பிரான்ஸூக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் பெலராஸில் சடலமாக மீட்பு
பிரான்ஸூக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின்
எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் (வயது 40) ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக அந்நாட்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
பிரான்ஸூக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் பெலராஸில் சடலமாக மீட்பு
பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் ரஷ்யா சென்று அங்கிருந்து பெலராஸ்,போலந்து,ஜேர்மன்
டாக பிரான்ஸ் செல்வதற்காக பெலராஸிலிருந்து போலந்துக்கு சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கடப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவுடன் சென்ற போது உடல்
நிலை பாதிக்கப்பட்டு பெலராஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. ஏனையவர்கள் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 7 ஆம் திகதி சனிக் கிழமை பெலராஸ் எல்லையில் இருந்து சில கிலோ
மீற்றர் தொலைவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வட்டக்கச்சியில்
உள்ள மனைவியை தொடர்பு கொண்டு தன்னால் நடக்க முடியாதுள்ளது என்றும் தன்னை யாரேனும் காப்பாற்றினால் அன்றி உயிர் தப்ப வேறு வழியில்லை என்றும்
தெரிவித்தாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதுவே அவர் இறுதியாக தொடர்பு
கொண்டு பேசியது என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை
- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது
- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி
- மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு
- SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா
- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்
- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது
- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்
- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்
















