கதாய் இருந்தும், அதை சரியான இடத்தில் பத்திரமாக வைத்து பாதுகாக்காவிட்டால் பயனிழந்து

                      விடும். பலருக்கு ஆணுறைக்கு காலாவதி தேதி உண்டு என்ற விஷயம் தெரியாமல் இருக்கக்கூடும்.

                      காலாவதியான ஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்
                      காலாவதியான ஆணுறை


                      பாலியல் மூலம் பரவும் நோய்களைத் தவிர்ப்பதற்கும் கருத்தடை செய்வதற்கும் ஆணுறைகள் நிறையப் பயன்படுத்தப்படுகின்றன. ஆணுறை உதவியுடன், நீங்கள் கவலைப்படாமல் உடலுறவை

                      அனுபவிக்க முடியும். சிறந்த விஷயம் என்னவென்றால், ஆணுறைகள் சந்தையில் மலிவான விலையில் கிடைக்கின்றன, ஆணுறைகள் அரசாங்கத்திடமிருந்து இலவசமாக

                      வழங்கப்படுகின்றன. ஆணுறைகள் பல நன்மைகளைக் கொண்டுள்ளன, மேலும் அவற்றைப் பயன்படுத்துவது மிகவும்

                      எளிதானவை. பெரும்பாலான தம்பதிகள் தங்கள் வீட்டில் நிறைய ஆணுறைகளை வாங்குவதற்கான காரணம் இது தான். ஆனால்,

                      ஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்

                      ஆணுறைகளும் காலாவதியாகும் என்ற உண்மையை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

                      காண்டம்’ என்று அழைக்கப்படும் ஆணுறை, அத்தியாவசியான ஒரு பயன்பாட்டு பொருளாகும். வேண்டாத கர்ப்பத்தை தடுப்பதுடன், எய்ட்ஸ் போன்ற தீவிர நோய்கள் மற்றும் பால்வினை நோய்கள்

                      தொற்றிவிடாமல் காத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.. ஆணின் விந்து பெண்ணுறுப்புக்குள் சென்றுவிடாமல் ஆணுறையின் நுனியிலேயே தங்கி விடும். இவை பல்வேறு வடிவங்கள் மற்றும்

                      அளவுகளில் எளிதாக கிடைக்கக்கூடியவை. சில ஆணுறைகள் விந்து வெளியாகும் நேரத்தை நீட்டித்து அதிக தாம்பத்ய இன்பம் பெறவும் உதவக்கூடியவை என்றும் கூறப்படுகிறது. பயமில்லாமல் முழு

                      இன்பத்தை சுகிப்பதற்கு ஆணுறை உதவுகிறது. ஆணுறை இவ்வளவு பயன்மிக்கதாய் இருந்தும், அதை சரியான இடத்தில் பத்திரமாக

                      வைத்து பாதுகாக்காவிட்டால் பயனிழந்து விடும். பலருக்கு ஆணுறைக்கு காலாவதி தேதி உண்டு என்ற விஷயம் தெரியாமல் இருக்கக்கூடும்.

                      ஆணுறை பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்:.

                      ஆணுறையை பயன்படுத்த எடுக்கும்போது நெகிழும் தன்மை குறைவாக இருப்பதாக அல்லது வறண்டு இருப்பதாக அல்லது கையில் ஒட்டிக் கொள்வதுபோல் உணர்ந்தால் பயன்படுத்த

                      வேண்டாம். புதிய ஒன்றை வாங்குவது நன்று. நிறம் வெளிறி அல்லது பூஞ்சை பிடித்தது போன்ற மணம் இருந்தாலும் அந்த ஆணுறையை தவிர்க்கவும்..

                      தேவைப்படும்போது பயன்படுத்துவதற்காக ஆணுறையை வாங்கி பாதுகாப்பான இடத்தில் வைப்பது முக்கியம். சரியான இடத்தில்

                      வைக்காவிட்டால் ஆணுறையில் கீறல் விழலாம் அல்லது வறண்டு போகலாம். குளிரான ஆனால் ஈரமில்லாத இடங்களில் ஆணுறையை பாதுகாப்பாக வைக்க வேண்டும்..

                      ஆணுறை, உயவு பொருள் மிகுந்ததாக, வழுக்கும் தன்மை கொண்டதாக இருந்தால்தான் உறவு இன்பமாக அமையும். பாக்கெட்டை பிரிப்பதற்கு கத்தரிக்கோலை

                      பயன்படுத்தவேண்டாம். தவறிப்போய் அது ஆணுறையை கிழித்து விடக்கூடும். பிரிக்கும்போது விரல் நகங்கள் அல்லது கார் மற்றும் மோட்டார் சைக்கிள் இவற்றின் சாவி ஆணுறையை சேதப்படுத்திவிடாமல் கவனமாக இருக்கவேண்டும்..

                      ஆணுறையை பயன்படுத்தும் முன்னர் காலாவதி தேதியை (எக்ஸ்பயரேஷன் டேட்) கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். காலாவதி தேதி நெருங்கும்போது தங்கள் மீட்சித்தன்மையை அவை

                      ஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்

                      இழந்து விடும். பார்ப்பதற்கு நன்றாக இருப்பதாக தோன்றினாலும், பயன்படுத்தும்போது கிழிந்துபோய் இக்கட்டான நிலையை

                      ஏற்படுத்தி விடும். ஆகவே, வைத்திருக்கும் ஆணுறையின் காலாவதி தேதி நெருங்கினால் அதை தவிர்த்துவிடுவது நல்லது. ஆணுறையை கவனிப்பதுபோன்று, தாம்பத்ய உறவின்போது என்ன உயவுப்

                      பொருள் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம். எண்ணெய் பசை மிக்க உயவுப் பொருளை பயன்படுத்தவேண்டாம். அது

                      ஆணுறையை சேதப்படுத்திவிட வாய்ப்புண்டு. ஆணுறை போன்ற முக்கியமான விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது பிற்கால கவலைகளை தடுக்கும்.