Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் அதிகரிப்பு
சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் அதிகரிப்பு
இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகுவதாக அவர் தெரிவித்தார்.
இன்று (29) அனுசரிக்கப்படும் உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தொழு நோய் ஏற்பட்ட ஒருவரின் உடலில் நீண்ட காலமான வௌ்ளை அடையாளம் மட்டும் காணப்படுவதால் அதனை
அவர்கள் நோயாக கருதி செயற்படுவதில்லை என வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.
நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நானுஓயா தோட்டத்திற்கு அண்மித்த பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சடலத்தின் அருகில் பணப்பை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்குள் தொலைபேசிகள் கடத்தல்
இலங்கைக்குள் தொலைபேசிகள் கடத்தல்
இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தொலைபேசிகள் கடத்தல் இடம்பெற்று வருவதாக கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு வரி வருமானத்தை இழக்கச் செய்யும் வகையில் பொதிகள் ஊடாக இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்படுவதாக கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் பிரியந்த ஜயசிங்க குறிப்பிட்டார்.
“கைப்பேசிகள் இறக்குமதியின் போது, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் பொதிகளின் ஊடாக கைப்பேசிகள் கொண்டு வரப்படுவதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.
இலங்கைக்குள் தொலைபேசிகள் கடத்தல்
இதன் ஊடாக பாரியளவில் வரி வருமானம் இழக்கப்படும் நிலையில், 2021-2022 ஆண்டுகளில் மட்டும் சுமார் 100 மில்லியன் டொலர்கள் உண்டியல் முறையில் வௌியேறியுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட வங்கி முறையின் கீழ் எந்த பரிவர்த்தனையும் இடம்பெறுவதில்லை.
எங்களின் தோராயமான கணக்கீடுகளின்படி, அரசாங்கத்திற்கு சுமார் மூன்றரை பில்லியன் ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட 20 பேர் கொண்ட குழுவே இவ்வாறு தொலைபேசிகளை இலங்கைக்கு கொண்டு வருகின்றது. இந்த கைப்பேசிகள் எதுவும் TRC ஆல் அங்கீகரிக்கப்படவில்லை.
இது குறித்து அரசிடம் எந்த தகவலும் இல்லை.
எனவே, குறித்த கைப்பேசிகளை இவ்வாறு கொண்டு வருவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.
காட்டுக்கு குளிக்க செல்லும் பெண்களை எட்டி பார்க்கும் காவலிகள்
காட்டுக்கு குளிக்க செல்லும் பெண்களை எட்டி பார்க்கும் காவலிகள்
மட்டக்களப்பு 40 தாவது கிராமம் 16 குடிகள் நீர் வசதி இன்றி
தவிக்கும் மக்கள் .
இந்த கிராமத்திற்கு வீதி ,கிண்று ,கழிவறை இல்லாது பெரும்
அவளை நிலைக்கு மக்கள் தள்ள பட்டுள்ளனர் .
காடுகள் தாண்டி குளிக்க செல்லும் பொழுது ,
காட்டுக்குள் இருந்து குளிப்பதை பார்ப்பதாக ,
பெண்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர் .
அரசியல்வாதிகள் ஓட்டுக்கு மட்டும் தேடி வருகின்றனர் ,
உதவிகள் என எவரும் இந்த கிராமத்திற்கு வழங்குவதில்லை
என்கின்றனர் இந்த கிராம மக்கள் .
மேற்படி காணொளியானது ,
சமுக வலைத்தளங்களில் தபோது வைரலாகிய வண்ணம் உள்ளது.
அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
புதிய மின் கட்டண திருத்தத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கினால், அன்றைய தினம் முதல் இலங்கை மின்சார சபை தொடர்ந்து மின்சாரத்தை வழங்கும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
“ஜனவரி முதலாம் திகதி முதல் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான திட்டத்தை நாம் சமர்ப்பித்திருந்தோம். பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை. இன்றும் கூறுகின்றோம்.
இன்று அல்லது நாளை அனுமதி வழங்கப்பட்டால்,
மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்கும் திட்டத்தை செயற்படுத்த எமக்கு முடியும்.
பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு
பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது அரச சேவையில் இருக்கும் பட்டதாரிகளே இதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும், அது தொடர்பான விண்ணப்பங்களை applications.doenets.lk/exams
என்ற இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 3 ஆம் கூட்டத்தொடர் இன்று (27) நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி பாராளுமன்றின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை அச்சிடுவதற்காக
அரசாங்க அச்சகத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் செய்தியை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க பிரதிநிதி இலங்கைக்கு வருகிறார்
அமெரிக்க பிரதிநிதி இலங்கைக்கு வருகிறார்
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இன்று முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
துணைச் செயலாளர் நூலண்ட், அமெரிக்க கூட்டுறவின் பரந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நேபாளத்தின் புதிய அரசாங்கத்துடன் செயற்பாடுகளில் ஈடுபடுவார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள விக்டோரியா நூலண்ட், அமெரிக்க – இலங்கை நட்புறவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை
மேம்படுத்தவும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை உறுதி செய்வார் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் அதன் ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (28), நாளை (29) மற்றும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் சுதந்திர தினம் வரையான காலப்பகுதியில், அதிகாலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை இந்த போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடல் மத்திய வீதி – காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து என். எஸ். ஏ. சுற்றுவட்டம் வரை மற்றும் சைத்திய வீதியின் கொள்ளுப்பிட்டி
சந்தியிலிருந்து காலி முகத்திடல் நோக்கிய வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலைய வீதியின் போக்குவரத்து குறித்த காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்படும்.
இதன் காரணமாக குறித்த திகதிகளில் ஒத்திகை மற்றும்
சுதந்திர தின நிகழ்வுகளின் போது மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மைத்திரிபால சிறிசேனவிற்கு எச்சரிக்கை
மைத்திரிபால சிறிசேனவிற்கு எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று (27) கோட்டை நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளார்.
திறந்த நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்ட மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் ஆஜராகாததால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படும் என்ற புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியிலும்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தாக்குதல்களை தடுக்க தவறியதை சவாலுக்கு உட்படுத்தி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பின்னர் மார்ச் 17 ஆம் திகதி மீண்டும் விசாரணை நடத்த நீதவான் உத்தரவிட்டார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில்
ஒரு காலை இழந்தவர் மற்றும் வணக்கத்திற்குரிய சிறில் காமினி ஆகியோரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்
உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்
உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நாசி (மூக்கு) வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த மருந்துக்கு ‘இன்கோவேக்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்ததை தொடர்ந்து, இந்திய குடியரசு தினமான நேற்று (26) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்த தடுப்பு மருந்தை அறிமுகம் செய்தனர்.
இந்த மருந்து இந்திய நாணயத்தில் , அரசுக்கு ரூ.325 என்ற விலையிலும்,
தனியார் வைத்தியசாலைகளுக்கு ரூ.800 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் விழா
தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் விழா
கல்வி அமைச்சினால் நடத்தப்பட அழகிய கற்கைப்பிரிவு போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற அட்டாளைசேனை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலம் (தேசிய பாடசாலை) மாணவர்களை கௌரவிக்கும் விழா அன்மையில் இடம்பெற்றது.
ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் என்.சம்சுதீன் தலைமையில் அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக அவரோன் சேரிட்டி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்
சட்டத்தரணி நஷாட் சம்சுதீன் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்து சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார்.
இவ்விழாவுக்கு அட்டாளைசேனை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலம்
(தேசிய பாடசாலை) அதிபர் ஏ.சி.எம்.ஹரீஸ், பிரதி அதிபர், ஆசிரிய ஆலோசகர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மிருசுவில் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
மிருசுவில் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
கொடிகாமம் – மிருசுவில் வடக்கு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் சாவகச்சேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் தனது விவசாய நிலத்திற்குச் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து அவர் வைத்திருந்த துப்பாக்கி வெடித்துச் சுடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்
பரவிய தீ தாய் குழந்தைகள் பலி
பரவிய தீ தாய் குழந்தைகள் பலி
அநுராதபுரம் எலயாபத்துவ பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன், குழந்தைகளின் தந்தை தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மில்லியன் கணக்கான பயனாளிகளின் தனிப்பட்ட தரவுகள் களவாடப்படும் நிலை
மில்லியன் கணக்கான பயனாளிகளின் தனிப்பட்ட தரவுகள் களவாடப்படும் நிலை
Apple நிறுவனத்தின் மில்லியன் கணக்கான பயனாளிகளின் தனிப்பட்ட தரவுகள் களவாடப்படும் நிலை இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Apple போன்ற தயாரிப்புக்களுக்கு இந்த விடயம் பொருத்தமானது என அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளத.
இதில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டுமாயின், சம்பந்தப்பட்ட எப்பல் தயாரிப்புக்கு உரிய மென்பொருளை இற்றைபடு Update
த்திக்கொள்ள வேண்டும் என்று நிறுவனம் Apple தயாரிப்புக்களை உபயோகிப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த ஜனாதிபதி
டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த ஜனாதிபதி
நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம்
செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் இலங்கையில் நடத்தப்படவுள்ள “புதிய டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி” தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று (25) பிற்பகல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே ஜனாதிபதி மேற்படி தெரிவித்தார்.
இந்த நாட்டில் உள்ள தொழில்களை புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்த டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாற்றுவதனை எவ்வாறு ஊக்குவிப்பது என்பதனை அடையாளங்காண்பதன் மூலம், தற்போதைய நெருக்கடியை
வெற்றிகொள்ளவும் , உற்பத்தி மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விடயங்களை கண்டறிவதே இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து ஒரு ஏற்றுமதி மையமாக இலங்கையை மாற்றுதல், சேவை மற்றும் ஏற்றுமதி துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் நிலையை ஏற்படுத்துதல்,உள்நாட்டுக்
கைத்தொழிலுக்காக சிறந்த சர்வதேச நடைமுறைகளைக் கொண்டு வருதல் மற்றும் முன்னணி தொழில்துறையினருடன் வலையமைப்பை ஏற்படுத்துதல் என்பன இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த ஜனாதிபதி
சைபர் பௌதீக கட்டமைப்பு (Cyber-Physical Systems), இணையத் தகவல் ( (Internet of Things), இணைய சேவைகள் (105), ரோபோ தொழில்நுட்பம் ((Robotics), பாரிய தரவு (Big Data), கிளவுட் கணனி மற்றும் உற்பத்தி (Cloud Computing &
Manufacturing), மேம்படுத்தப்பட்ட யதார்த்தம்(augmented reality) மேம்படுத்தப்பட் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற தொழில் நுட்பங்கள்
தொடர்பில் கவனம் செலுத்தி இந்த புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் தொழில்துறை துறையில் நவீன தொழில்நுட்ப கருவிகள் என்பன இந்தக் கண்காட்சி ஊடாக அறிமுகம் செய்யப்படவுள்ளன.
பல்வேறு துறைகளினூடாக டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தியை அடைவதன் ஊடாக நாடளாவிய ரீதியில் உள்ள சமூகப்படித்தரங்களைச் சேர்ந்த இனக் குழுக்களுக்கு பொருளாதார நன்மைகளை வழங்கி, அதன் ஊடாக சமூகத்தை வலுப்படுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கண்காட்சியின் ஏற்பாடுகள் யாவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தலைமையில் நிதி, வெளிவிவகாரம், கைத்தொழில்,
கல்வி, போக்குவரத்து, வர்த்தகம், விவசாயம் உள்ளிட்ட 13 அமைச்சுக்களின் பிரதிநிதிகள் அடங்கிய வழிநடத்தல் குழுவினால் முன்னெடுக்கப்படும்.
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் உள்ளிட்ட தொடர்புள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை
முதலீட்டுச் சபை, வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல்தொழில்நுட்ப முகவர் நிறுவனம் மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
பணவீக்கம் பெருமளவில் குறைய கூடியதாக சாத்தியம்
பணவீக்கம் பெருமளவில் குறைய கூடியதாக சாத்தியம்
தொடர்சசியாக பணவீக்கம் வீழச்சி அடைவதற்கு 3 விடயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய வங்கியின் பொருளாதார பகுப்பாய்வுப் பிரிவின் பிரதி பணிப்பாளர் கலாநிதி எல்.ஆர்.சி பத்பேரிய தெரிவித்தார்.
மொத்த கோரிக்கை குறைந்தமை இந்த விடயங்களில் முக்கியமானதாகும். இந்த வருடத்தில் பணவீக்கம் பெருமளவில் குறைய கூடியதாக சாத்தியம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடனுக்கான வட்டி வீதங்களும் குறைவடைய கூடியதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வட்டி வீதம் அதிகரிப்பின் காரணமாக வர்த்தக நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
பணவீக்கம் பெருமளவில் குறைய கூடியதாக சாத்தியம்
இவர்கள் மத்தியில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைறைச்சேர்ந்தவர்களின் வட்டி வீதங்களை குறைக்க முடியாதா? என்று
ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு மத்திய வங்கி ஆளுநர் பதிலளிக்கையில், வட்டி வீதங்களை குறைக்க வேண்டுமாயின் பண வீக்கத்தை குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கொள்கை ரீதியிலான வட்டி வீதத்தில் எந்த வித மாற்றமும் இன்றி முன்னெடுப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக நிலையான வைப்பீட்டுக்கு 14.5 வீதமும், நிலையான கடன் வசதிக்கு 15.5 வீத வட்டி முன்னெடுக்கப்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இலங்கையின் பணவீக்கம் 2022 ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து
ரில் 65 சதவீதத்திலிருந்து 2022 டிசம்பரில் 59.2 சதவீதமாக மேலும் குறைந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏன் சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற வேண்டும்
ஏன் சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற வேண்டும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துக்கொள்ளவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எமது பிரச்சினைகள் பற்றியும் பேசப்படாவிட்டால் எதற்காக நாங்கள் பார்வையாளர்களாக கலந்துக்கொள்ளவேண்டும்?” என்ற கேள்வியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இது தொடர்பான நடத்தை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்,
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உங்கள் அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும், எமது மக்களின் அரசியல்
அபிலாஷைகள் தொடர்பில் பேசுங்கள்” என நாம் திரும்ப, திரும்ப ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் கோரினோம். “எமது பிரச்சினைகள் பற்றி பேச உங்கள் தலைமையில் விசேட அதிகாரம் கொண்ட குழுவை நியமியுங்கள்” எனவும் கோரியுள்ளோம்.
ஏன் சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற வேண்டும்
ஆனால், பகிரங்க மேடைகளில் இருந்து கூறப்பட்ட சில கருத்துகளை தவிர, இது தொடர்பில் இதுவரை ஜனாதிபதி விக்கிரமசிங்க அதிகாரபூர்வமாக எதுவும் செய்யவில்லை. ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல்
தொடர்புகளில் வடகிழக்கு கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுகளை நாம் முழு மனதுடன் வரவேற்கிறோம். ஆனால், மலையக தமிழரின் அரசியல் அபிலாஷைகள் இன்று “தோட்ட வரம்புகளுக்கு” வெளியே வளர்ந்து விட்டன என்பதை அனைத்து
தரப்பினரும் அறிய வேண்டும். தேசிய இனப்பிரச்சினை என்பது இன்று வடக்கு கிழக்கை மட்டும் மையம் கொண்டதல்ல, அது தேசியமயமானது என்பதை அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஒரு எதிரணி கட்சியாக இருந்தாலும்கூட, “தேசிய இன பிரச்சினை தொடர்பில் பேச்சுகளை நடத்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இருக்கிறதா” என நாம் கேள்வி எழுப்பவில்லை. இந்நாட்டின் பிரதான
பிரச்சினை தேசிய இன பிரச்சினை ஆகும். இந்நாட்டின் எந்தவொரு அரசு தலைவருக்கும் இதற்காக விசேட மக்களாணை அவசியமில்லை என்பது எமது நிலைப்பாடு.
இந்த கருத்தை நாம் நமது வடகிழக்கு நட்பு கட்சிகளுடனும் பரிமாற்றி கொண்டுள்ளோம்.
ஆகவே, இன்று ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் இது தொடர்பான நடத்தையில் நாம் அதிருப்தியடைந்துள்ளோம்.
4 பேருடன் மீன்பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து விபத்து
4 பேருடன் மீன்பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து விபத்து
தியவன்னா ஓயாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நேற்று (25) இரவு நான்கு பேர் படகில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் படகு கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், அவர்களில் மூவர் உயிர் பிழைத்துள்ளனர்.
காணாமல் போனவரை தேடும் பணியை கடற்படை சுழியோடிகள் பிரிவு ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணாவின் துணையுடன் போதை கொடுத்து சிறுமி துஸ்பிரயோகம்
அண்ணாவின் துணையுடன் போதை கொடுத்து சிறுமி துஸ்பிரயோகம்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 வயதுடைய சிறுமிக்கு தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து,
இளைஞர்களால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த நிலையில் சிறுமி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநலம் குன்றிய குறித்தம சிறுமி அண்ணனின் நண்பர்களால் போதைப் பொருள் கொடுக்கப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹெரோயினுக்கு அடிமையான சிறுமியின் அண்ணன் அவனது நண்பர்களிடம் ஆயிரம் ரூபா பணத்தினை வாங்கிவிட்டு நான்கு பேரை அழைத்துக்கொண்டுவந்து சிறுமியுடன் ஒன்றாக இருக்க வைத்துள்ளார்.
அண்ணாவின் துணையுடன் போதை கொடுத்து சிறுமி துஸ்பிரயோகம்
சிறுமியின் தந்தை கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தயார் வீதிவேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இந்த சம்பவம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது
சிறுமிக்கு இளைஞர்கள் ஒருவகையான இன்ப்பை கொடுத்துவிட்டு அதனை உண்ட சிறுமி மயக்கநிலைக்கு சென்ற நிலையில் சிறுமியினை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியின் விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.
பிரதேச செயல அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக குறித்த சிறுமி 25.01.2023 இன்று மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரியின் விசாரணைகளுக்கும் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்ட போது இந்த விடையம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சட்டவைத்திய அதிகாரியால் புதுக்குடியிருப்பு
பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்






























