Category: எதிரி செய்திகள் எதிரி நியூஸ்
எதிரி செய்திகள் எதிரி நியூஸ்,எதிரி இன்றைய செய்திகள் ,
யாவும் உடனுக்குடன் இங்கே பிரசுரிக்க படுகிறது பார்த்து மகிழுங்கள்
42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை
42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 42,248 பேரின் பெயர் பட்டியல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி யுக்திய நடவடிக்கையின் கீழ் அவர்களை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
அந்த சந்தேக நபர்களில், 35,505 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் , இதுவரை கைது செய்யப்படாத 4,258 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்படும் 807 (2022 இல்) மற்றும் 1,678 (2023 இல்) சந்தேக நபர்களாக 2,485 பேர் அடங்கியுள்ளனர்.
42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை
நாளை (14) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் யுக்திய நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
மேற்கண்ட 3 பட்டியலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தமது காவல்துறையை உள்ளடக்கிய நடவடிக்கைகளை
மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளையும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா இஸ்ரேல் கடும் மோதல் இரான்அமெரிக்கா உள்ளக மோதல்
ஹிஸ்புல்லா இஸ்ரேல் கடும் மோதல் இரான்அமெரிக்கா உள்ளக மோதல்
ஹிஸ்புல்லா இஸ்ரேல் கடும் மோதல்,
இரான் அமெரிக்கா உள்ளக மோதல் .
ஈரானுக்கு பறந்த வெள்ளை மாளிகையின் அதி முக்கிய செய்தி
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
கடலில் காணமல் போன அமெரிக்கா கடற்ப்படை சிப்பாய்கள்
கடலில் காணமல் போன அமெரிக்கா கடற்ப்படை சிப்பாய்கள்
கடலில் காணமல் போன அமெரிக்கா கடற்ப்படை சிப்பாய்கள் ,
. நடந்தது என்னவிசாரணையில் இராணுவம் ,கடத்த பட்டார்களா ..?
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
மதுபான சாலைகளுக்கு பூட்டு
மதுபான சாலைகளுக்கு பூட்டு
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மதுபான சாலைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர்களுக்கு
கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அ. அரவிந்குமார் தெரிவிக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழர்களின் புனித திருநாளான தைப்பொங்கல் தினத்தன்று மதுபான சாலைகளை மூட நடவடிக்கை எடுக்குமாறு மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் தாம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, பணிப்பாளர் நாயகம் இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இதன்மூலம் மதுவற்ற பொங்கல் திருநாளை கொண்டாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்விரு மாவட்டங்களிலும் இயங்கும் மதுபான சாலைகளில் அதிகமான தோட்டப்புற இளைஞர்களே கடமையாற்றி வருகின்றனர். அவர்கள் தமது குடும்பங்களுடன் பண்டிகையை கொண்டாடி மகிழ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
பரீட்சை வினாத்தாள் வெளியீடு விசாரணையில் CID
பரீட்சை வினாத்தாள் வெளியீடு விசாரணையில் CID
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு முன்னதாகவே குறித்த வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து மூன்று மொழிகளிலும் குறித்த வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை வினாத்தாள் வெளியீடு விசாரணையில் CID
அத்துடன், குறித்த வினாத்தாளுக்கான பரீட்சை இடம்பெறவுள்ள புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த வினாத்தாளின் கேள்விகள் மற்றொரு தாளில் கையாள் எழுதப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியானமை தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார சபையின் விசேட அறிவிப்பு
மின்சார சபையின் விசேட அறிவிப்பு
மின்சார கட்டண திருத்த பிரேரணை தொடர்பான தரவுகள் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு (PUCSL) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த,
நவம்பர் டிசம்பரில் நல்ல மழை பெய்தது. அதனால் மின்சாரக் கட்டணத்தின் மூலம் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
0-30, 0-60 மற்றும் 0-90 யூனிட்களுக்கு இடைப்பட்ட மக்களைப் பற்றி பேசுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளது.
கண்டிப்பாக அந்த வரம்பில் உள்ளவர்களுக்கு குறித்த நிவாரணத்தை வழங்க கடமையாற்றுவோம் என குறிப்பிட்டார்
சுவிட்சர்லாந்து பறந்தார் ஜனாதிபதி
சுவிட்சர்லாந்து பறந்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 நாள் பயணமாக நாட்டில் இருந்து வௌியேறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை (13) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.
12 வருடங்களுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பிரதான வீதி
12 வருடங்களுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பிரதான வீதி
கடந்த 12 வருடங்களுக்கு பிறகு காரைதீவு பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சேனநாயக்கா சமுத்திரத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் இந்த வெள்ளம் பரவுகிறது. இதற்கு முன் 2010 ஆம் ஆண்டில் இத்தகையதொரு வெள்ளம் ஏற்பட்டிருந்தது..
இதனால் மக்கள் சிரமத்திற்கு மத்தியில் பயணிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
காரைதீவு – அக்கரைப்பற்று வீதி காரைதீவு – அம்பாறை வீதிகளில் வெள்ளம் பாய்வதால் குறித்த வீதியில் போக்குவரத்துக்கு பொலிஸார் அனுமதிக்கவில்லை. காரைதீவு மாவடி பள்ளி வீதி முற்றாகவே அமிழ்ந்திருக்கின்றது.
செங்கடலில் கப்பல்களை ஓட ஓட துரத்திய எமன் படைகள்
செங்கடலில் கப்பல்களை ஓட ஓட துரத்திய எமன் படைகள்
செங்கடலில் கப்பல்களை ஓட ஓட துரத்திய ஏமன் படைகள் .
தொடரும் கப்பல் நடவடிக்கையால் செங்கடல் கப்பல் போக்குவரத்து
நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இஸ்ரேல் நகரம் மீது ரொக்கட் தாக்குதல்|சிறைபிடிக்க பட்ட வானூர்தி
இஸ்ரேல் நகரம் மீது ரொக்கட் தாக்குதல்|சிறைபிடிக்க பட்ட வானூர்தி
இஸ்ரேல் நகரம் மீது காச அப்போர் படைகள் கடும்
ரொக்கட் தாக்குதல்.
அஸ்கொட் நகரம் பெரும் பாதிப்பு ,
சிறைபிடிக்க பட்ட உலங்கு வானூர்தி
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இஸ்ரேல் புரிவது இனப்படுகொலை ரவிகரன் முழக்கம்
இஸ்ரேல் புரிவது இனப்படுகொலை ரவிகரன் முழக்கம்
இஸ்ரேல் பாலஸ்தீனம் காசாவில் நடத்தி கொண்டிருப்பது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என தமிழர்களுக்கு உரத்து குரல் வழங்கி வரும் அரசியல் பிரமுகர் ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார் .
எமக்கு வழங்கிய செவ்வியின் பொழுது அவர் பாதிக்க பட்ட மக்கள் நிலையில் இருந்தும் ,ஈழ தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பாக ஒப்பிட்டு உரத்து குரலை வழங்கியுள்ளார் .
இஸ்ரேல் புரிவது இனப்படுகொலை ரவிகரன் முழக்கம்
தனது ஆதரவு பாலஸ்தீனத்திற்கு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்
இஸ்ரேல் அரசை தட்டி கேட்க ஒருவரும் இல்லை என்கின்ற நிலையில்
கோர தணடவம் ஆடிய இஸ்ரேலுக்கு இது ஒரு சிறந்த வலை வீச்சு என அவர் தெரிவித்துள்ளார் .
அவரது முழுமையான குரல் பதிவை காண கீழே உள்ள இணைப்பில் அழுத்தி பார்க்க முடியும்.
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

கூண்டோடு சிக்கிய இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றம் கிடுக்கு பிடி
கூண்டோடு சிக்கிய இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றம் கிடுக்கு பிடி
கூண்டோடு சிக்கிய இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றம் கிடுக்கு பிடி ,
தங்கள் குற்றம் இழக்கவில்லை என இஸ்ரேல்;முழக்கம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
ஹவுதி மீது அமெரிக்கா பிரிட்டன் கடும் தாக்குதல்
ஹவுதி மீது அமெரிக்கா பிரிட்டன் கடும் தாக்குதல்
ஹவுதி மீது அமெரிக்கா பிரிட்டன் கடும் தாக்குதல் ,
மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
மக்களின் வாழ்வாதாரம் வருமானம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது
மக்களின் வாழ்வாதாரம் வருமானம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது
கலபட தோட்டத்திற்கும் மவ்ஜூன் தோட்டத்திற்கும் காணிகள் இந்த அரசாங்கத்தின் மறுசீரமைப்பின் கீழ் வேறு திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த மறுசீரமைப்பிற்கு அந்த தோட்டத்தில் வாழும் மக்களின் குடியிருப்புகள் அவ்வாறே இருக்கிறது. அவர்களின் EPF,ETF நிலுவைகளும் அவ்வாறே இருக்கிறது.
இவ்வாறு இருக்கின்ற நிலையில் தோட்டத்தின் பெரும் பகுதி வெளியாட்களுக்கு வழங்குவதால் அந்த மக்களின் வாழ்வாதாரம், வருமானம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அமெரிக்கா கப்பல் சிறை பிடிப்பு கடலில் நடந்த மோதல்
அமெரிக்கா கப்பல் சிறை பிடிப்பு கடலில் நடந்த மோதல்
அமெரிக்கா ஒயில் கப்பல் சிறை பிடிப்பு ,
காத்திருந்து துரத்தி பிடித்த இரான் கடற்படை .
கடலில் நடந்த மோதல்
நீர் கட்டணத்தை குறைக்க தீர்மானம்
நீர் கட்டணத்தை குறைக்க தீர்மானம்
இடம்பெறவுள்ள மின் கட்டண குறைப்புக்கு இணைந்ததாக, நீர் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கண்டியில் இன்று (11) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
“எதிர்காலத்தில் நீர் கட்டணம் தொடர்பான விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.
இதனூடாக மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாங்கள் செயற்படபோவதில்லை. தண்ணீரை சுத்திகரிக்க தேவையான முக்கிய காரணிகளில் மின்சாரம் ஒன்று.
எனவே மின் கட்டணம் குறைக்கப்பட்டால் நிச்சயமாக நீர் கட்டணமும் குறைக்கப்படும்.
பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்
பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்
சைபர் மோசடிகளில் ஏராளமானோர் பணத்தை இழப்பது குறித்து நாம் ஏற்கெனவே ஏராளமான செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போன்ற மோசடிகளில் இது மிகவும் விநோதமானது.
டிசம்பர் மாத தொடக்கத்தில் மங்கேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஃபேஸ்புக்கில் இருந்த தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, ”அனைத்திந்திய கர்ப்பிணி வேலை சேவை” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு விளம்பர வீடியோவைக் கண்டார். அது அவரை ஈர்த்ததால், அதைப் பார்க்க முடிவு செய்தார்.
அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த வேலை உண்மையிலுமே ஒரு அருமையான வேலையாகத் தோன்றியது. அதில் நிறைய பணம் மற்றும் பல்வேறு கவர்ச்சியான பொருட்கள் கிடைக்கும்.
அது என்ன வேலை? ஒரு பெண்ணை கர்ப்பமாக்குவது தான் அந்த வேலை. ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கினால் ஏராளமான வசதி வாய்ப்புகள் வந்து சேரும் என அந்த விளம்பர வீடியோ கூறியது.
பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்
நிச்சயமாக, அது உண்மையாக இருக்கும் என்று அவர் நம்பினார். இதுவரை, ஒரு திருமண அலங்கார நிறுவனத்தில் வேலை செய்து மாதம் 15,000 ரூபாய் ($180; £142) சம்பாதிக்கும் 33 வயதான அவர், ஏற்கனவே இந்த மோசடி செய்பவர்களிடம் 16,000 ரூபாயை இழந்துள்ளார். மேலும் அவர்கள் தொடர்ந்து பணம் கேட்கிறார்கள்.
ஆனால் வட இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்த மங்கேஷ் என்பவர் மட்டும் இந்த மோசடியில் சிக்கவில்லை. இன்னும் ஏராளமானோர் சிக்கியிருக்கின்றனர்.
பிகாரின் நவாடா மாவட்டத்தில் உள்ள சைபர் செல் பிரிவின் காவல் துணைக் கண்காணிப்பாளர் கல்யாண் ஆனந்த் பிபிசியிடம் இது குறித்துப் பேசியபோது, பெரிய அளவிலான ஒரு மோசடியில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அங்கு ஏமாந்தவர்கள் பெரிய அளவில் சம்பளம் கிடைக்கும் என்ற வாக்குறுதியின் பேரில் ஏமாற்றப்பட்டனர் என்றும் கூறினார்.
குழந்தை இல்லாத பெண்ணுடன் ஓட்டலில் இரவு நேரம் தங்கினால் பணம் தருவதாக அந்தக் கும்பல் ஏமாற்றியுள்ளது.
இதுவரை, அந்தக் குழுவைச் சேர்ந்த எட்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது மொபைல் போன்கள் மற்றும் ஒரு பிரிண்டரை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் 18 பேரை தேடி வருகின்றனர்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கிறது.
“இந்தக் கும்பல் ஒரு வருடமாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் நூற்றுக்கணக்கான மக்களை ஏமாற்றியதாக நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இதுவரை யாரும் புகார் செய்ய முன்வரவில்லை. ஒருவேளை அவமானம் காரணமாக யாரும் புகாரளிக்காமல் இருக்கலாம்,” என்று கல்யாண் ஆனந்த் விளக்கினார்.
இஸ்ரேல் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல்
இஸ்ரேல் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல்
இஸ்ரேல் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
நடத்தி கோடனிருக்கும் லெபனான் போராட்ட காரர்கள் .
சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் ,ஆப்பிரிக்கா ஆரம்பித்த சட்ட போராட்டம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
செங்கடலில் ஒயில் கப்பல் மீது தாக்குதல்|எரியும் அமெரிக்கா போர் கப்பல்
செங்கடலில் ஒயில் கப்பல் மீது தாக்குதல்|எரியும் அமெரிக்கா போர் கப்பல்
செங்கடலில் பயணித்து கொண்டிருந்த ஒயில் கப்பல் மீது ஏமன்
தாக்குதல் .
ஆயுத படகுகள் சுற்றிவளைத்து தாக்குதல் ,அமெரிக்கா போர் கப்பல் மீது
தாக்குதல் எரியும் அமெரிக்கா போர் கப்பல் .
இஸ்ரேல் காசா போர் செங்கடலில் பதட்டம்
எரியும் காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்க
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
ஹவுதிகளுக்கு ஈரான் சிறப்பு பயிற்சி தயராகும் புதிய தாக்குதல் திட்டம் |Ethiri Youtube Tamil News
ஹவுதிகளுக்கு ஈரான் சிறப்பு பயிற்சி தயராகும் புதிய தாக்குதல் திட்டம் |Ethiri Youtube Tamil News
இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போரினை அடுத்து ஹவுதிகளுக்கு ஈரான் சிறப்பு பயிற்சி
தயராகும் புதிய தாக்குதல் திட்டம் ,உச்சம் பெற்றுள்ள செங்கடல் கப்பல் போக்குவரத்துநெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில்
தற்போது இரான்இராணுவம் ஹவுதியபடைகளுக்கு சிறப்பு பயிசிகளை வழங்கி வருகிறது .ஈரான் சிறப்பு முகாமில்
இந்த பயிற்சிகள் வழங்க படுவதாக தகவல் வெளியகிய பர பரப்பை ஏற்படுத்தியுளளது
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

































