ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை

Spread the love

ஹிஸ்புல்லா தலைவர் கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை

ஈராக் நாட்டின் தலைநகர் அருகில் வைத்து ஈரானிய இராணுவ தளபதி முக்கிய ஐந்து சகாக்கள் , ஹிஸ்புல்லா உபதலைவர்,ஈராக்கிய இராணுவ தளபதி ,மேலும்

துணைப்படை குழு தலைவர் .
என பெரும் தலைவர்களை ஒரே ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கா,இஸ்ரேல் , இணைந்து கூட்டாக படுகொலை புரிந்தது .

ஈரானின் மூளையை கொன்று விட்டோம் இனி ஈரானால் எழுந்து நடக்கவே முடியாது என இஸ்ரேல்,அமெரிக்கா துள்ளி குதிக்கின்றன .

சமீப நாட்களாக கிஸ் புல்லா எம்மை முற்றாக அழிக்க போகிறது ,அவர்களிடம் 130 ஆயிரம் ரொக்கட்டுக்கள்

உள்ளன ,அதைவிட நீண்ட தூர ஆட்லொறிகள் ,பல்குழல் எறிகணைகள் என்பன உள்ளன .

இஸ்ரேலை இல்லாது அழிக்கும் நகர்வில் இவர்கள் ஈடுபட உள்ளனர் என இஸ்ரேல் அறிவித்தது,அத்துடன் நிற்காது

,லேசர் ஆயுத உற்பத்தியை எதிர்வரும் ஆண்டுக்குள் நாம் நிறுவி விடுவோம் எனவும் அது சபதம் இட்டது .

இவை ஏவுகணைகளை இடை மறித்து சுட்டு வீழ்த்த இந்த லேசர் ஆயுத பயன் பாடு உதவும் என இஸ்ரேல் கருதுகிறது .

இப்பொழுது ஈரானை ஒரு முற்றுகைக்குள் வைத்து அந்த நாட்டையும் ,அதன் தலைவரையும் இல்லாது அழிக்கின்ற நகர்வில் இஸ்ரேல் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளன .

ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை

அடுத்து வரும் நாட்களில் இந்த முக்கியஸ்தர்களை படுகொலை புரியும் தாக்குதலை இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டாக நடத்த போகின்றன .

அதற்கு அமைவாக ஈரானின் முக்கிய நேச குழுக்களை அழித்து ஒழிக்கும் நகர்வில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது ,அதன்

அடுத்த குறியாக கிஸ்புல்லா தலைவர் Sheik Hassan Nasrallah குறி வைக்க பட்டுள்ளார்

இவர் இஸ்ரேலினால் இலக்கு வைக்க பட்டுள்ளார் எனவும் இவரை எச்சரிக்கையாக இருக்கும் படி ஈரான் அவசரமாக அறிவித்துள்ளது

இஸ்ரேல் எப்பொழுதும் முக்கிய அமைப்புகளின் முதன்மை மூளைகளை கொல்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது ,

அதுபோலவே இதன் தொடர் தாக்குதல்கள் ஈரான்,மற்றும் அதன் நேச படைகள் மீதுஅதன் பார்வை திரும்பியுள்ளது .

ஈரான் மீது மருத்துவ தடையை விதித்து அதன் ஊடக அந்த மக்களை பட்டினி மற்றும் ,நோயால் கொலை செய்யும்

விடயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் களத்தில் குதித்துள்ளன .

தாம் செய்யும் சர்வாதிகார போக்கை ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவையால் கண்டிக்க முடியவில்லை ,அமெரிக்காவின் ஒரு முகவராக ஐக்கிய நாடுகள் சபை

இயங்கிய வண்ணம் உள்ளது ,அது போன்றே சர்வதேச நீதிமன்றும் என கருத படுகிறது .

போர் குற்றங்கள் புரிந்தவர்கள் ,இன பாடுகொலை புரிந்தவர்கள் உல்லாசமாக திரிகின்றனர் .


அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை .

பலவீனமான விடுதலைக்கு போராடும் , அமைப்புகளை ,சிறிய நாடுகளை இல்லாது அழிக்கும் நகர்விலேயே இந்த

மேற்குலகமும் ,அதன் செயல் இயக்கமும் தீவிரம் பெற்று வருகிறது .

சமீப நாட்களாக இஸ்ரேலின் விட்டு வந்த விடு கதைக்கு இப்பொழுது ஈரான் விடையை அவிழ்த்து விட்டுள்ளது .

ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை


முன்னரே தெரிவித்தோம் அல்லவா கதை மாற போகிறது என.

ஆம் , ஈரானை முற்றுகைக்குள் வைத்து அதன் தாக்குதல் வீச்சை குறைக்க வேண்டும் எனின்
அதன் ஆதரவு படைகள் ,மற்றும் அதன் முக்கிய

மூளைகளை இல்லாது அழிக்க வேண்டும் ,அதே சமவேளை அந்த மக்களை அதே அரசுக்கு எதிராக திருப்பி விட வேண்டும் .

எதிரிகளின் தாக்குதல் ,மக்கள் புரட்சி இந்த இரண்டுக்குள்ளும் அந்த நாட்டை சிக்க வைக்கும் மரண

விளையாட்டில் அமெரிக்கா,செயல் ,மற்றும் அதன் நேச நாடுகள் ஈடு பட்டு வருகின்றன .

மத்திய கிழக்கில் ஒரு வல்லரசாக நிமிர்ந்து நிற்கும் ஈரானை முற்றாக அழிக்கும் நகர்வில் இந்த மேற்குல வெள்ளையர் சண்டியர்கள் வரிந்து கட்டி போவது ,பயங்கரவாதம் என்ற

போர்வையில் அந்த நாடுகளின் வளங்களை , எண்ணெய் வயல்களை கொள்ளையடிக்கவே .

வள சுரண்டல் ஊடாக நாடுகளை அடக்கி ,ஒடுக்கி ,மிரட்டி கொள்ளை இலாபம் பெறும் இந்த கொழுத்த வெள்ளையர்களை எவர் அடக்குவது ..?

ஆசிய நாடுகளில் ,லஞ்சம் ஊழல் நேர்மையற்ற அரசாட்சி,என்பனவற்றை உருவாக்கி அந்த நாடுகளின் வளர்ச்சியை தடுத்து ,அடக்கி வருகிறது இந்த மேற்குலகம் ,.

அதற்குள் இருந்து அந்த நாடுகள் மீளாத வரை வளர்ச்சி ,மற்றும் அறிவியல் நோக்கி எப்படி அவர்களினால் நகர முடியும் ..?

எனவே முடிவில் ஈரான் நாட்டை அழிக்கும் முடிவில் இஸ்ரேல்,அமெரிக்கா,நேச நாடுகள் முனைப்பு கட்டி விட்டன ,

திட்டங்கள் போட்டு விட்டன. இனி அதற்கு ஏற்ப காரணிகளை கூறிய வண்ணம் கெடு பிடி நடத்த

போகின்றன .அது ஈரானையே வலிந்து தாக்குதல் மேற் கொள்ள வைக்கும் நெருக்கடிக்குள் தள்ளிவிட போகின்றன .

ஈரானின் அணு உலைகள் ,சோதனை ,விமான விபத்து விசாரணை என ,அடுக்கு மொழி நொண்டி சாட்டுகளை

கூறிய வண்ணம் வரிந்து கட்டி படையெடுப்பை நடத்த போகிறது உலக சண்டியர் தலைமையிலான அணிகள் .

இவர்களின் இந்த கொடும் தாக்குதல் ,இராயத்தந்திர வேட்டையில் இருந்து ஈரான் தப்புமா ..?
ஏவுகணைகள் ஈரானை நோக்கி திருப்ப பட்டுள்ளன .

அணு உலைகள் ,ஆயுத கூடங்கள் ,விமான தளங்கள் ,முக்கிய இராணுவ தளங்கள் குறி வைக்க பட்டுள்ளன .


இதில் இருந்து ஈரான் எப்படி தன்னை பாதுகாத்து கொள்ள போகிறது ..?

அமெரிக்காவின் சாதனங்களை செயல் இழக்க வைப்பதே எமது நோக்கு என என்றான் தொடர்ந்து கூறி வருகிறது ,அப்படி எனறால் சைபர் தாக்குதல் மற்றும் GPS

வழிகாட்டுதலில் இயங்கும் பொறிமுறை வழிகாட்டல் கட்டமைப்பை சிதைக்கும் முயற்சியிலும் ஈரான் ஈடுபட்டுள்ளது ,

இதனை சிதைத்தால் ஈரானின் ஏவுகணையாகலி அமெரிக்காவால் சுட்டு வீழ்த்த முடியாது .

எமக்கு உயிர் ஆபத்து இல்லை என கூறி வரும் அமெரிக்கா செய்திகள் ,ஈரானை மீளவும் ஒரு தாக்குதலை நடத்த வைக்கும்

ஆத்திரம் ஊட்டும் செயல் ,இதற்குள் சிக்கி ஈரான் தாக்குதலை நடத்தினால் அதுவே வில்லங்கத்தை உருவாக்கும்

.போர் பதட்டம் மேலும் வெடிக்கிறது ,
காட்டு தீயாக இது கரை தேடி ஓடுகிறது .

  • வன்னி மைந்தன்-
ஹிஸ்புல்லா தலைவர் கொல்ல இஸ்ரேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *