Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு |
இலங்கை செய்திகள் |கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று (07) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக நபர் ஒருவர் முச்சக்கரவண்டியில் சென்றுக் கொண்டிருந்த போது காரில் வந்த ஒருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், முச்சக்கரவண்டியில் பயணித்தவர் மீது துப்பாக்கிச் சூடு படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்தியது யார், என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இளம் யுவதிகளுக்கு சவால் விட்ட பாட்டி |இலங்கை செய்திகள்
இளம் யுவதிகளுக்கு சவால் விட்ட பாட்டி |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியில் கடந்த 03.03.2023 ஆம் இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ். சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் மாணவர்களின் பல்வேறு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குறித்த விளையாட்டு போட்டியில் பழைய மாணவர்களிற்கான 400 m ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது.
அந்த ஓட்டப்போட்டி நிகழ்வில் அப்பாடசாலையின் பழைய மாணவிகள் பலர் பங்குபற்றி இருந்தனர்.
குறித்த பாடசாலையில் கல்விகற்ற 75 வயதுடைய புனிதவதி என்ற மூதாட்டி ஒருவர் கலந்து கொண்டு சிறப்பு பரிசினை தட்டி சென்றுள்ளார்
நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும் | இலங்கை செய்திகள்
நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும் | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |இந்த நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும். இந்த நாட்டில் நடக்கும் விஷயங்களை நாம் புறநிலையாக பார்க்காமல், அடுத்த தேர்தலை கண்கூடாக பார்க்காமல் இருந்தால், பௌத்த
மதகுருமார்கள் இந்த நாட்டை சீரழித்துக்கொண்டே இருப்பார்கள். நாட்டை முன்னேற்றவோ, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக மகாசங்கம் பற்றிய உங்களது கருத்துக்கள் சிங்களவர்கள் மத்தியில் எதிர்மறையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மகா சங்கத்தினரை விமர்சிப்பது புத்திசாலித்தனமா? என வாராந்த இன்று
ஊடகவியாளர்களுக்கு கேள்வி பதிலுக்கான பதில் வழங்கையில் இவ்வாறு அறிக்கை மூலமாக பதில் வழங்கினார் மேலும் தெரிவிக்கையில்..
நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும் | இலங்கை செய்திகள்
என் வயது முதிர்ந்த வயதிலேயே அதன் விளைவுகளை உணர்ந்து பூனைக்கு மணி கட்டும் பணியை நான் மேற்கொண்டேன். பௌத்த மதகுருமார்கள்
அரசின் விவகாரங்களில் தீவிரமாகப் பங்கேற்பதால் ஏற்படும் ஆபத்துகளை அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களும் சுட்டிக்காட்ட வேண்டிய நேரம் இது.
ஆனால் நிச்சயமாக அறிவுள்ள பௌத்த மதகுருமார்கள் தெற்கு மற்றும் வடக்கு கிழக்கிற்கு இடையில் சமாதான தூதுவர்களாக செயல்பட முடியும்.
பௌத்த பிக்குகளின் ஆங்கிலம் அல்லது தமிழ் பேசும் தூதுக்குழு ஒன்று முதலில் வடக்கில் உள்ள எமது புத்திஜீவிகளை சந்தித்து தமிழர்களின் பிரச்சனைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுமாறு நான் பரிந்துரைக்கிறேன்.
அதன்பிறகு, வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள, எங்கள் வரலாற்றுப் பேராசிரியர்களுக்கு இடையே தொடர்பு கொள்ளலாம்.
அதே சமயம் அடிமட்ட மட்டத்தில் ஒருவரையொருவர் சந்திக்கும் வகையில் இரு சமூகத்தினருக்கும் இடையிலான சந்திப்புகளை சிங்கள தமிழ் நட்புறவுச் சங்கங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மனித உரிமைகள் ஆணையாளர்களை வடக்கிற்கு அனுப்புவது மக்களின் தேவைகள் மற்றும் உணர்வுகள் பற்றிய சரியான கண்ணோட்டத்தையோ அல்லது போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும்
மனித உரிமை மீறல்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையும் சர்வதேச உள்ளீட்டுடன் இருக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையை வழங்காது என்றார்.
இரு மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய் | உலக செயதிகள்
இரு மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய் |இலங்கை செயதிகள்
இலங்கை செயதிகள் |தாயொருவர் தனது இரு மகன்களையும் கிணற்றில் வீசிவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சிக்கும் செய்தியொன்று கபிதிகொல்லேவ, கனுகஹவெவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (05) காலை பதிவாகியுள்ளதுடன், கிணற்றில் வீசப்பட்ட மூத்த ஊனமுற்ற சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாயும் மற்றைய வாய் பேச முடியாத சிறுவனும் கல்லில் தொங்கிய நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு கபிதிகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் 21 வயதுடைய மாற்றுத்திறனாளி ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
கபிதிகொல்லேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி இளைஞன் பலி | இலங்கை செய்திகள்
மின்சாரம் தாக்கி இளைஞன் பலி | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் நேற்று (05) மாலை உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ். மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதிஉயர் மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்| தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய ஓர் இளம் பெண்ணின் சடலத்தை புஸல்லாவ சோகமா தோட்ட மேல் பிரிவிலிருந்து மீட்டுள்ளதாக புஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் எல்பொட தோட்ட கட்டுகித்துல ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். நிரஞ்சலா தேவி என்பவர் ஆவார்.
அந்தப் பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே தனது முதல் கணவரை பிரிந்து, வேறொரு நபரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
அதன் பின்னர் இருவரும் கொழும்பில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது.
தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
இந்நிலையில் எல்பொட கட்டுகித்துலையில் உள்ள பெண்ணின் தாய்வீட்டுக்கு செல்வதற்காக கொழும்பிலிருந்து இருவரும் புஸல்லாவ நகருக்கு வந்துள்ளபோதும், வீட்டுக்குச் செல்லவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் தேயிலை கொழுந்து பறிக்கச் சென்ற இரு பெண்கள் சடலத்தை குறித்த இடத்தில் கண்டு, புஸல்லாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
அத்துடன் உயிரிழந்த பெண்ணின் இரண்டாவது கணவர் தலைமறைவாகியுள்ளதாக கூறும் பொலிஸார், பெண் வேறோர் இடத்தில் கொலை செய்யப்பட்டு, குறித்த இடத்தில் கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான ஸ்தல விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதவான் மேற்கொண்டதோடு, சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸல்லாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
20 வயதான யுவதியை கட்டிவைத்து துஷ்பிரயோகம் | இலங்கை செய்திகள்
20 வயதான யுவதியை கட்டிவைத்து துஷ்பிரயோகம் | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்| வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான யுவதியொருவர் அந்த வீட்டின் எஜமானால் 4 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என மொறட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
60 வயது மதிக்கத்தக்க ஒருவரே அந்த யுவதியை கட்டிவைத்து மூன்று நாட்களாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
அவரது பிடியில் இருந்து தப்பிவந்த யுவதி, மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் முறைப்பாடு செய்துள்ளார்.
நோர்வூட்டைச் சேர்ந்த தரகர் மூலமாக அந்த யுவதி, 20 நாட்களுக்கு முன்னரே அந்த வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
20 வயதான யுவதியை கட்டிவைத்து துஷ்பிரயோகம் | இலங்கை செய்திகள்
சந்தேகநபரான அந்த நபர், அவ்வப்போது அந்த யுவதியிடம் அங்க சேஷ்டைகளை விட்டுவந்துள்ளார். இந்நிலையில், அவ்வீட்டைச் சேர்ந்த ஏனைய அங்கத்தவர்கள் விடுமுறையை கழிப்பதற்காக வெளியில் சென்றுள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டே, அந்த யுவதியை அச்சுறுத்தி, இவ்வாறு கட்டிவைத்து, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பிடியில் இருந்து தப்பி வீட்டைவிட்டு வெளியேறிய யுவதி, வீதியில் சென்றுக்கொண்டிருந்தவரிடம் பொலிஸ் நிலையத்தின் தகவலைப் பெற்று, பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிட்டுள்ளார்.
இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்
இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில், அக்கரைப்பற்று 241ஆம் இராணுவ படைப்பிரிவு முகாமின் தேனீர் சாலை முன்பாக இன்று (05) அதிகாலை கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இக்கார் வீதியை விட்டு விலகி, வீதி அருகில் இருந்த சிறிய தூண்களை உடைத்துக்கொண்டு, அருகில் இருந்த சிறிய பள்ளமான பிரதேசமொன்றில் தலை கீழாக வீழ்ந்து கிடப்பதை காண முடிந்தது.
காரின் இரு பக்க இலக்கத்தகடுகளும் காணப்படாத நிலையில், காரின் முன்பகுதி மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதையும் காரின் சில பாகங்கள் சிதறி கிடப்பதையும் அவதானிக்க முடிந்தது.
இதில் பயணம் செய்தவர்கள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில், அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார், இன்று காலை குறித்த இடத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
வரக்காபொல விபத்தில் ஒருவர் மரணம் | இலங்கை செய்திகள்
மனித பாவனைக்கு உதவாத உணவு விற்பனை | இலங்கை செய்திகள்
மனித பாவனைக்கு உதவாத உணவு விற்பனை | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் உணவுத் தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள் மற்றும் பேக்கரிகள் என உணவுத் தயாரிக்கும் இடங்கள் நேற்று மாலை சோதனை செய்யப்பட்டன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ச.எம்.மாதவன் தலைமையில், அவரது வழிகாட்டலில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மனித பாவனைக்கு உதவாத உணவு விற்பனை | இலங்கை செய்திகள்
இதன்போது உணவுப் பாதுகாப்பு இல்லாமல் மனித பாவனைக்குதவாத, பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பல உணவுப் பொருட்கள் சுகாதார அதிகாரிகளினா கைப்பற்றப்பட்டதுடன், வர்த்தகர்கள் நால்வர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த உணவுப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மூவருக்கு தலா 10,000 ரூபாய் மற்றும் வர்த்தகர் ஒருவருக்கு 5,000 ரூபாயும் அபராதமாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போலினால் அறவிடப்பட்டதுடன்,
உணவுப் பொருட்கள் நீதவானின் உத்தரவின்பேரில் அழிக்கப்பட்டன.
மாணவி துஷ்பிரயோகம் அதிபர் கைது | இலங்கை செய்திகள்
மாணவி துஷ்பிரயோகம் அதிபர் கைது | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய 50 வயதுடைய அதிபர் பலாங்கொட அல்லராவ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன்,
பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவனைப் பழி வாங்க குழந்தையை கொல்ல முயன்ற தாய்| இலங்கை செய்திகள்
கணவனைப் பழி வாங்க குழந்தையை கொல்ல முயன்ற தாய்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |கணவனை பழிவாங்கும் நோக்கில் ஒன்றரை வயது சிறுமியை இறால் தொட்டியில் தள்ளிய சம்பவம் உடப்பு , கட்டகடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக உடப்புவ பொலிஸார் கடந்த 4 ஆம் திகதி தெரிவித்துள்ளனர்.
உடப்புவ, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவி, தனது பெண் குழந்தை இறால் தொட்டிக்குள் தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சிறுமி குருநாகல் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் தள்ளப்பட்ட சிறுமி தற்போது குணமடைந்து வருவதாக குருநாகல் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சண்டமாலிசமரகோன் தெரிவித்துள்ளார்.
கணவனைப் பழி வாங்க குழந்தையை கொல்ல முயன்ற தாய்| இலங்கை செய்திகள்
சிறுமியை இறால் வளர்ப்பு தொட்டிக்குள் தள்ளியதாக கூறப்படும் 20 வயதுடைய தாய் சந்தேகத்தின் பேரில் உடப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி தொட்டியில் விழுந்ததாக சந்தேக நபர் முதலில் பொலிஸாரிடம் தெரிவித்த போதிலும், இறால் பண்ணையின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த
போது, சந்தேகநபர் குறித்த சிறுமியை பிடித்து அவளை தொட்டிக்குள் தள்ளும் காட்சி தெளிவாகத் தெரிந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இறால் தொட்டிக்குள் தள்ளிவிட்டு குழந்தையை காணவில்லை என கூறி தேடிய போது, அதே இறால் பண்ணையில் பணிபுரியும் மற்றொரு தொழிலாளி, குழந்தை இறால் தொட்டியில் போராடுவதை பார்த்து அதில் குதித்து காப்பாற்றியதாக கூறினார்.
யாழில் இளம் பெண் செய்த வேலை-நடமாடும் கடவுள் வீடியோ
யாழில் இளம் பெண் செய்த வேலை-நடமாடும் கடவுள் வீடியோ
யாழ்ப்பாணம் மருதனார் மடம் ஆலயத்தின் முன்பாக
பிச்சை எடுத்து கொண்டிருந்த பெரியவர் ஒருவரை ,
இளம் தமிழ் பெண் ஒருவர் அழைத்து சென்று
செய்த வேலையை பாருங்கள் .
இப்படியும் நட மாடும் அன்னை திரேசாக்கள் இருக்கத்தான் செய்யிறாங்க .
இந்த காணொளி பார்த்து பலமுறை நானே அழுதுவிட்டேன் .
யார் பெத்த புள்ளையோ நூறாண்டு நலமுடன் நீடூழி வாழ்க வாழ்த்துவோம் .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்.
நெடுமாறன் 90 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதிய இறுவெட்டு வெளியீடு
நெடுமாறன் 90 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதிய இறுவெட்டு வெளியீடு
தமிழ்கத்தின் புரட்சிகர அரசியல் படை இயக்கத்தின் பேசப்படும் .
போற்றுதலுக்கு உள்ளான ஐயா நெடுமாறன் அவர்களது, 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு .வரும் மார்ச் மாதம்10ம் தேதி புதிய இறுவெட்டு வெளிவருகிறது .
இந்த இறு வெட்டில் வெளி வரும் பாடல்களுக்கு தனது மதுர குரலினால் பாவேந்தன் இளங்கோவன் பாடிட ,இசை சக்கரவத்தி -இளங்கோ செல்லப்பா இசையிலும் ,அவரது வரிகளில் உருவான ,பாடல்கள் அழகுற வெளிப்படுத்த பட்டுள்ளது .
ஐயா மேலும் நூறாண்டு காலம் வாழ தமிழ் மக்கள் வாழ்த்தி வணங்குகின்றனர்.
அரசாங்கத்தின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது| இலங்கை செய்திகள்
அரசாங்கத்தின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |தேர்தலில் முறைகேடு செய்யும் அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதோடு, உள்ளுராட்சி மன்றத்
தேர்தலுக்கு பணம் விடுவிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் மேற்கொண்ட சதி இதன் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அக்மீமன பிரதேசத்தில் நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோருக்கு
உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அச்சகருக்கு நிதி விடுவிக்காதிருப்பதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையையும் உயர்
நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகவும், மக்களின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்திற்காக வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு இதுவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியை அணுகி தேர்தலை நடத்த வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கெஞ்சுவதாக கூறிய ஜனாதிபதியின் அபத்தமான கருத்துக்கள் இதன் மூலம் பொய்யானவை என தெரிவித்த
எதிர்க்கட்சித் தலைவர், இன்று வழங்கிய தீர்ப்பின் மூலம், நாட்டு மக்களின் வாக்குரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த
முற்போக்கு முன்னெடுப்பாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு IMF ஆதரவு| இலங்கை செய்திகள்
மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு IMF ஆதரவு| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி திட்டமிட்ட நடைமுறைக்கு ஏற்ப வட்டி விகிதங்களை உயர்த்தியது பொருத்தமான விடயம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
பணவீக்கம் குறித்த கண்ணோட்டம் தொடர்பில் மத்திய வங்கிக்கும் சர்வதேச நாணய நிதிய ஊழியர்களுக்கும் இடையில் சில வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், கொள்கை வட்டி வீதத்தை 1% ஆல் உயர்த்துவதாக இலங்கை மத்திய வங்கி நேற்று (03) அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு IMF ஆதரவு| இலங்கை செய்திகள்
கொள்கை வட்டி வீதத்தை உயர்த்துவதற்கான மத்திய வங்கியின் முடிவு பொருத்தமானது மற்றும் பணவீக்க இலக்கு கட்டமைப்பின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்களுக்கு இணங்கியுள்ளதாக இலங்கைக்கான
தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளனர்.
பணவீக்க இலக்குகளை அடைவதில் இலங்கை மத்திய வங்கியின்
அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்| இலங்கை செய்திகள்
கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதி ஒருவரின் சடலம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள நிலையில் இன்று (04) காலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குறித்த யுவதி கடந்த 02ஆம் திகதி முதல் காணாமல் போனதாக பேருவளை பொலிஸில் அவரது பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர்.
கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்| இலங்கை செய்திகள்
சிசிடிவியை பரிசோதித்தபோது, அவர் ஒரு பிரதான வீதியில் செல்வது அவதானிக்கப்பட்ட போதும், அதன் பிறகு அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அதன்படி இன்று காலை பேருவளை மருதானை லெல்லம மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இருந்து அவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது பெற்றோர் பொலிஸாரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
A/L மாணவர்களுக்கு அநீதி | இலங்கை செய்திகள்
A/L மாணவர்களுக்கு அநீதி | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தாமதமாவதால், பரீட்சார்த்திகள் பாரிய அநீதிக்கு உள்ளாகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் முன்மொழிந்த கொடுப்பனவுகளில் இருந்து ஆயிரம் ரூபாவைக் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சை முடிவடைந்து 02 வாரங்கள் கடந்துள்ள போதிலும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க முடியவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
A/L மாணவர்களுக்கு அநீதி | இலங்கை செய்திகள்
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மகனின் மரணச் செய்தி கேட்டு உயிரிழந்த தாய் | இலங்கை செய்திகள்
மகனின் மரணச் செய்தி கேட்டு உயிரிழந்த தாய் | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் வவுனியா நெடுங்கேணி பகுதியில் மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த மரண செய்தியை இன்று அறிந்த குறித்த குடும்பத்தரின் தாயாரான இராசரட்ணம் வீரம்மா என்ற 82 வயதுடைய முதியவரும் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் பிரதேச மக்களை சோகத்துக்குள்ளாக்கியுள்ளது.
இருவரது மரண சடங்குகளும் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளது.
கிளிநொச்சி இ.போ.ச ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு
கிளிநொச்சி இ.போ.ச ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு
இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள், இன்று (03) பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
“கிளிநொச்சி சாலையின் வருமானத்தை பாதிக்கும் வகையில், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு வழித்தடத்தில் ஒரே நேரத்தில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு, புல்மேட்டை ஊடாக திருகோணமலைக்குச் செல்லும் தமது பஸ்களுக்கு முன்னால் விசுவமடுவில் இருந்து திருகோணமலைக்கு செல்லும் தனியாருக்கு சேவையாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இ.போ.ச ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு
“இதுவரை காலமும் கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு சேவையாற்றும் படி கோரிக்கைகள் இருந்தும் இதுவரை இ.போ.சக்கு அனுமதி
வழங்கப்படவில்லை” என்ற விடயங்களை சுட்டிக்காட்டியே குறித்த பணிப் பகிஷ்கரிப்பில் இன்று காலை
முதல் கிளிநொச்சி இ.போ.ச ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.




























